என் மலர்
வேலூர்
- ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு
- தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்
வேலூர்:
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளதையொட்டி, அதற் கான ஆயத்த பணிகளை, இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர், கே.வி.குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய சட்டசபை தொகுதிகளின் ஓட்டுகளை எண்ணும் மையங்களை வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் அமைப்பது தொடர்பாக, கலெக்டர் குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, மாவட்ட வருவாய் அதிகாரி மாலதி, வேலூர் தாசில்தார் செந்தில் உட்பட 6 தொகுதிகளில் உள்ள அந்தந்த தாலுகா தாசில்தார்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- வேலூர் கோட்ட செயற்பொறியாளர் தகவல்
வேலூர்:
சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிக்காக நாளை 14-ந் தேதி செவ்வாய்க்கிழமை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதன்படி சத்துவாச்சாரி பகுதி 1 முதல் பகுதி 5 வரை, வள்ளலார், ரங்காபுரம், சி.எம்.சி. காலனி மற்றும் காகிதப்பட்டறை, இ.பி.நகர், அலமேலுமங்காபுரம் தொரப்பாடி, இடையன்சாத்து, பென்னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், ஜெயில் குடியிருப்பு, எழில் நகர், டோல்கேட், சங்கரன்பாளையம், சாயிநாதபுரம், பலவன்சாத்துகுப்பம், ஓட்டேரி, பாகாயம், சாஸ்திரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.
- 18-ந்தேதி சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடக்கிறது
- முருகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது.
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சண்முகருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து தினமும் முருகருக்கு அபிஷேகம் மற்றும் 18-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
வேலூரை அடுத்த ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிவில் கந்தசஷ்டி விழா தொடங்கியதையொட்டி வருகிற 19-ந் தேதி வரை தினமும் காலை 9-30 மணி மற்றும் மாலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.தேபோல் வேலூர் காமராஜர் சிலை அருகேயுள்ள பேரிசுப்பிர மணியசுவாமி கோவில், ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில், பாலமதி குழந்தை வேலாயுத பாணி கோவில், காங்கே யநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், கைலாசகிரி மலை கொசப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில், தொரப்பாடி பாலசுப்பிரமணியசுவாமி கோவில், வள்ளிமலை முருகன் கோவில், காங்கேயநல்லூர் முருகன் கோவில்.
அணைக்கட்டு மூலைகேட்டில் உள்ள வேலாடும் தணிகை மலை, ஒடுகத்தூர் தென்புதூரில் உள்ள மயில்வாகனம் முருகர் கோவில், மேட்டு இடையம்பட்டி பாலசுப்பி ரமணியர் கோவில், சாத்துமதுரை முருகர் கோவில், ஆர்காட்டான் குடிசை வடதிருச்செந்தூர் முருகன் கோவில்,
கம்மவான்பேட்டை முருகர் கோவில், தம்டகோடி மலை முருகர், தட்டமலை முருகர் கோவில், ரெட்டிபாளையம் முருகர் கோவில், தீர்த்தகிரி மலை முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம், தீபாராதனை நடந்தது.
- 14 பவுன் நகை, ஒரு வெள்ளி செயின் மீட்கப்பட்டன
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
வேலூர்:
வேலூர் தொரப்பாடி ஜீவா நகரைச் சேர்ந்தவர் டேனியல் சுதாகர் (வயது52). சி.எம்.சியில் அட்டென்டராக பணிபுரிகிறார்.
இவரது மனைவி கிருபை ரத்தினம் (45), ராணிப்பேட்டை சி.எம்.சியில் நர்சாக பணியாற்று கிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு அனை வரும் பணிக்கு சென்றனர். பணி முடிந்து இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த வைர நெக்லஸ் உட்பட 14 பவுன் நகை மற்றும் ஒரு வெள்ளி செயின் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் அந்தவழியாக வருவதும், மீண்டும் இரவு 7.30 மணிக்கு திரும்பி செல்வதும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து அந்த நபரை சந்தே கத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, தொரப்பாடி சின்ன அல்லாபுரத்தை சேர்ந்த சிவா (எ) சிவகுமார் (20) என்பதும், டேனியல் சுதாகர் வீட்டில் திருடியதும் தெரியவந்தது.
