என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்போனில் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் வசதி- கலெக்டர் தகவல்
Byமாலை மலர்25 Jan 2021 5:23 AM GMT
வாக்காளர்கள் தங்கள் செல்போனில் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் வசதி புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25-ந்தேதியை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய வாக்காளர் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறையில் புதுமைகளை புகுத்தி வருகிறது.
அதன்படி இந்தாண்டு e-EPIC (இ-எபிக்) என்ற புதிய சேவையை வழங்க உள்ளது. அதன்படி வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையை அவருடைய செல்போனில் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தச் சேவையின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையை வேகமாக பதிவிறக்கம் செய்யலாம். வாக்காளர் அடையாள அட்டை அனைத்து இடத்திலும் செல்லத்தக்கதாகும். வாக்காளர் பதிவிறக்கம் செய்து எங்கு வேண்டுமானலும் அச்சிட்டுக் கொள்ளலாம். இ-எபிக் கியூ.ஆர்.கோடு மூலம் வாக்காளர் பெயர், வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாகம் எண் மற்றும் தேர்தல் தொடர்பான இதர தகவல்களை பெறலாம்.
https://nvsp.in/ மற்றும் https://voterportal.eci.gov.in/ ஆகிய இணையதள முகவரி மூலமும், voter Helpline என்ற செல்போன் செயலி மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்துள்ள வாக்காளர்கள் இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை செல்போனில் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து வாக்காளர்களும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25-ந்தேதியை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய வாக்காளர் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறையில் புதுமைகளை புகுத்தி வருகிறது.
அதன்படி இந்தாண்டு e-EPIC (இ-எபிக்) என்ற புதிய சேவையை வழங்க உள்ளது. அதன்படி வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையை அவருடைய செல்போனில் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தச் சேவையின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையை வேகமாக பதிவிறக்கம் செய்யலாம். வாக்காளர் அடையாள அட்டை அனைத்து இடத்திலும் செல்லத்தக்கதாகும். வாக்காளர் பதிவிறக்கம் செய்து எங்கு வேண்டுமானலும் அச்சிட்டுக் கொள்ளலாம். இ-எபிக் கியூ.ஆர்.கோடு மூலம் வாக்காளர் பெயர், வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாகம் எண் மற்றும் தேர்தல் தொடர்பான இதர தகவல்களை பெறலாம்.
https://nvsp.in/ மற்றும் https://voterportal.eci.gov.in/ ஆகிய இணையதள முகவரி மூலமும், voter Helpline என்ற செல்போன் செயலி மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்துள்ள வாக்காளர்கள் இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை செல்போனில் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து வாக்காளர்களும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X