என் மலர்
வேலூர்
- பற்று அட்டைகள் விணியோகம்
- கலெக்டர் வழங்கினார்
குடியாத்தம்:
தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தி ல் முதற்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயன்பெற்றனர்.
இதில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 79 ஆயிரத்து 443 பெண் களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
அதே சமயம், இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிலுவையில் வைக்கப்பட்டிருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதில், தேர்வு செய்யப்பட்ட 7.35 லட்சம் புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறு வதற்கான பற்று அட்டைகள் (டெபிட் கார்டுகள்) வழங்குவதை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சி களில் பயனாளி களிடம் பற்று அட்டைகள் வழங்கப் பட்டன.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெறு வதற்கான அட்டைகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.
வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 14 ஆயிரத்து 384 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், அமலு விஜயன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாவட்ட வருவாய் அலு வலர் மாலதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, நகராட்சி மன்றத் தலைவர்கள் சவுந்தர ராஜன் (குடியாத்தம்), பிரேமா (பேரணாம்பட்டு), ஒன்றிய குழு தலைவர்கள் சத்யானந்தன், பாஸ்கரன், சித்ரா ஜனார்த் தனன், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- கேமராக்கள்- கார் கண்ணாடிகள் உடைப்பு
- உண்டியலை உடைக்க முடியவில்லை
வேலூர்:
வேலூர் அண்ணா சாலையில் மகளிர் போலீஸ் நிலையம் எதிரே புகழ்பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் உடல் நலம் சரியில்லாத குழந்தைகளுக்கு பரிகாரம் செய்தல் கயிறு கட்டுதல் உள்ளிட்டவை செய்யப்படுகின்றன.
தினமும் இரவு 9.30 மணிக்கு தர்கா மூடப்படுகிறது. இங்கு பணி செய்யும் 2 பேர் தினமும் தர்காவில் தங்குகின்றனர். அவர்கள் இருவரும் ஊருக்கு சென்று விட்டதால் நேற்று தர்காவில் யாரும் இல்லை.
இந்த நிலையில் நேற்று இரவு தர்காவிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தர்காவிற்கு வெளியே பொருத்தப்ப ட்டிருந்த 4 கண்காணிப்பு கேமரா வாசலில் பொருத்தப்ப ட்டிருந்த ஒரு கேமராவை உடைத்தனர். அவற்றை புதரில் தூக்கி வீசினர். அருகில் உள்ள முற்பதில் வீசி உள்ளனர். பின்னர் தர்காவிற்குள் உள்ள உண்டியல்களை உடைக்க முயற்சி செய்தனர். உண்டியலை உடைக்க முடியவில்லை.
ஆத்திரத்தில் தர்கா வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி மற்றும் மின் விளக்குகளை உடைத்து விட்டு சென்று விட்டனர்.
இன்று காலை வழக்கம் போல் தர்காவை திறக்க வந்த நிர்வாகிகள் கேமரா க்கள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையம் எதிரிலேயே உள்ள தர்காவில் கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கே.வி.குப்பத்தில் நாளை நடக்கிறது
- விழா காலங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்
வேலூர்:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் கிராமத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று ஆட்டு சந்தை நடைபெறுகிறது.
இங்கு காட்பாடி, குடியாத்தம், வேலூர், அணைக்கட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்த ஆட்டுச் சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ் உள்ளிட்ட விழா காலங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை 11-ந் தேதி சனிக்கிழமை சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடக்கும் சிறப்பு சந்தையில் ஆடுகளின் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2 பெண்கள் தப்பி ஓட்டம்
- ஆட்டோவில் ஏறி பேச்சு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டம்மாள் (வயது 60). இவர் மருந்து வாங்க அணைக்கட்டு பகுதிக்கு ஆட்டோவில் வந்தார்.
அப்போது இடையில் 2 பெண்கள் ஆட்டோவில் ஏறி மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
அணைக்கட்டு பகுதியில் ஆட்டோவில் இருந்து இறங்கியதும் 2 பெண்கள் சேட்டம்மாளிடம் குறைந்த பணத்தில் அதிக தீபாவளி பரிசுப் பொருட்கள் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறினர். இதற்கு சேட்டம்மாள் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு கில்லாடி பெண்களோ காது, மூக்கில் உள்ள நகையை அடமானம் வைத்து கொடு என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து சேட்டம்மாள் அணைக்கட்டு பகுதியில் உள்ள அடகு கடையில் தனது நகையை கழற்றி அடமானம் வைத்தார். அதில் வந்த ரூ.6 ஆயிரத்தை சேட்டம்மாள் தீபாவளி பரிசு பொருட்கள் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறிய பெண்களிடம் கொடுத்தார்.
