என் மலர்
வேலூர்
- காட்பாடி ெரயில் நிலையத்தில் பயணிகள் அவதி
- காலை மற்றும் மாலை வேளைகளில் கண்டிப்பாக இயக்க வலியுறுத்தல்
வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள நகரும் படிக்கட்டுகள் செயல்படாமல் உள்ளது. கடந்த சில தீபாவளி விடுமுறை காரணமாக அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றனர்.
2-வது நடைமேடை மற்றும் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகள் இயக்கப்படவில்லை.
இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் அதிக பைகள் எடுத்துச் செல்லும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். ரெயில் நிலையத்தில் ஒரே ஒரு லிப்ட் மட்டும் உள்ளது.
அதனை அனைவரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கூட்டம் அதிகமாக சேரும்போது பயணிகள் நகரும் படிக்கட்டுகள் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது அதுவும் இயங்க வில்லை. அடிக்கடி பராமரிப்பு பணி காரணமாக அதன்னை நிறுத்தி விடுகின்றனர்.
காலை மற்றும் மாலை வேளைகளில் கண்டிப்பாக நகரும் படிக்கட்டுகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- பணம் பறிக்கும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்
- கலெக்டர் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமார வேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சில நபர்கள் தங்களுக்கு உயர் அரசு அலுவலர்களை தெரியும் என்று பொது மக்களிடம் கூறுகின்றனர்.
அரசு அலுவலர்களிடம் பேசி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று ஏமாற்றி பணம் பறிப்பதாக புகார்கள் வந்துள்ளன.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமில்லாமல், காவல்துறை மூலமாக வழக்குப்பதிவு செய்யப்படும்.
கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து தாசில்தார் அலு வலகங்கள் முன்பாக சில நபர்கள் பத்திரிகையாளர் என்று கூறி போலியான அடை யாள அட்டைகளை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தகைய நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் அரசு அலுவலகங்களில் பணிக்கு இடையூறு அளிக் கும் வகையில் பணம் பறிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுப் வர்கள் மீதும், பிறரின் கோரிக்கை மனுக்களை இதேபோன்று சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கட் பட்டவர்கள் உடனடியாக 9498042453 என்ற வாட்ஸ்-அட் எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல் அனுப்பினால் அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.
- வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறுகிறது
- மாலை 6 மணியளவில் தெய்வானை முருகன் திருமணம் நடைபெறுகிறது
வேலூர்:
முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி சூரசம்ஹாரமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது.
இதையொட்டி வேலூர் கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் காலை 7.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற உள்ளது.
தொடர்ந்து முருகர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது .மாலையில் அசூரர்கள்,தேவி கருமாரியம்மன் கோவிலில் இருந்தும் சூரபத்மன் சண்முகனடியார் மண்டபத்தில் இருந்து எழுந்தருளி கோட்டை மைதானத்திற்கு வருகின்றனர். அங்கு முருகப்பெருமான் ஜெயந்தி நாதராக எழுந்தருளுகிறார்.
அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபன நிர்வாகிகள் செய்துள்ளனர். நாளை மறுநாள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டியொட்டி முருகப்பெருமானுக்கு தினமும் பல்வேறு அலங்கார பூஜை நடக்கிறது. இரவில் சாமி வீதி உலா நடந்து வருகிறது. நாளை மாலை 5 மணிக்கு மலையடி வாரத்தில் சூரஷம்கார நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
கந்தசஷ்டி விழாவையொட்டி வேலூர்-ஆற்காடு சாலை சைதாப்பேட்டையில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட உள்ளது. மாலை 6 மணியளவில் சூரஷம்ஹாரமும், அதைத்தொடர்ந்து தெய்வானை முருகன் திருமணம் நடைபெறுகிறது.
வேலூர் பேரி சுப்பிரமணியசாமி கோவில் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவில், பாலமதி, வள்ளிமலை உள்ளிட்ட முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
- மாட்டு கொட்டகையில் சுவிட்ச் போட்டபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம், கீழ்மோட்டூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 75) விவசாயி. இவர் சொந்தமாக மாடுகளை வளர்த்து வந்தார்.
வீட்டின் அருகிலேயே தகரத்திலான கொட்டகை அமைத்து மாடுகளை கட்டி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மாட்டு கொட்டகையில் மின்சார விளக்கு எரிய வைப்பதற்காக சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக ராமசாமி மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் விரைந்து வந்து ராமசாமியை மீட்டு வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டெங்கு காய்ச்சலை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன் தலைமையில் நடந்தது. பிடிஒக்கள் சுதாகரன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசினார்.
