என் மலர்tooltip icon

    வேலூர்

    • வி.ஐ.டி.யில் மாணவர் பேரவை தொடக்கம்
    • தீயணைப்பு துறை டி.ஜி.பி. ஆபாஷ்குமார் பேச்சு

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி.பல்கலைக்கழகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் பேரவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றான இந்தியா, உலகளவில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்ததாக 5-வது இடத்தில் உள்ளது. நாட்டின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வருவாய் 3.7 டிரில்லியன் டாலராக உள்ளது. எனினும் தனிநபர் வருமானத்தில் இந்தியா 139-வது இடத்தில் உள்ளது. இங்கு, தனிநபர் வருமானம் சராசரியாக ஆண்டுக்கு 2,600 டாலராக உள்ளது.

    இதற்கு, பெரும்பாலான மக்களுக்கு தரமான கல்வி கிடைக்காததே காரணமாகும். நாடு பொரு ளாதாரத்தில் உயர வேண்டும் என்றால், அதற்கு கல்வியும் வளர் வேண்டும். அதற்கு அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.

    குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தரமக்களுக்கு கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும்" என்றார்.

    நிகழ்ச்சியில், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டி.ஜி.பி. ஆபாஷ்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    அவர் பேசியதாவது:-

    "நல்ல பழக்க வழக்கங்கள் தான் சிறந்த எதிர் காலத்தை உருவாக்கும். அத்தகைய நல்ல பழக்க வழக்கங்களை மாணவர்கள்கல்வி படிக்கும் காலத்திலேயே வளர்த்து கொள்ள வேண்டும்.

    அதற்காக எங்கும், யாரிடமும் வணக்கம், காலை மதிய வணக்கம், இரவு வணக்கம் எனக்கூறி பழக வேண்டும்.

    இதேபோல், எந்த நேரத்திலும் நன்றி கூறவும் தவறக்கூடாது. குறிப்பாக விடுதியில் சமையல் செய்யும் சமையலர், தூய்மையா ளர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி வெளியில் பஸ், ஆட்டோவில் போது பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு என எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க பழக வேண்டும்.

    அது உங்கள் மீதான நன்மதிப்பை உருவாக்கும்.

    அந்த வகையில், வணக்கமும், நன்றியும் நமது வாழ்க்கையின் அங்கமாக இருக்க வேண்டும். அதேபோல், தவறுகள் நேர்ந்துவிட்டால் மன்னிப்பும் கேட்டு பழக வேண்டும்.

    இதுபோன்ற நல்ல பழக்கங்களை கடைபி டிக்கும் போது அதுவே எதிர்காலத்தில் நல்ல பலனை உருவாக்கித்தரும்.

    மேலும், நாம் அனைவரும் இயற்கையை துணைத் சார்ந்தே வாழ்கிறோம். அதனால், இயற்கையை புரிந்து கொள்ளவும், அதனை பாதுகாக்கவும் வேண்டும். அதற்கு நாம் நமது சுற்றுசூழலை தூய்மையாக வைத்துக்கொள்ள பழக வேண்டும்.

    மனிதர்களில் ஒரு சிலர் தங்கள் நலனை மட்டுமே சிந்திக்கக் கூடியவர்கள், சிலர் தம்மையும், தன்னை சார்ந்தவர்களின் நலனை மட்டும் சிந்திப்பவர்கள், சிலர் மனித குலத்தின் நன்மையை பற்றி சிந்திப்பவர்கள் என 3 வகையாக உள்ளனர்.

    இதில் மாணவர்கள் மனிதகுல நலனை பற்றி சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதுவே வாழ்க்கையில் சிறந்த பலன்களை அளிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர் ஜி.வி.செல்வம், பதிவாளர் ஜெயபாரதி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
    • பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம் இன்று நடந்தது.கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

    ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியை சேர்ந்த 38 வயது பெண் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 15 வயதில் மகள் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கணவர் திடீரென இறந்து விட்டார். எனக்கு சிறிய வயதாக இருந்ததால் என்னுடைய தாய் மறுமணம் செய்து வைப்பதற்காக ஆன்லைனில் பதிவு செய்து இருந்தார்.

