search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பரிசு தருவதாக மூதாட்டியிடம் ரூ.6 ஆயிரம் பறிப்பு
    X

    தீபாவளி பரிசு தருவதாக மூதாட்டியிடம் ரூ.6 ஆயிரம் பறிப்பு

    • 2 பெண்கள் தப்பி ஓட்டம்
    • ஆட்டோவில் ஏறி பேச்சு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டம்மாள் (வயது 60). இவர் மருந்து வாங்க அணைக்கட்டு பகுதிக்கு ஆட்டோவில் வந்தார்.

    அப்போது இடையில் 2 பெண்கள் ஆட்டோவில் ஏறி மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

    அணைக்கட்டு பகுதியில் ஆட்டோவில் இருந்து இறங்கியதும் 2 பெண்கள் சேட்டம்மாளிடம் குறைந்த பணத்தில் அதிக தீபாவளி பரிசுப் பொருட்கள் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறினர். இதற்கு சேட்டம்மாள் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு கில்லாடி பெண்களோ காது, மூக்கில் உள்ள நகையை அடமானம் வைத்து கொடு என்று கூறியுள்ளனர்.

    இதையடுத்து சேட்டம்மாள் அணைக்கட்டு பகுதியில் உள்ள அடகு கடையில் தனது நகையை கழற்றி அடமானம் வைத்தார். அதில் வந்த ரூ.6 ஆயிரத்தை சேட்டம்மாள் தீபாவளி பரிசு பொருட்கள் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறிய பெண்களிடம் கொடுத்தார்.

    தீபாவளி பரிசு பொருட்களை எடுத்து வருவதாகவும், அதுவரை பஸ் நிலையத்தில் இருக்கும்படி சொல்லி விட்டு அங்கிருந்து மாயமாகி விட்டனர்.

    தீபாவளி பரிசு பொருட்கள் எடுத்து வருவார்கள் என்று நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் சேட்டம்மாள் காத்திருந்தார். ஆனால் பலே கில்லாடி பெண்கள் வரவில்லை.

    தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சேட்டம்மாள் இது குறித்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×