என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
"வேல் எடுத்தால் சூரசம்ஹாரம் தான்" - துரைமுருகன் கருத்து
Byமாலை மலர்24 Jan 2021 1:26 PM GMT (Updated: 24 Jan 2021 1:26 PM GMT)
மு.க.ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முக ஸ்டாலினுக்கு, மாலை அணிவித்து வெள்ளி வேல் பரிசாக அளிக்கப்பட்டது. பரிசாக அளிக்கப்பட்ட வெள்ளி வேலுடன் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதுகுறித்து இன்று கோவையில் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்கமாட்டார். அதிமுகாவுக்குத்தான் வரம் தர போகிறார். கடவுளை இழிவாக பேசியவர்கள் கையில் கடவுளே வேலை கொடுத்த காட்சியை பார்க்கிறோம். திமுக தலைவர் முக ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் வரம் தரமாட்டார் என முதல்வர் விமர்சனம் செய்திருந்தார்.
இதுபோல பாஜக மாநில தலைவர் எல் முருகன் கூறுகையில், பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஸ்டாலின் வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஓட்டுக்காகத்தான் ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு காட்டுகிறார். என்னதான் இரட்டை வேடம் போட்டாலும் மக்கள் நம்பமாட்டார்கள் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வேலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மு.க.ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான். திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை. இப்போதாவது, தனித்துப் பிரசாரம் செய்வதாக முடிவெடுத்ததற்கு காங்கிரசுக்கு பாராட்டு என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X