    திருப்பத்தூரை சேர்ந்த ஒருவர் தொடர்பு கொண்டு நான் காட்பாடியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறேன் என்று கூறி என்னை திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்தின் போது ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை பணம் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

    திருமணத்திற்கு பிறகு அவர் என்னை ஏமாற்றி 5-வது திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தேன்.

    என் மீது கால் புணர்ச்சி கொண்ட அவர் என்னுடைய போட்டோக்களை பேஸ்புக் இன்ஸ்டாகிராம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செல்போன் என்னை பதிவிட்டு நடத்தையை இழிவுபடுத்தி உள்ளார்.

    இதனால் பலர் என்னை தொடர்பு கொண்டு உல்லாசத்திற்கு அழைக்கின்றனர். போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறவேண்டும் என கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

    அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    வேலை வாங்கி தருவதாக மோசடி

    காட்பாடி அடுத்த கரிகிரியை, ஏழுமலை (வயது 29) அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது நண்பர் ஒரு நபரை அறிமுகப்படுத்தினார். கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தர முடியும் என்று கூறி ரூ.7 லட்சம் வாங்கி கொண்டார்.

    இப்போது வேலை பற்றி கேட்டபோது உனக்கு பணமும் கிடையாது. வேலையும் வாங்கிதர முடியாது என்று கொலை மிரட்டல் விடுகிறார். ஆகவே மோசடி செய்த அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    காட்பாடியைச் சேர்ந்த மகாலட்சுமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; காட்பாடியைச் சேர்ந்த பிரபல அரசியல் கட்சி நிர்வாகி நான் நடத்தி வந்த சீட்டில் உறுப்பினராக சேர்ந்து அவ்வப்போது என்னிடம் பணம் பெற்றார்.

    நான் நடத்திய சீட்டில் சுமார் ரூ.4,28 லட்சம் பணமும் ,என்னுடைய 30 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ.6 லட்சம் ரூபாயும்,எனது உறவினரிடமிருந்து ரூ.13 லட்சமும் வாங்கிக் கொடுத்துள்ளேன்.

    தற்போது பணத்தை கேட்டால் தர மறுக்கிறார்.மேலும் என்னை மிரட்டுகிறார். என்னுடைய பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3 நாட்களுக்கு வழங்கப்பட்டது
    • தீபாவளி பண்டிகையொட்டி நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில், தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1.500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் ஆயுள் தண்டனை பெற்று 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள், நன்னடத்தை அடிப்படை யில் சிறையில் பல பணிகளில் ஈடுபடுத்தப்ப டுகின்றனர்.

    பரோல் அனுமதி குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தண்டனை கைதிகள் தீபாவளி பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், பரோல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டி கைக்கு பரோலில் செல்ல அனுமதி கோரி, 40 கைதிகள் மனு அளித்தனர்.

    இதில், முதல்கட்டமாக 13 கைதிகளுக்கு 3 நாட்களுக்கு பரோல் வழங்க சிறைத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

    கைதிகள் விரும்பும் நாட்களில் அந்த விடுமுறை அளிக்க பரிசீலனை செய்யப்படும். மேலும் மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கலெக்டர், நந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
    • கர்ப்பிணிகளை டோலிகட்டி தூக்கி செல்லும் அவலம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தெள்ளை மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இது மலை கிராமம் என்பதால் முறையான சாலை வசதிகள் ஏதும் இல்லை. இதனால் அவசர சிகிச்சைக்கு பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

    பிரசவ காலத்தில் பெண்களும் அவ்வாறே நடந்து சென்று வருவதா கவும், முடியாத நேரத்தில் டோலி கட்டி மருத்துவ மனைக்கு தூக்கி செல்வ தாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இந்த ஊரை சேர்ந்தவர்கள் மருத்துவ மனை உள்ளிட்ட வெளியி டங்களில் இறந்துவிட்டால் அவரது உடலை கூட டோலி கட்டிதான் மலைகி ராமத்திற்கு சுமந்து செல்கின்றனர். பிரசவத்திற்காக டோலி கட்டி அழைத்துச் செல்லும்போது உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது. கிராமத்திற்கு செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாததால் கிராமத்திற்கு வாகனம் செல்ல முடியாத சூழல் உள்ளது.

