என் மலர்tooltip icon

    வேலூர்

    • பூஜை செய்ய தீபம் ஏற்றியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம், லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி பாப்பம்மாள் (வயது 90). இவர் கடந்த 13-ந் தேதி பூஜை செய்வதற்காக வீட்டில் தீபம் ஏற்றிக்கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பாப்பம்மாள் சேலையில் தீ பிடித்து எரிய தொடங்கியது. தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் பாப்பமாளை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 17 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
    • 72 பேர் பயிற்சி தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்

    வேலூர்:

    வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் மதுரை, கோவை, விழுப்புரம் உள் பட 17 மாவட்டங்களை சேர்ந்த 2-ம் நிலை பெண் காவலர்கள் 273 பேருக்கு கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 7 மாத கால அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் படி தினமும் காலை, மாலை என இருவேளையும் கவாத்து பயிற்சி, யோகா, முதலு தவி அளித்தல், நன்ன டத்தை, கலவரத்தை கட்டுப்ப டுத்துவது, சட் டம் மற்றும் கணினியை கையாளுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல் நிலை யங்களில் பணியாற்றுவது நீதிமன்றத்தில் கைதியை ஆஜர் படுத்துவது, எஸ்பி அலுவலக பணிகள் ஆகியன குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

    துப்பாக்கி சுடும்

    இந்த நிலையில், வேலூர் அடுத்த சலமநத்தம் துப் பாக்கி சுடும் பயிற்சி தளத்தில், 2-ம் நிலை பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று தொடங்கியது.

    இதற்காக காவலர் பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில், 2-ம் நிலை பெண் காவலர்கள் 72 பேர் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    அங்கு ஏகே 47, எஸ்.எல்.ஆர். உள்ளிட்ட துப்பாக்கிகள் சுடும் பயிற்சி மற்றும் அவற்றை கையாளும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, மீதமுள்ள 2-ம் நிலை பெண் காவலர்க ளுக்கு அடுத்தடுத்து பயிற்சி வழங்கப்படும் என காவலர் பயிற்சி பள்ளி போலீசார் தெரிவித்தனர்.

    • கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 22 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படவில்லை
    • விளக்கத்தின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதிகாரி தகவல்

    வேலூர்:

    வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழக பருவத் தேர்வில் 2021-ல் வெளியான கேள்வித்தாளே, தற் போது நடைபெற்று வரும் பருவத் தேர்வில் மீண்டும் விநியோகிக் கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர், ராணி ப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணா மலை மாவ ட்டங்களில் செயல்படும் 70-க் கும் மேற்பட்ட கல்லூரிகள் திரு வள்ளுவர் பல்கைலக்கழக கட்டுப் பாட்டில் உள்ளன. இவற்றில் சுமார் 2.50 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    பல்கலையில் தற்போது பருவத் தேர்வுகள் நடைபெற்று வரும் கேள்வி த்தாள் வடிவமைப்புக் குழு அமைத்து, அவர்களுக்கு பணம் வழங்க வேண்டும்? இந்த நிலையில், முதுநிலை கணிதவி யல் 3-வது பருவத் தேர்வில் கடந்த 2021-ம் ஆண்டின் கேள்வித்தாள் அப்படியே மீண்டும் விநியோகிக்கப் பட்டுள்ளது. TOPOLOGY, DIFFERENTIAL GEOMETRY, COMPLEX ANALYSIS-1 ஆகிய தேர்வுகளில், பழைய மூன்று தேர்வுகளில், கேள்வித்தாளே மீண்டும் விநி யோகிக்கப்பட்டது மாணவர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களி டையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    தேர்வு துறை, சரியான முறையில் செயல்படு வதில்லை. கேள்வித் தாள் வடிவமைப்புக் குழுவிடம் பெறப்படும் கேள்வித் தாள் களை, சரிபார்ப்புக் குழு ஆய்வு செய்ததா என்றும் தெரியவில்லை. மேலும், கேள்வித்தாள் வடிவமைப் புக் குழுவுக்கு சரியான நேரத்துக்கு பணம் வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது".

    திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்விக் குழுவில் கடந்த 2 ஆண்டு களாக கல்லூரி ஆசிரிய ர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 22 பேர் உறுப்பினர்களாக நிய மனம் செய்யப்படவில்லை.

    இதனால், பல்கலைக்கு உரிய அறிவுரை வழங்க முடியவில்லை. எங்கள் பங்களிப்பு இல்லாமல், பல்கலைக்கழக பாடத் திட்டங்களையும் விட்டனர் எனக் கூறியுள்ளார்.

