search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியை மாயம்"

    • உறவினர்கள் சாலை மறியல்
    • கண்டு பிடித்து தர வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது பட்டதாரிஆசிரியை. இவர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக பெற் றோரிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பள்ளியில் விசாரித்தபோது அங்கும் வரவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

    இதனை தொடர்ந்து நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக் காததால் ஆசிரியரின் தந்தை வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார்.

    அதன் போரில் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியையை யாரேனும் கடத்தி சென்றார்களாக என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆசிரி யை யின் உறவினர்கள், போலீசார் நடவடிக் க்கை எடுக்கவில்லை எனக்கூறி திடீரென நேற்று மாலை, வடக்கு காவல் நிலையம் முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. கார்த்திக், இன்ஸ்பெக்டர் விசுவநாதன் ஆகியோர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    அதனை தொடர்ந்து உறவினர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 27 வயது இளம்பெண். ஈச்சனாரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
    • போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    குனியமுத்தூர்,

    போத்தனூர் அருகே வெள்ளலூரை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் ஈச்சனாரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும், அவரை அவரது தந்தை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    பின்னர் வேலைக்கு சென்று இருக்கும் அவரது தாயை அழைத்து வருவதற்காக அவரது தந்தை சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது இளம்பெண் மாயமாகி இருந்தார்.

    எங்கு தேடியும் கிடைக்காததால் போத்தனூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.விசாரணையில், அவர் வேலை பார்க்கும் ஈச்சனாரி தனியார் பள்ளியில், பணியாற்றும் மற்றொரு ஆசிரியர் ஒருவர் சகோதரருடன் இவருக்கு பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதனால் அவருடன் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ×