search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய சாலை பாதுகாப்பு
    X
    தேசிய சாலை பாதுகாப்பு

    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - மத்திய மந்திரி பங்கேற்பு

    32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நேற்று நடந்தது
    வேலூர்:

    32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நேற்று நடந்தது. சென்னை மண்டல அலுவலர் பவன்குமார் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் (கிருஷ்ணகிரி) பகவத்சிங் முன்னிலை வகித்தார். எல்.அன்.டி இணை பொதுமேலாளர் துரைராஜ் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை இணை மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இதில், தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×