என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மண்டலத்தில் 135 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    வேலூர் மண்டலத்தில் 135 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • தீபாவளி பண்டிகையொட்டி ஏற்பாடு
    • பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க நடவடிக்கை

    வேலூர்:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.

    இதனை கொண்டாட வெளியூரை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று மாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 135 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை பூந்தமல்லியில் இருந்து ஒசூருக்கு 10 பஸ்கள், பூந்தமல்லியில் விருந்து வேலூருக்கு 50, திருப்பத்தூருக்கு 30, ஆற்காட்டிற்கு 20, குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டுக்கு 10 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மேலும் வேலூரில் இருந்து திருச்சிக்கு 5 மற்றும் பெங்களூருக்கு 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    நேற்று முன்தினம் இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வெள்ளிக்கி ழமையான நேற்று முதலே ஏராள மானோர் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    தொடர்ந்து இன்றும் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து பொதுமக்கள் திரும்பி செல்ல ஏதுவாக வரும் 13-ந் தேதி திங்கள் கிழமை மதியம் முதல் 14 மற்றும் 15-ந் தேதி வரை வேலூரில் இருந்து சென்னை, தாம்பரம், திருச்சி, ஒசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு வழக்கமாக செல்லும் பஸ்கள் மட்டுமின்றி கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×