பின்னர் அவரிடம் இருந்த வைர நெக்லஸ் உட்பட 14 பவுன் நகை மற்றும் ஒரு வெள்ளி செயின் மீட்கப்பட்டன. பின்னர் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
- வேலூர் கோட்டை அகழியில் பிணம் வீச்சு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் கோட்டை அகழியில் கடந்த செப்டம்பர் மாதம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அடுத்த பெத்த சாரிபல்லியை சேர்ந்த சிரஞ்சீவி (வயது35) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவர் பழைய குற்றவாளியாகவும், போலீஸ் இன்பார்மராகவும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிரஞ்சீவி ரேணிகுண்டா போலீஸ் சரகத்தில் நடந்த செல்போன் திருட்டு வழக்கில், சிறையில் அறிமுகமான தனது நண்பர்களான சென்னை வியாசர்பாடியை சேர்ந்த அஜீத், மாரிமுத்துவை போலீசில் காட்டி கொடுத்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் அவர்கள் 2 பேரும் தங்கள் கூட்டா ளிகளுடன் சேர்ந்து சிரஞ் சீவியை கொலை செய்து வேலூர் கோட்டை அகழியில் வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் 3 பேரை தனிப் படை போலீசார் கடந்த 6-ந் தேதி கைது செய்தனர்.
இந்த கொலை வழக் கில் தொடர்புடைய மிட்டாய் (எ) அஜீத், விக்கி மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை தேடி வந்த நிலையில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் சுற்றி திரிந்த சித்தூரை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைக்குகளை பறிமுதல் செய்யப்பட்டது
- ஜெயிலில் அடைத்தனர்
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா கேம்ரான்பேட்டை, கஸ்தூரி பாய் தெருவை சேர்ந்தவர் மதன் (வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது பைக் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து பள்ளிகொண்டா போலீசில் மதன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று சந்தேகத்தின் பேரில் பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் ஆலங்காயம் அடுத்த வெள்ளக்குட்டையை சேர்ந்த கிரிபிரசாந்த் (23) என்பதும் பள்ளிகொண்டா பகுதியில் மதனின் பைக்கை திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் கிரிபிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- குப்பை கிடங்கில் கொட்டப்பட்டன
- பொதுமக்கள் சிலர் குப்பைகளை அவர்களே எரித்தனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் வழக்கமாக நாளொன்றிற்கு சுமார் 190 முதல் 200 டன் குப்பை சேரும். இந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக தீபாவளி விற்பனை மாநகரம் முழுவதும் நடைபெற்றது. இதனை அடுத்து திடக்கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு நகர் முழுவதும் குவிந்துள்ளன. நேற்று தீபாவளி தினத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாக மாக கொண்டாடினர்.
இதனால் பல இடங்களில் பட்டாசு கழிவுகள் குவிந்தன. இது தவிர சாலையோர கடைகளில் கடந்த சில நாட்களாக புத்தாடை விற்பனை மும்முரமாக நடந்தது. அதில் தேவையில்லாத பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளும் சாலையோரம் குவிந்தன.
இப்படி பட்டாசு வெடி த்தது மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என வழக்கத்தை விட கூடுதலாக 20 டன் அளவிற்கு குப்பை சேர்ந்து உள்ளது . அதாவது இன்று காலையில் அனைத்து குப்பைகள் சேர்ந்து சுமார் 220 டன் குப்பைகள் குவிந்தன.
இதனை தொடர்ந்து இன்று காலையில் வேலூர் மாநகர் முழுவதும் குவிந்திருந்த குப்பைகளை 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
குப்பைகளை உடனுக்குடன் அகற்றி தூய்மை செய்தனர். சேகரிக்கப்பட்ட குப்பைகள் கனரக வாகனங்களில் ஏற்றப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டன. பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் சேர்ந்த தீபாவளி பட்டாசு குப்பைகளை அவர்களே எரித்தனர்.
- பட்டாசு வெடிக்கும் பொழுது நவிஷ்கா ஆனந்தத்தில் துள்ளி குதித்து, அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்.
- வாழைபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28), டிரைவர். இவரது மனைவி அஸ்வினி (25). தம்பதியின் மகள் நவிஷ்கா (4), ஒரு வயது மகனும் உள்ளார்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வேண்டுமென நவீஷ்கா தந்தையிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து ரமேஷ் தனது மகளுடன் கடைக்கு சென்று விதவிதமான பட்டாசுகளை வாங்கி வந்தனர்.
நேற்று மாலை நவீஷ்கா தனது குடும்பத்தினருடன் இணைந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். தந்தை ரமேஷ் விதவிதமான பட்டாசுகளை வெடித்தார். அதனை பார்த்து சிறுமி மகிழ்ச்சியடைந்தார்.
பட்டாசு வெடிக்கும் பொழுது நவிஷ்கா ஆனந்தத்தில் துள்ளி குதித்து, அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்.
அப்போது சிறுமியின் பெரியப்பாவான ரமேஷின் அண்ணன் விக்னேஷ் (31) பெரிய அணுகுண்டு வகை பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி பட்டாசு அருகே சென்றுவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் ஓடிப்போய் சிறுமியை காப்பாற்ற முயன்றார். அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடித்து சிதறி விக்னேஷ் மற்றும் சிறுமியின் மீது விழுந்தது.
