என் மலர்tooltip icon

    வேலூர்

    வாலாஜா அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் கிராமம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 69). இவர் கடந்த 23-ந்தேதி வீட்டின் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மோதி அவர் பலத்த காயம் அடைந்தார்.

    அவரை குடும்பத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரோனாவுக்கு எதிராக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 21 கோடியே 65 லட்சத்து 9 ஆயிரத்து 916 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன.
    புதுடெல்லி:

    கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. வீடுகள்தோறும் தடுப்பூசி திட்டத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 131 கோடியே 62 லட்சத்து 3 ஆயிரத்து 540 தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது.

    கொரோனா வைரஸ்


    இவற்றில் பயன்படுத்தியது போக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 21 கோடியே 65 லட்சத்து 9 ஆயிரத்து 916 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன.

    இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    வேலூர் ஜெயில் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38). கடந்த மாதம் 7-ந்தேதி ஆரணி போலீசார் திருட்டு வழக்கில் அவரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்ந நிலையில் கடந்த 19-ந்தேதி லோகநாதனுக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    உடனடியாக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகநாதன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவில் நகர்ப்பகுதியில் சாலை விரிவாக்க பணி முடிந்து சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி திருச்சி-கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தற்போது வெள்ளகோவில் நகர்ப்பகுதியில் சாலை விரிவாக்க பணி முடிந்து சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளகோவில் நகர்ப்பகுதியில் அவ்வப்போது சிறுசிறு விபத்துகள் நடைபெற்று வருகிறது.

    உயிர் சேதமும் நடந்து வருகிறது.இந்த சாலை போக்குவரத்து அதிகம் உள்ள சாலை ஆகும். இந்த சாலை வழியாக தான் கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், திருப்பூர்,கோவை, ஊட்டி, கிழக்கு மார்க்கமாக கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலை ஆகும்.

    அதனால் நகர் பகுதியில் விபத்துகளை தவிர்க்க நகரின் இருபுற எல்லைகளில் சாலையின் குறுக்கே வேக தடுப்பான் (பேரி காடு)அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வாணியம்பாடியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி டொக்கு தெருவைச் சேர்ந்தவர் இஸ்மாயில் இவருடைய மகள் ஜாக்கியா (வயது 29).

    இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 5 நாட்களுக்கு பிறகு அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இறந்து போன பெண் மர்மமான முறையில் இறந்ததாக அவரது பெற்றோர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண் தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி மாணவர் முகமது நிப்ராஸ் சையான் (20) என்பவரை டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் திருமணம் நடக்க போவதாக வந்த தகவலால் பிரபல நடிகை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
    கடந்த சில நாட்களாக பாலிவுட்  திரையுலகில் பரபரப்பான செய்தியாக வலம் வந்து கொண்டிருப்பது அமீர்கான்-பாத்திமா சனா திருமண வதந்திதான். பாத்திமா சனா ஷேக் , அமீர்கான் நடித்து பெரிய ஹிட் ஆன தங்கல் படத்தில் அவரது மகளாக நடித்தவர். ஏற்கனவே அமீர்கானுக்கு இரண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவருக்கு விவாகரத்து ஆனது. தற்போது மூன்றாவதாக  பாத்திமா சனா  ஷேக்கை மணம் முடிக்க இருப்பதாகப் பேச்சு எழுந்து வருகிறது. 

    பாத்திமா சனா ஷேக்

    இந்நிலையில் நடிகை பாத்திமா சனா ஷேக் இது வெறும் வதந்திதான்  இது பற்றி என்னிடம் கேள்வி கேட்காமல் சிலர் தங்கள் விருப்பம்போல் எழுதுகிறார்கள். இதில் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்.
    வேலூர் மாவட்டத்தில் மொத்த சேத மதிப்பு தோராயமாக ரூ.199 கோடியை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    வேலூர்

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ள சேத பாதிப்புகளை மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

    மத்திய நிதியமைச்சக ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையில் மத்திய நீர்வள ஆதார முகமையின் இயக்குநர் தங்கமணி மற்றும் பவ்யா பாண்டே ஆகியோருடன் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு மின் ஆளுமை நிர்வாக இணை இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் மழை வெள்ள சேத பாதிப்புகள் குறித்து கூறப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். 9 கால்நடைகள், 14 ஆயிரத்து 800 கோழி குஞ்சுகள் உயிரிழந்துள்ளன. மழைக்கால நிவாரண முகாம்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். 627 வீடுகள் பகுதியாகவும், 72 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் மொத்தம் 2.32 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தொடர் மழையால் 101 ஏரிகளில் 83 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

    அதேபோல், மாவட்டம் முழுவதும் 68 இடங்களில் 101.08 கி.மீ சாலைகள் சேதமடைந்துள்ளன. 16 தரைப்பாலங்கள், சிறுபாலங்கள், 30 ஏரி, குளங்கள், ஊரணிகள் சேமதடைந்துள்ளன. 9 மேல்நிலை குடிநீர் தொட்டிகள், 38 ஆழ்துளை கிணறுகள், 16,457 மீட்டர் தொலைவுக்கு குடிநீர் குழாய்கள், 18 திறந்தவெளி கிணறுகள் சேதமடைந்துள்ளன.

