search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் புதிதாக 14,384 பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை
    X

    வேலூர் மாவட்டத்தில் புதிதாக 14,384 பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை

    • பற்று அட்டைகள் விணியோகம்
    • கலெக்டர் வழங்கினார்

    குடியாத்தம்:

    தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தி ல் முதற்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயன்பெற்றனர்.

    இதில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 79 ஆயிரத்து 443 பெண் களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

    அதே சமயம், இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிலுவையில் வைக்கப்பட்டிருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதில், தேர்வு செய்யப்பட்ட 7.35 லட்சம் புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறு வதற்கான பற்று அட்டைகள் (டெபிட் கார்டுகள்) வழங்குவதை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

    இதன் தொடர்ச்சியாக, மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சி களில் பயனாளி களிடம் பற்று அட்டைகள் வழங்கப் பட்டன.

    அதன்படி, வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெறு வதற்கான அட்டைகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

    வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 14 ஆயிரத்து 384 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், அமலு விஜயன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாவட்ட வருவாய் அலு வலர் மாலதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, நகராட்சி மன்றத் தலைவர்கள் சவுந்தர ராஜன் (குடியாத்தம்), பிரேமா (பேரணாம்பட்டு), ஒன்றிய குழு தலைவர்கள் சத்யானந்தன், பாஸ்கரன், சித்ரா ஜனார்த் தனன், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×