தீபாவளி பரிசு பொருட்களை எடுத்து வருவதாகவும், அதுவரை பஸ் நிலையத்தில் இருக்கும்படி சொல்லி விட்டு அங்கிருந்து மாயமாகி விட்டனர்.
தீபாவளி பரிசு பொருட்கள் எடுத்து வருவார்கள் என்று நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் சேட்டம்மாள் காத்திருந்தார். ஆனால் பலே கில்லாடி பெண்கள் வரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சேட்டம்மாள் இது குறித்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு மற்றும் போலீசார், பொய்கை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பொய்கை சமத்துவபுரம் சமுதாயக்கூடம் அருகில், சந்தேகம்படும்படி 2 பைக்குகளில் 6 பேர் சுற்றித்திரிந்தனர்.
போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் ஜீப்பில் துரத்திச்சென்று ஒரு பைக்கை மடக்கி, 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய் இம்மானுவேல் என்கிற வெள்ளை விஜய் ( வயது 23) மற்றும் சென்னை நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்கிற போண்டா சதீஷ் (20) என்பது தெரிய வந்தது.
மேலும், தீபாவளி செலவுக்காக வேலூர் பகுதியில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு குழுவாக அவர்கள் சுற்றித் திரிந்ததும், அவர்கள் ஓட்டி வந்த பைக், வில்லிவாக்கம் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு திருடியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து பைக், 2 கத்தி, இரும்பு கம்பிகள், கயிறு மற்றும் மிளகாய் பொடி டப்பா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.
- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
- ரூ.150 கோடியில் 7 மாடி கட்டிட பணிகள்
வேலூர்:
வேலூர் பெண்ட்லேன்ட் மருத்துவமனை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த கட்டிடப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், தேவராஜ், வில்வநாதன், மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷ்னர் ஜானகி ரவீந்திரன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.
அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தை எனது சொந்த மாவட்டமாக கருதுகிறேன்.
இங்குள்ள பெண்ட்லேன்ட் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என அப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த கார்த்திகேயன் கோரிக்கை வைத்தார்.
இதை எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய தமிழக முதல் அமைச்சர் மு. க.ஸ்டாலினும் வலியுறுத்தினார். ஆனால் பணிகள் நடைபெறவில்லை தொடர்ந்து ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது ரூ.150 கோடியில் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. பணிகள் விரைந்து முடிக்க 3 பகுதிகளாக பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது இங்கு தரைத்தளம் தவிர்த்து 7 மாடி கட்டிடம் உருவாகிறது.
18 மாதத்திற்குள் பணியை முடிக்க தெரிவித்துள்ளோம். இப்பணிகள் 3-3 2025 க்குள்முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.மேலும் இங்கு ஆய்வு கூடம் ஒன்று அமைக்க உத்தரவிட்டேன்.அதன் மூலம் மணல், தண்ணீர், கம்பிகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும்.இங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்துள்ளேன். பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.
முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளன.
வேலூர்-விரிஞ்சிபுரம் பாலாற்றில் மேம்பாலம் கட்டுவதற்கான திட்டங்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது திட்டம் மதிப்பீடு பணிகள் முழுமை பெற்ற பின்னர் தொடர்ந்து முதல் அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் தமிழகத்தில் உள்ள ரெயில்வே கிராசிங் பகுதிகளில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல இடங்களில் நிலம் கையகப்படுத்துவதில் 10 ஆண்டுகளாக காலதாமதம் ஏற்பட்டு வந்தது. அது குறித்து ஆய்வு செய்து பணிகள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கையகப்படுத்தும் பணிகள் விரைந்து முடிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
- டிரைவர், கண்டக்டரை உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு
- போலீசில் புகார்
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பத்தில் இருந்து குடி யாத்தம் நோக்கி நேற்று முன் தினம் மாலை அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதனால், உள்ளே மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடம்விட்டு, படியில் நின்றபடி மாணவர்கள் வந்தனர். அவர்களை டிரைவர் திருநாவுக்கரசு, கண் டக்டர் கோட்டீஸ்வரன் ஆகியோர் பலமுறை எச்சரிக்கை செய்தனர். அவர்கள் தொடர்ந்து படிக்கட்டிலேயே பயணம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து பஸ்சை நிறுத்திவிட்டு இறங்கி வந்த கண்டக்டர், மாணவர்களை கீழே இறங்கும்படி கூறி வாக்குவாதம் செய்தார். அதற்கு மறுத்த ஒரு மாணவரை கண் டக்டர் கன்னத்தில் அடித்த தாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அந்த மாணவர் கீழ் ஆலத்தூரில் இறங்கினார். அவர் தாக்கப்பட்ட தகவல் அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள் பஸ்நிறுத்தத்திற்கு விரைந்து பஸ் குடியாத்தம் சென்று திரும்பி வரும் வரை காத்திருந்தனர்.