    பல்கலை. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார் தனம் கூறும்போது:-

    "பழைய கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேராசிரி யரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்" என்றார்.

    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
    • உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, ரங்கநாதர் நகர் பகுதியை சேர்ந்த மார்கபந்து (வயது 39) கட்டிட மேஸ்திரி. கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்.

    நேற்று தீடீரென வீட்டில்புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனம் மோதி இறந்த சிறுத்தை தீயிட்டு எரிக்கப்பட்டது
    • சிறுத்தை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது

    வேலூர்:

    பேரணாம்பட்டு அருகே ஆந்திர வனப்ப குதிக்குட்பட்ட சாலையில் இறந்து கிடந்த குட்டி பெண் சிறுத்தையின் உடலை ஆந்திர மாநிலம் பலமநேர் வனத்துறையினர், கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது தமிழக எல்லையில் இறந்து கிடந்த சிறுத் தையை கொண்டு வந்து ஆந்திர மாநில எல்லையில் போட்டு விட் டீர்கள் எனக்கூறி பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ்குமாரிடம் ஆந்திர மாநில வனத்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்த சித்தூர் மாவட்ட வன அலுவலர் சைதன்ய குமார் ரெட்டி சிறுத்தை இறந்து கிடந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    பின்னர் அவரது முன்னிலையில் ஆந்திர மாநில கால்நடை மருத்துவ குழுவினர் அதே இடத்தில் நேற்று மாலை சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சிறுத்தையின் உடல் பாதுகாப்பாக தீயிட்டு எரிக்கப்பட்டது.

    பலமநேர் வனச்சரகர் சிவண்ணா, உதவி வனச்சரகர் வேணுகோ பால் ரெட்டி, பேரணா ம்பட்டு வனச்சரகர் சதீஷ்கு மார், வனவர் இளையராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • 2 மாநில வனத்துறையினர் விசாரணை
    • பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம் செல்லும் சாலையில் உள்ள பத்தலப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது.

    இதனால அந்த வழியாக செல்லும் போது மக்கள் மிகவும் அச்சமடைந்தனர். பெரும்பாலானோர் அந்த வழியில் இரவு நேரத்தில் பயணம் செய்வதை தவிர்த்து விட்டனர்.

    சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் மற்றும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திர வனப்பகுதியில் சாலையோரம் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயத்துடன் பெண் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிறுத்தை உயிரிழந்த பகுதி ஆந்திர வனப்பகுதி என்பதால் இது குறித்து ஆந்திர மாநில வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த ஆந்திர மாநில வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக உயிரிழந்த சிறுத்தையை கொண்டு சென்றனர். இது குறித்து ஆந்திரா மற்றும் தமிழக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆன்லைனில் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி துணிகரம்
    • சைபர் கிரைம் போலீசில் புகார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஊசூர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அமீன் (வயது 32). இவரை ஆன்லைனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆன்லைனில் வேலை தருவதாக நம்பிக்கை வார்த்தைகள் கூறினர்.

    இதனை உண்மை என நம்பிய அமீன் அவர்கள் அனுப்பிய லிங்கில் இணைந்தார். பின்னர் சிறிது சிறிதாக ரூ.5 லட்சத்து 51 ஆயிரத்து 520 அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தினார்.

    மர்ம நபர்கள் கூறியபடி அமீன் முடித்துக் கொடுத்த வேலைக்கான பணம் அவரது வங்கி கணக்கில் வரவில்லை.

    இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் கேட்டபோது தாங்கள் கொடுக்கும் பணிகளை மீண்டும் முடித்துக் கொடுத்தால் பணம் வங்கி கணக்குக்கில் செலுத்து வதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அமீன் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி அடுத்த சேனூர் வீர கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவரது மனைவி தமிழ்ச்செல்வி.

    நேற்று முன்தினம் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பைக்கில் தேவனாம்பட்டில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். தேவனாம்பட்டு சாலையில் வந்தபோது பைக் நிலை தடுமாறி சுரேஷ் கீழே விழுந்தார்.

    இதில் சுரேஷ் படுகாயம் அடைந்தார் அவரை சமீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூர் மண்டல ஆணையர் எச்சரிக்கை
    • கிரிமினல் புகார்கள் பதிவு செய்ய திட்டம்

    வேலூர்:

    நீண்டகாலமாக வருங்கால வைப்பு நிதி நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வேலூர் மண்டல ஆணையர் வி.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிலுவை தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில் தவறு இழைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதனை தடுக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் வைப்பு நிதி பங்களிப்பு தொகைகளை செலுத்தாத நிறுவனங்க ளிடம் இருந்து சட்டப்பூர்வ நிலுவை சொந்தமான அசையும், அசையா தொகையை வசூலிக்க வரும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் ஒரு சிறப்பு இயக்கத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.