இதில் தற்போது டெங்கு காய்ச்சலை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்து கிராமத்திலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் வேளாண்மை துறை சார்பில் மண்வெட்டி, தென்னை கன்றுகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. தோட்டக்கலை துறை அதிகாரிகள் செந்தூரா கூறுகையில் 2 ஏக்கர் நிலம் உள்ளவர்களுக்கு 70% மானியம் அதற்க்கு குறைவாக உள்ள நிலத்திற்கு 100% மானியத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
நெக்கினி மலைப்பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வளர்ச்சி திட்டங்களை பற்றி எடுத்துறைத்து பேசினர்.
- 11 டன் ரேசன் அரிசி பறிமுதல்
- சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
வேலூர்:
தமிழகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியை சிலர் விலை கொடுத்து வாங்கி ஆந்திர மாநிலத்துக்கு கடத்துகின்றனர்.
இதை பெரியளவில் தொழிலாக செய்து வருபவர்கள் லாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் சென்று அங்குள்ள அரிசி ஆலைகளில் 'பாலீஸ்' செய்து மீண்டும் தமிழ்நாட்டில் அதிக விலைக்கு விற்று வருவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாக புகார் கூறப்படுகிறது.
கோடிகளில் புரளும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதல்வருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி சலசலப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனாலும், ரேசன் அரிசி கடத்தல் தொடர்கிறது. கடத்தல் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வரும் நபர்களை கைது செய்ய முடியாமல் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.
கடந்த செப்.23-ந் தேதி பள்ளிகொண்டா அருகேயுள்ள ரகசிய கிடங்கில் இருந்து லாரியில் கடத்த முயன்ற 11 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து நாகராஜ் மற்றும் சிவக்குமார் ஆகியோரை பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் பிடித்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது வட தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலில் முக்கிய நபராக இருந்து வரும் குடியாத்தம் கணேசன் (வயது 67) என்பவர் குறித்த தகவல் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடிவந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் லாரியுடன் 14 டன் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கிலும் குடியாத்தம் கணேசனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து,
வேலூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினர் கணேசனை கைது செய்தனர்.
- கார்த்திகை மாத பிறப்பையொட்டி பக்தியுடன் கோவில்களுக்கு வந்தனர்
- 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம்
வேலூர், நவ.17-
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு இன்று அய்யப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத முதல் நாளில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். இன்று கார்த்திகை மாதம் பிறந்ததால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் அய்யப்ப பக்தர்கள் இன்று அதிகாலை குளித்து, கருப்பு வேட்டி சட்டை துண்டு அணிந்து பயபக்தியுடன் அய்யப்பன் கோவில்களுக்கு வந்தனர்.
பின்னர் குருசாமி தலைமையில் நீண்ட வரிசையில் நின்று துளசி மாலை அணிந்து கொண்டனர்.
வேலூர் காட்பாடி சாலை விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அய்யப்பன் சன்னதியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யப்ப மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.
- பூஜை செய்ய தீபம் ஏற்றியபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் கொணவட்டம், லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி பாப்பம்மாள் (வயது 90). இவர் கடந்த 13-ந் தேதி பூஜை செய்வதற்காக வீட்டில் தீபம் ஏற்றிக்கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பாப்பம்மாள் சேலையில் தீ பிடித்து எரிய தொடங்கியது. தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் பாப்பமாளை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 17 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
- 72 பேர் பயிற்சி தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்
வேலூர்:
வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் மதுரை, கோவை, விழுப்புரம் உள் பட 17 மாவட்டங்களை சேர்ந்த 2-ம் நிலை பெண் காவலர்கள் 273 பேருக்கு கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 7 மாத கால அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் படி தினமும் காலை, மாலை என இருவேளையும் கவாத்து பயிற்சி, யோகா, முதலு தவி அளித்தல், நன்ன டத்தை, கலவரத்தை கட்டுப்ப டுத்துவது, சட் டம் மற்றும் கணினியை கையாளுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல் நிலை யங்களில் பணியாற்றுவது நீதிமன்றத்தில் கைதியை ஆஜர் படுத்துவது, எஸ்பி அலுவலக பணிகள் ஆகியன குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
துப்பாக்கி சுடும்
இந்த நிலையில், வேலூர் அடுத்த சலமநத்தம் துப் பாக்கி சுடும் பயிற்சி தளத்தில், 2-ம் நிலை பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று தொடங்கியது.
