

அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, ரங்கநாதர் நகர் பகுதியை சேர்ந்த மார்கபந்து (வயது 39) கட்டிட மேஸ்திரி. கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்.
நேற்று தீடீரென வீட்டில்புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.