search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரக திறனாய்வு தேர்வு எழுதிய மாணவிகளை படத்தில் காணலாம்.
    X
    ஊரக திறனாய்வு தேர்வு எழுதிய மாணவிகளை படத்தில் காணலாம்.

    ஊரக திறனாய்வு தேர்வு - 497 மாணவர்கள் எழுதினர்

    வேலூர் மாவட்டத்தில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வை 497 மாணவர்கள் எழுதினர். தேர்வு மையத்தை மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி பார்வையிட்டார்.
    வேலூர்:

    தமிழகத்தில் ஊரக பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெறும் வகையில் தகுதியை நிர்ணயிக்கும் வகையிலான திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் இந்தத் தேர்வை எழுத 536 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் தேர்வு எழுத காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொய்கை, சேர்க்காடு, கே.வி.குப்பம், கணியம்பாடி, அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 7 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. தேர்வு காலை 10 முதல் 12 மணி வரை நடந்தது.

    தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் காலை 9 மணி முதல் வரத் தொடங்கினர். சோதனைக்கு பின்னர் 9.30 மணி அளவில் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கைக்கெடிகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    அனைத்து மாணவ-மாணவிகளும் முகக்கவசம் அணிந்திருந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒரு அறையில் 10 பேர் அமர்ந்து தேர்வு எழுதினர். ஊரக திறனாய்வு தேர்வை 497 மாணவ-மாணவிகள் எழுதினர். 39 பேர் பங்கேற்கவில்லை.

    காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி பார்வையிட்டார். தேர்வு அறை மற்றும் மையங்களை கண்காணிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    Next Story
    ×