இதில் விக்னேசுக்கு வலது கையிலும், சிறுமிக்கு கை மற்றும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் நவிஷ்கா அலறி துடித்தாள்.
இதனை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நவிஷ்கா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமி உயிரிழந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர்.
ஆஸ்பத்திரியில் குழந்தையின் தாய் அஸ்வினி கதறி அழுதகாட்சி காண்பவர்களின் நெஞ்சை கரையச் செய்தது.
சிறுமியின் பெரியப்பா விக்னேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாழைபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுறுத்தினார்
- இனிப்புகள், பட்டாசுகள் வழங்கப்பட்டது
வேலூர்:
விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து சத்துவாச்சாரியில் உள்ள ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எப்பொழுதுமே திறந்தவெளியைத் தேர்ந்தெடுத்து, அங்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் வெடிக்கத் தொடங்க வேண்டும். மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்கள், நடமாடும் இடங்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடங்களிலிருந்து சற்று ஒதுங்கி, பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
எப்பொழுதுமே பட்டாசுகளை வெடிக்க நீளமான அகர்பத்தியை பயன்படுத்துவது நல்லது.
மரங்கள் மற்றும் மின்சார ஒயர்கள் இருக்கும் இடங்களுக்குக் கீழே பட்டாசுகளை வெடிக்க கூடாது.
அதே போல் எந்த ஒரு பட்டாசையும் கைகளில் வைத்து வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் பொழுது தீக்காயம் பட்டுவிட்டால் அவற்றின் மீது க்ரீம், களிம்பு அல்லது எண்ணெயை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உபயோகிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.
மேலும் புவி வெப்பமாவதை தடுப்பது, காற்று மாசுபடுவதை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு சமூக சேவகர் சுரேஷ் துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது.
- வட்டார போக்குவரத்து அலவலர் நடவடிக்கை
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் இருந்து வேலூர் செல்லும் தனியார் பஸ்சை டிரைவர் ஓட்டி சென்றார். அப்போது அவர் பஸ்சை செல் போனில் பேசியபடி வெகுதூரம் ஓட்டி சென்றுள்ளார்.
இதனை பஸ்சில் இருந்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரு கிறது. இந்நிலையில் இந்த விதிமீறல் வீடியோவை பார்த்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர், சம்மந்தப்பட்ட பஸ் டிரைவரை அழைத்து விசாரணை நடத்தி சோதனை அறிக்கை வழங்கியுள்ளார்.
மேலும் வட்டார போக்குவரத்து அலவலர் வெங்கடேசன்(பொறுப்பு) விதிமீறிய பஸ் டிரைவரின் லைசென்சை 3 மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.
- தீபாவளி பண்டிகையொட்டி ஏற்பாடு
- பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க நடவடிக்கை
வேலூர்:
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.
இதனை கொண்டாட வெளியூரை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று மாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 135 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சென்னை பூந்தமல்லியில் இருந்து ஒசூருக்கு 10 பஸ்கள், பூந்தமல்லியில் விருந்து வேலூருக்கு 50, திருப்பத்தூருக்கு 30, ஆற்காட்டிற்கு 20, குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டுக்கு 10 பஸ்கள் இயக்கப்படுகிறது.
மேலும் வேலூரில் இருந்து திருச்சிக்கு 5 மற்றும் பெங்களூருக்கு 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வெள்ளிக்கி ழமையான நேற்று முதலே ஏராள மானோர் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
தொடர்ந்து இன்றும் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து பொதுமக்கள் திரும்பி செல்ல ஏதுவாக வரும் 13-ந் தேதி திங்கள் கிழமை மதியம் முதல் 14 மற்றும் 15-ந் தேதி வரை வேலூரில் இருந்து சென்னை, தாம்பரம், திருச்சி, ஒசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு வழக்கமாக செல்லும் பஸ்கள் மட்டுமின்றி கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- குறைந்த அளவிலான ஆடுகளே கொண்டுவரப்பட்டன
- விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றம்
வேலூர்:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் கிராமத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று ஆட்டு சந்தை நடக்கிறது.
இங்கு காட்பாடி, குடியாத்தம், வேலூர், அணைக்கட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.
இந்த ஆட்டுச் சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ் உள்ளிட்ட விழா காலங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று சிறப்பு ஆட்டுச்சந்தை நடந்தது. இதில் குறைந்த அளவிலான ஆடுகளே கொண்டுவரப்பட்டன. விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டதால் ஏராளமான ஆடுகள் விற்பனையாகாமல் வியாபாரிகள் மீண்டும் வீடுகளுக்கு திருப்பி எடுத்துச் சென்றனர்.