    மாவட்டத்தில் நெற்பயிர்களுடன் தோட்டக்கலை பயிர்கள் என மொத்தம் 606.95 ஹெக்டேர் அளவுக்கு சேதமடைந்துள்ளன.பாதிப்பு கணக்கெடுக்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

    தொடர்ந்து நடந்து வருவதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். வேலூர் மாவட்டத்தில் மொத்த சேத மதிப்பு தோராயமாக ரூ.199 கோடியை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புகளால் வேளாண்மை துறையின் 2781 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. 2050 ஹெக்டேர் வேளாண்மை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 382 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது.

    வேளாண்துறை சேதங்களுக்கு ரூ.3.29 கோடி. தோட்டக்கலை துறைக்கு ரூ.52 லட்சம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறைக்கு ரூ.11.8 கோடி, நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5.4 கோடி. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.5.38 கோடி, ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.2.18 கோடி.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ரூ.1 கோடி. பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் மருத்துவ கட்டிடங்கள் ரூ.1 கோடியே 27 லட்சம், வருவாய்த்துறைக்கு ரூ.78 லட்சமும் என மொத்தமாக ரூ.29 கோடியே 44 லட்சம் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது என மத்திய குழுவிற்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

    தினமும் புறநோயாளிகள், உள்நோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவிகள் இருந்தாலும் டெக்னீசியன் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படாமல் உள்ளது. இதனால் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் தகுதியான டெக்னீசியன்கள் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

    அவ்வப்போது மருத்துவமனையில் செவிலியர் அல்லது ஆய்வக உதவியாளர் என எவரேனும் ஒருவர் சிறிது பயிற்சி எடுத்துக்கொண்டு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கும் நிலை காணப்படுகிறது. அவ்வகையில் உடுமலை அரசு மருத்துவமனையில் 2 டயாலிசிஸ் கருவிகள் இருந்தும் டெக்னீசியன் கிடையாது. 

    நாளுக்கு நாள் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால் டயாலிசிஸ் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனைத்து நோயாளிகளும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். எனவே டெக்னீசியன்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

    மருத்துவப்பணியாளர்கள் கூறுகையில்:

    இரு டயாலிசிஸ் கருவிகள் இருந்த போது ஒரு டெக்னீசியன் வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த இடமும் காலியாக உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு டயாலிசிஸ் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். 

    காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடத்தை நிரப்ப துறை ரீதியான உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் உடுமலை அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர்கள் நலன் கருதி நவீன சுகாதார வளாகம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

    இங்கு தினமும் புறநோயாளிகள், உள்நோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், நோயாளிகளின் உறவினர்கள் நலன் கருதி போதிய கழிப்பறை வசதி கிடையாது.

    இதனால் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகிறவர்களை காண வரும் உறவினர்கள் திறந்த வெளிப்பகுதிகளை கழிப்பறைகளாக பயன்படுத்துகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 

    இதனை தவிர்க்கும் வகையில் அரசு மருத்துவமனையில் நவீன சுகாதார வளாகம் அமைக்கும் வகையில் ‘நம்ம டாய்லெட்’ திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மருத்துவப் பணியாளர்கள் கூறுகையில், ‘போதுமான கழிப்பறை வசதிகள் கிடையாது. 

    இதுபோன்ற காரணத்தால் மருத்துவமனை வளாகத்தில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படுகிறது என்றனர்.
    வேலூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் மகாதேவன். இவருடைய மனைவி சவுந்தரி (வயது 45). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று சவுந்தரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காரைக்குடி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி செஞ்சை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் தெற்கு போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்து கஞ்சா வாங்கிக் கொண்டு வந்த சத்யா நகரைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 21) என்பவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவன் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியில் விற்றுக்கொண்டிருந்த சேகர் (வயது 64) என்பவரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
    வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கலெக்டர் அலுவலகம் எதிரில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் தி.மு.க அரசை கண்டித்து இளைஞரணி சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கலெக்டர் அலுவலகம் எதிரில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் தி.மு.க அரசை கண்டித்து இளைஞரணி சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட இளைஞர்ணி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

    இளைஞரணி மாநில துணை தலைவர் குமார் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாநில செயலாளர் கார்த்தியாயிணி, மாவட்ட தலைவர் தசரதன், மகளிர் அணி மாவட்ட தலைவி கிருஷ்ணகுமாரி இளைஞரணி செயலாளர்கள் ராஜேஷ், சரவணன், கனிமொழி திருமாறன், சத்திஷ், கிஷேர், சுகுணா, லஷ்மி, மாவட்ட துணை தலைவர்கள் ஜெகன், பொது செயலாளர்கள் பாஸ்கர், பாபு செயலாளர்கள் ஏழுமலை, மண்டல் தலைவர்கள் ஜெகன், ஓ.பி.சி. அணி செயலாளர் எஸ்.கே.மோகன் உள்பட சுமார் 200 பேர் கலந்துக்கொண்டனர்.
    வடகிழக்கு பருவமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து செவிலிமேடு பாலாற்றில் செல்பி எடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரத்துக்கு பெய்து வந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 340 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. பெரும்பாலான குளங்ளும் நிரம்பியுள்ளது.

    பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

    1903-ம் ஆண்டுக்கு பிறகு காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை பார்க்க 3-வது நாளாக நேற்றும் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகைதந்தனர். அவர்கள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தை பார்த்து மிகிழ்ந்தனர்.

    பெருக்கெடுத்து ஓடும் பாலாற்று தண்ணீர் கடலில் வீணாக கலப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
    ×