    துத்திக்காடு கிராமத்தில் இருந்து தெள்ளை மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் 10 இடத்தில் கானாறுகள் செல்கிறது.

    ரேசன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு கிராம மக்கள் தலைமீது சுமந்தபடியே ஆற்றை கடந்து மலை பகுதிக்கு நடைபயணமாக செல்கின்றனர்.

    தொடர் மழையின் காரணமாக தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால், மலை கிராம மக்கள் மிகவும் சிரமத்துடன் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

    சுமார் 7 கிலோமிட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்துள்ளது. கிராமத்திற்கு செல்லும் சாலையில் தெரு விளக்குகள் கூட இல்லை. இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி செல்கின்றனர்.

    இந்த நிலையில் துத்திக்காடு முதல் தெள்ளை மலை கிராமம் வரை சாலை அமைத்துக்கொள்ள வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தெள்ளை மலை கிராமம் வரை ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து சாலை இன்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, சப்- கலெக்டர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பாபு வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. மாவட்ட வன அலுவலர் கலாநிதி, நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

    இதில் பென்னாத்தூர் பேரூராட்சி செயலாளர் அருள்நாதன், பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார், தாசில்தார் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புகார் கொடுத்தால் போலீசார் வாங்க மறுப்பதாக ஆதங்கம்
    • இறைச்சிக்காக திருடிச்சென்றனர்

    வேலூர்:

    பேரணாம்பட்டு டவுன் திரு.வி.க நகரை சேர்ந்தவர் சரவணன், சவுக் ரோடு பகு தியைச் சேர்ந்தவர் அருண். இவர்கள் 2 பேரும் சலவைத் தொழிலாளிகள்.

    இவர்கள் மொத்தம் 6 கழுதைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கழுதைகளை வீட்டின் முன்பு கயிற்றால் கட்டி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் திடீரென 6 கழுதைகளும் காணாமல் போனது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். மர்ம நபர்கள் கழுதைகளை இறைச்சிக்காக திருடிச்சென்றுள்ளனர்.

    ஆந்திர மாநிலம் சீராலா, குண்டூர், பாபட்லா பகுதிகளில் ஆஸ்துமா, முதுகு வலி, வலிமைக்காக கழுதை இறைச்சியானது கிலோ ரூ.ஆயிரத்துக்கும், கழுதை நெய் 250 மில்லி ரூ.500-க்கும் அமோகமாக விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

    இதனால் கழுதைகளை மர்ம நபர்கள் திருடி வேன்மூலம் கடத்திச்சென்று ஆந்திர பகுதிகளில் நல்ல விலைக்கு விற்பனை செய்து விடுகின்றனராம்.

    இதுகுறித்து கழுதைகளின் உரிமையா ளர்கள் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது போலீசார் புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.

    ஏற்கனவே ஒருமுறை வேன் கொண்டு வந்து கழுதைகள் திருடப்ப ட்டுள்ளது. புகார் கொடுத்தால் போலீசார் வாங்க மறுக்கின்றனர் என சலவை தொழிலாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • கேமரா காட்சிகள் கண்காணிக்கப்பட்டது

    வேலூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு. வாரியத்தின் மூலம், சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவ தற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் மாநிலம் முழுவதும் நடந்தது.

    இதில் ஆயுதப்படை, தாலுகா மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைகளில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உள்பட மொத்தம் 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் இந்த போட்டித்தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தற்போது காவல்துறை பணியில் உள்ளவர்களும் இப்போட்டித் தேர்வில் 20 சதவீத பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்வில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு உடற்தகுதி தேர்வு நேற்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

    இதில் மொத்தம் 513 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் முதல் நாளான நேற்று 453 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உயரம், மார்பளவு, 1500 மீ ஓட்டமும் நடந்தது. இந்த முதற்கட்ட உடற் தகுதி தேர்வில் 359 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    2-வது நாளான இன்று காலை 6 மணி அளவில் தீவிர பரிசோதனைக்கு பிறகு தேர்வர்களை உள்ளே அனுமதித்தனர். முதல் நாளான நேற்று தேர்ச்சி பெற்ற பொது பிரிவை சேர்ந்த 204 பேருக்கு 2-ம் கட்டமாக கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், 100 மீ, 400 மீ ஓட்டம் உள்ளிட்டவை நடந்தது.

    வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் எஸ்.பி. மணிவண்ணன் மேற்பார்வையில் ஏ.டி.எஸ். பி.கள், டி.எஸ்.பி.கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் அமைச்சுப்பணி யாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வேலூர் தேர்வு மையத்தின் கண்காணிப்பு அலுவலராக அதிரடி படை ஐ.ஜி.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தேர்வு நடைபெறும் அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ப்பட்டு கண்கா ணிக்கப்பட்டது.

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • அணைக்கட்டு தாலுகாவில் குறைதீர்வு கூட்டம் நடந்தது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார்.

    துணை தாசில்தார்கள் குமார், திருக்குமரேசன், பிடிஒக்கள் சுதாகரன் , சத்தியமூர்த்தி, சார்பதிவாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:-

    அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா கூடுதல் விலைக்கு விற்கப்படும் தனியார் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிலவேம்பு மரம் வைக்கப்பட வேண்டும்.

    கார்த்திகை பட்டத்தில் விவசாயம் செய்ய கால சூழ்நிலைகளுக்கு ஏதுவான நெல்மணி விதைகளை மட்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    மத்திய அரசு திட்டத்தில் வழங்கப்படும் மாட்டு கொட்டகை ஆட்டு கொட்டகை கட்சி பாகுபாடின்றி தகுதி உள்ள விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளை பட்டியலிட்டு அடுத்த மாதம் நடைபெறும் குறைதீர்வு கூட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    விவசாயிகளின் நலன் கருதி மாதத்திற்க்கு 10 நாட்கள் 100 நாட்கள் வேலையாட்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும், கொய்யா விவசாயி களுக்கு மானியத்தில் உரங்களை வழங்க வேண்டும், காய்கறிகளை ஏற்றுமதி செய்ய பயிற்சி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள்.

    இதில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 15 நாட்களாக அழைக்களிக்கப்படுவதாக ஒரு விவசாயி கூறுகையில் உடனடியாக அதனை தாசில்தார் வேண்டா, பி டி ஓ சுதாகரன் வழங்கினர்.

    இறுதியாக தாசில்தார் வேண்டா பேசுகையில்:-

    கூட்டத்தில் வைக்க ப்பட்ட கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காணப்படும் என்றனர். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • 4 நாட்களாக காத்திருந்ததால் ஆத்திரம்
    • போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் அரசு சார்பில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனை நடத்தினர்.

    அப்போது மணல் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 15 நாட்களாக அரசு அனுமதி பெற்ற வாகனத்திற்கு மட்டும் மணல் வழங்கப்பட்டு வந்தது.

    2-ந்தேதி மணல் வழங்க ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட லாரிகள் தற்போது வரை காத்துக் கொண்டி ருக்கின்றனர்.

    கடந்த 4 நாட்களாக காத்திருந்த லாரி டிரைவர்கள் ஆத்திரமடைந்து இன்று மணல் வழங்க வேண்டும் எனக்கூறி பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் லாரிகளுக்கு மட்டும் முதலாவதாக மணல் வழங்கு வதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் அடுத்த அடுக்கம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட அ.கட்டுபடி கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. பராமரிப்பின்றி பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது.

    இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கிராமத்திற்கு வரவேண்டிய பஸ்சும் சரிவாக வருவதில்லை.

    இதனால் பள்ளி மாணவர்கள், நோயாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ்கள் முலம் மற்ற இடத்திற்கு செல்கின்றனர். தற்போது தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டுள்ளது.

    இதில் அ.கட்டுப்படி கிரா மத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய், ஏரிக்கு செல்ல வழி இல்லாமல் பாதியில் நிற்கிறது. மேலும் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    கால்வாய் முடியும் இடத்தில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் சாலையில் கழிவு நீர் குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடியே கடந்து செல்கின்றனர்.

    தற்போது கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் கழிவுநீருடன் கலந்த மழை நீர் ஆதிகளவில் சாலையில் தேங்கி நிற்கிறது.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வயதான முதியோர் மற்றும் மாணவர்கள் கழிவு நீர் தேங்கிய இடத்தில் விழுந்து காயங்களுடன் செல்வது தொடர்கதையாக உள்ளது.

    எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் முழுமையாக சீரமைப்பதோடு, கழிவுநீர் தேங்காமல் கடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தீபாவளியொட்டி களைகட்டியது
    • பொய்கை சந்தையில் மாடுகள் விற்பனை படுஜோர்

    அணைக்கட்டு:

    வேலூர் அருகே உள்ள பொய்கை கிராமத்தில் செயல்படும் வாரச்சந்தை யில் மாடுகள் விற்பனைக்கு மிகவும் பிரபலமானது.

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் இந்த சந்தையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சித்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணா மலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் மாடுகளை விற்கவும், வாங்கவும் விவசாயிகளும் வியாபா ரிகளும் வருகின்றனர்.

    இங்கு மாடுகள் மட்டுமின்றி கோழி, புறா, சேவல் விற்பனையும் காய்கறி, மாடுகளுக்கான கயிறுகள் உள்ளிட்டவை விற்பனையும் அதிகமாக நடக்கும்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொய்கை மாட்டு சந்தையில், மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. வரத்து அதிகரிப்பால் சந்தை வளாகம் நிரம்பி வழிந்தது. வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.

    காலை முதலே வியாபாரம் களைகட்டியது. வழக்கத்தை விட இன்று மாடுகள் விலை மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி கடேரி பசுக்கள் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரத்துக்கும், சினை பசுக்கள் ரூ.1 லட்சத்திற்கும், உழவு மாடுகள் ஒரு ஜோடி ரூ.1 லட்சத்திற்கும், காளை கன்றுகள் ரூ.30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் கோழிகள் மற்றும் புறாக்கள் விற்பனையும் படுஜோராக நடந்தது. விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை அதிகளவில் வாங்கிச்சென்றனர்.

    கே.வி. குப்பம் சந்தையில் இன்று காலை ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.தீபாவளி பண்டிகையை யொட்டி வெள்ளாடுகள் அதிக அளவில் கொண்டு வரப்ப ட்டிருந்தன. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.இன்று ஒரே நாளில் ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.

    • மேய்ச்சலுக்காக கட்டி வைத்தபோது விபரீதம்
    • தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனக்கு சொந்தமாக பசு மற்றும் கன்றுகுட்டியை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று அவரது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக மாடுகளை கட்டி வைத்தார்.

    திடீரென கன்று மாயமானது. பின்னர் அருகே இருந்த 70 அடி ஆழமுடைய கிணற்றில் சத்தம் வந்தது. அருகில் சென்று பார்த்த போது கன்று நீரில் தத்தளித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உடனடியாக அருகே இருந்த ஒடுகத்தூர் தீயணப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    விரைந்து வந்த சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி, கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது

    வேலூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம், சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவ தற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் மாநிலம் முழுவதும் நடந்தது.

    இதில் தாலுகா ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைகளில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உள்பட மொத்தம் 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் இந்த போட்டித்தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தற்போது காவல்துறை பணியில் உள்ளவர்களும் இப்போட்டித் தேர்வில் 20 சதவீத பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ங்களில் தேர்வில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு உடற்தகுதி தேர்வு இன்று காலை வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. அதிகாலை முதலே தேர்வாளர்கள் நீண்ட வரிசையில் கத்திருந்தனர்.

    காலை 6 மணியளவில் அவர்களை தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர். இதில் மொத்தம் 513 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    முதல் நாளான இன்று உயரம், மர்பளவு, 1500 ஓட்டமும் நடந்தது. இந்த உடற்தகுதி தேர்வை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி. மணிவண்னண் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் வெற்றி பெற்றவர்க ளுக்கு நாளை கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், 100, 400 மீட்டர் ஓட்டம் நடந்தது. இந்த தேர்வை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் எஸ்.பி. மணிவண்ணன் மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி.கள், டி.எஸ்.பி.கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் அமைச்சுப்பணி யாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    மேலும் வேலூர் தேர்வு மையத்தின் கண்காணிப்பு அலுவலராக அதிரடி படை ஐ.ஜி.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தேர்வு நடைபெறும் அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ப்பட்டு கண்கா ணிக்கப்பட்டது.

    ×