search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் பரபரப்பு தர்காவில் கொள்ளை முயற்சி
    X

    கொள்ளை முயற்சி நடந்த தர்கா.

    வேலூரில் பரபரப்பு தர்காவில் கொள்ளை முயற்சி

    • கேமராக்கள்- கார் கண்ணாடிகள் உடைப்பு
    • உண்டியலை உடைக்க முடியவில்லை

    வேலூர்:

    வேலூர் அண்ணா சாலையில் மகளிர் போலீஸ் நிலையம் எதிரே புகழ்பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் உடல் நலம் சரியில்லாத குழந்தைகளுக்கு பரிகாரம் செய்தல் கயிறு கட்டுதல் உள்ளிட்டவை செய்யப்படுகின்றன.

    தினமும் இரவு 9.30 மணிக்கு தர்கா மூடப்படுகிறது. இங்கு பணி செய்யும் 2 பேர் தினமும் தர்காவில் தங்குகின்றனர். அவர்கள் இருவரும் ஊருக்கு சென்று விட்டதால் நேற்று தர்காவில் யாரும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று இரவு தர்காவிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தர்காவிற்கு வெளியே பொருத்தப்ப ட்டிருந்த 4 கண்காணிப்பு கேமரா வாசலில் பொருத்தப்ப ட்டிருந்த ஒரு கேமராவை உடைத்தனர். அவற்றை புதரில் தூக்கி வீசினர். அருகில் உள்ள முற்பதில் வீசி உள்ளனர். பின்னர் தர்காவிற்குள் உள்ள உண்டியல்களை உடைக்க முயற்சி செய்தனர். உண்டியலை உடைக்க முடியவில்லை.

    ஆத்திரத்தில் தர்கா வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி மற்றும் மின் விளக்குகளை உடைத்து விட்டு சென்று விட்டனர்.

    இன்று காலை வழக்கம் போல் தர்காவை திறக்க வந்த நிர்வாகிகள் கேமரா க்கள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையம் எதிரிலேயே உள்ள தர்காவில் கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×