என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "were handed over to the salesmen of Tasmac shops"

    • மது பிரியர்கள் மகிழ்ச்சி
    • மெஷின் கையாளுவது குறித்து ஊழியர்களுக்கு விளக்கம்

    வேலூர்:

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான ஸ்வைப்பிங் மெஷின்கள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகத்தை பொறுத்த வரை, வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும், அரக் கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட மும் உள்ளன.

    இதில், வேலூர் கோட்டத்தில் வேலூர்-68, திருப்பத்தூர்-37 என மொத்தம் 105 மதுக்க டைகளும், அரக்கோணம் கோட்டத்தில் 83 மதுக்கடைகளும் உள்ளன.

    இவற்றுக்கு தேவையான ஸ்வைப்பிங் மெஷின்க ளில் முதல் கட்டமாக 50 மெஷின்கள் வந்துள்ளது. அவை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப் பட்டு, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட டாஸ்மாக் கடைகளின் விற்பனையா ளர்களிடம், ஒப்படைக் கப்பட்டன.

    சில நேரங்களில் பணம் கையில் எடுத்து வர முடியாத சூழ்நிலை உள்ளது.

    இதனால் அவர்கள் ஏடிஎம் அல்லது மற்றவர்களுக்கு ஜிபே, போன் பே மூலம் பணத்தை வாங்கும் நிலை ஏற்பட்டு வந்தது.

    தற்போது டாஸ்மாக் கடைகளுக்கு ஸ்வைப்பிங் மெஷின் வர உள்ளதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும், ஸ்வைப்பிங் மெஷின் கையாளுவது எப்படி என்பது குறித்து ஊழியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×