பஸ் வந்ததும் பஸ்சை நிறுத்தி கண்டக்டரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த டிரைவரும் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கே.வி.குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டை ரோஷன் சுபேதார் தெருவை சேர்ந்தவர் இம்ரானா (வயது 15). இவர் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் சிறுமிக்கு கடந்த 10 நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். அவரது பெற்றோர் மகளிடம் விசாரித்த போது நாளை பள்ளிக்கு செல்வதாக தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்று வேலை முடிந்து மாலை வீடு திரும்பினர்.
அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் இம்ரானா தூக்கில் தொங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்
- தீயணைப்பு படை வீரர்கள் செயல் விளக்கம்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது.
ஒடுகத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் செயல் விளக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தீ விபத்துகளை தவிர்க்கும் முறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்
- மின் கசிவால் ஏற்பட்டது
வேலூர்:
காட்பாடி பர்னீஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் லப்பின் ஜோனகன். இவரது வீட்டில் நேற்று காலை ஏ.சி. ஓடிக்கொண்டிருந் தது. அப்போது திடீரென அதில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பற்றி அருகே வைக்கப்படிருந்த புத்தகங்கள் மீது பிடித்து எரிந்துள்ளது.
இதை பார்த்து ஜோனகன் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஏ.சி. சுவிட்சை அணைத்தனர்.
இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பால்பாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
- அச்சத்தில் உறைந்த பயணிகள்
- விதிமுறைகளை மீறும் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
அணைக்கட்டு:
வேலூர் ஒடுகத்தூர் இடையே அணைக்கட்டு வழித்தடத்தில் அதிகளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தனியார் பஸ்களும் அடங்கும்.
அச்சத்தில் உறைந்த பயணிகள்
இந்த நிலையில் நேற்று ஒடுகத்தூரில் இருந்து வேலூர் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டி ருந்தது. அப்போது அந்த பஸ் டிரைவர் நீண்ட தூரம் செல்போன் பேசியபடியே பஸ்சை ஓட்டிச் சென்றார். சாகசம் செய்வதை போலஒரே கையால் ஸ்டேரிங்கை பிடித்தும், அதே கையால் ஹாரனையும் அடித்தபடி ஓட்டினார்.
சில சமயம் ஸ்டேரிங்கை விட்டுவிட்டு அவர் செய்த ரகளை, பஸ்சில் இருந்த பயணிகளை அச்சத்தில் உறைய செய்தது. இதுகுறித்து பயணிகள் டிரைவரிடம் சென்று கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
பொதுமக்களை அச்சுறுத்தும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து துறை அதிகாரிகள் இதனை கண்காணித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறும் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- சென்னை மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்
- தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது
வேலூர்:
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் இரண்டு அறைகளை சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து உள்ளனர்.
ஜலகண்டேஸ்வரர் கோவில் பயன்படுத்தப்படும் அறைகள் சேதம் அடைந்து வருவதாகவும் அதனை பராமரிப்பு செய்ய வேண்டி உள்ளதால் அறைகளை காலி செய்ய தொல்லியல் துறை உதவி பராமரிப்பு அலுவலர் அகல்யா உத்தரவிட்டார்.
இதனால் ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து இன்று ஜலகண்டேஸ்வரர் கோவில் முழுவதும் ஆய்வு செய்தார்.
அப்போது ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் பயன்படுத்தும் அறைகளை 3 நாட்களில் காலி செய்து தர வேண்டும். உணவு உண்பதற்காக பயன்படுத்தப்படும் டேபிள் சேர்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோவில் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.