இதற்காக காவலர் பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில், 2-ம் நிலை பெண் காவலர்கள் 72 பேர் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு ஏகே 47, எஸ்.எல்.ஆர். உள்ளிட்ட துப்பாக்கிகள் சுடும் பயிற்சி மற்றும் அவற்றை கையாளும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மீதமுள்ள 2-ம் நிலை பெண் காவலர்க ளுக்கு அடுத்தடுத்து பயிற்சி வழங்கப்படும் என காவலர் பயிற்சி பள்ளி போலீசார் தெரிவித்தனர்.
- கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 22 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படவில்லை
- விளக்கத்தின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதிகாரி தகவல்
வேலூர்:
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழக பருவத் தேர்வில் 2021-ல் வெளியான கேள்வித்தாளே, தற் போது நடைபெற்று வரும் பருவத் தேர்வில் மீண்டும் விநியோகிக் கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர், ராணி ப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணா மலை மாவ ட்டங்களில் செயல்படும் 70-க் கும் மேற்பட்ட கல்லூரிகள் திரு வள்ளுவர் பல்கைலக்கழக கட்டுப் பாட்டில் உள்ளன. இவற்றில் சுமார் 2.50 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பல்கலையில் தற்போது பருவத் தேர்வுகள் நடைபெற்று வரும் கேள்வி த்தாள் வடிவமைப்புக் குழு அமைத்து, அவர்களுக்கு பணம் வழங்க வேண்டும்? இந்த நிலையில், முதுநிலை கணிதவி யல் 3-வது பருவத் தேர்வில் கடந்த 2021-ம் ஆண்டின் கேள்வித்தாள் அப்படியே மீண்டும் விநியோகிக்கப் பட்டுள்ளது. TOPOLOGY, DIFFERENTIAL GEOMETRY, COMPLEX ANALYSIS-1 ஆகிய தேர்வுகளில், பழைய மூன்று தேர்வுகளில், கேள்வித்தாளே மீண்டும் விநி யோகிக்கப்பட்டது மாணவர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களி டையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்வு துறை, சரியான முறையில் செயல்படு வதில்லை. கேள்வித் தாள் வடிவமைப்புக் குழுவிடம் பெறப்படும் கேள்வித் தாள் களை, சரிபார்ப்புக் குழு ஆய்வு செய்ததா என்றும் தெரியவில்லை. மேலும், கேள்வித்தாள் வடிவமைப் புக் குழுவுக்கு சரியான நேரத்துக்கு பணம் வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது".
திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்விக் குழுவில் கடந்த 2 ஆண்டு களாக கல்லூரி ஆசிரிய ர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 22 பேர் உறுப்பினர்களாக நிய மனம் செய்யப்படவில்லை.
இதனால், பல்கலைக்கு உரிய அறிவுரை வழங்க முடியவில்லை. எங்கள் பங்களிப்பு இல்லாமல், பல்கலைக்கழக பாடத் திட்டங்களையும் விட்டனர் எனக் கூறியுள்ளார்.
பல்கலை. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார் தனம் கூறும்போது:-
"பழைய கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேராசிரி யரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்" என்றார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
- உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, ரங்கநாதர் நகர் பகுதியை சேர்ந்த மார்கபந்து (வயது 39) கட்டிட மேஸ்திரி. கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்.
நேற்று தீடீரென வீட்டில்புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகனம் மோதி இறந்த சிறுத்தை தீயிட்டு எரிக்கப்பட்டது
- சிறுத்தை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது
வேலூர்:
பேரணாம்பட்டு அருகே ஆந்திர வனப்ப குதிக்குட்பட்ட சாலையில் இறந்து கிடந்த குட்டி பெண் சிறுத்தையின் உடலை ஆந்திர மாநிலம் பலமநேர் வனத்துறையினர், கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது தமிழக எல்லையில் இறந்து கிடந்த சிறுத் தையை கொண்டு வந்து ஆந்திர மாநில எல்லையில் போட்டு விட் டீர்கள் எனக்கூறி பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ்குமாரிடம் ஆந்திர மாநில வனத்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த சித்தூர் மாவட்ட வன அலுவலர் சைதன்ய குமார் ரெட்டி சிறுத்தை இறந்து கிடந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
பின்னர் அவரது முன்னிலையில் ஆந்திர மாநில கால்நடை மருத்துவ குழுவினர் அதே இடத்தில் நேற்று மாலை சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சிறுத்தையின் உடல் பாதுகாப்பாக தீயிட்டு எரிக்கப்பட்டது.
பலமநேர் வனச்சரகர் சிவண்ணா, உதவி வனச்சரகர் வேணுகோ பால் ரெட்டி, பேரணா ம்பட்டு வனச்சரகர் சதீஷ்கு மார், வனவர் இளையராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