    அதன்படி வேலூர் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ங்கள் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ங்களின் ஒரு பகுதியின் கீழ் உள்ள நிறுவனங்களில் வைப்புநிதி பங்களிப்புகளை செலுத்த தவறியவர்கள் மீதான மீட்பு, சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க நிலுவை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்.

    நிலுவை தொகையை உடனடியாக செலுத்த தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனம், முதலாளிகளுக்கு சொத்துக்களை முடக்கவும், பற்றுகை செய்வது, விற்பனை செய்வது, பெறுநர்களை நியமிப்பது, கைது செய்து ஜெயிலில் அடைப்பது ஆகிய நடவடி க்கைகளும் எடுக்கப்படும். நீண்ட காலமாக வைப்பு நிதிகளை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் புகார்களும் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    வருங்கால வைப்பு நிதி பங்களிப்பின் தொழிலாளர்களின் பங்கை, ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்த பிறகு அதனை பி.எப். அலுவலகத்தில் செலுத்த வில்லை என்றால் குற்றவியல் சட்டம் பிரிவு 405, பிரிவு 406-ன் கீழ் குற்றத்துக்கு காரண மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது
    • மது பாட்டில், பிளேடால் தாக்கிவிட்டு சென்றனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த அகரம் கிராமத்த சேர்ந்தவர்கள் சிவக்குமார், விவேக், மோகன் ஆகியோர் நண்பர்கள். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கமல், ராஜேஷ், ராமையா, ராஜேஷ், விக்னேஷ், கார்த்தி ஆகியோருக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மீண்டும் இருதரப்பி னருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை, ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

    அப்போது மணிகண்டன், கமல், ராஜேஷ், ராமையா, ராஜேஷ், விக்னேஷ், கார்த்தி ஆகியோர் சேர்ந்து, சிவக்குமார், விவேக், மோகன் ஆகியோரை உடைந்த மது பாட்டில் மற்றும் பிளேடால் சரமாரியாக ஆங்காங்கே வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்க ம்பாறை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் 2 தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், ராஜேஷ், கார்த்தி, ராமையா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • கடந்த 8-ந் தேதி முதல் இயக்கப் பட்டது
    • பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறி சென்றனர்

    வேலூர்:

    தீபாவளி முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்து வேலூர் மண் டலம் சார்பில், சென்னை, பூந்தமல்லி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 நாட்களுக்கு வேலூர், திருப்பத்தூர், ஓசூர் மற்றும் வேலூரிலிருந்து திருச்சி, பெங்களூர் உட்பட பல ஊர்களுக்கு மொத்தம் 135 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    இவற்றில், 4 நாட்களில் 45 ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளனர். இதுதவிர, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி, நகர மற்றும் புறநகர் பஸ்கள் என வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக 80 சிறப்பு பஸ்கள் கடந்த 8-ந் தேதி முதல் இயக்கப் பட்டது.

    அதேநேரம், தீபாவளி முடிந்து மக்கள் ஊர்களுக்கு திரும்பி செல்வதற்காக வேலூரில் இருந்து சென்னை, தாம்பரம், திருச்சி, ஒசூர் மற்றும் பெங்களூர் ஆகிய பகுதி களுக்கு இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகள் பஸ் நிலையங்களில் அதிகமானோர் குவிந்தனர். பஸ்களிலும் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறி சென்றனர்.

    • மது பிரியர்கள் மகிழ்ச்சி
    • மெஷின் கையாளுவது குறித்து ஊழியர்களுக்கு விளக்கம்

    வேலூர்:

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான ஸ்வைப்பிங் மெஷின்கள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகத்தை பொறுத்த வரை, வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும், அரக் கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட மும் உள்ளன.

    இதில், வேலூர் கோட்டத்தில் வேலூர்-68, திருப்பத்தூர்-37 என மொத்தம் 105 மதுக்க டைகளும், அரக்கோணம் கோட்டத்தில் 83 மதுக்கடைகளும் உள்ளன.

    இவற்றுக்கு தேவையான ஸ்வைப்பிங் மெஷின்க ளில் முதல் கட்டமாக 50 மெஷின்கள் வந்துள்ளது. அவை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப் பட்டு, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட டாஸ்மாக் கடைகளின் விற்பனையா ளர்களிடம், ஒப்படைக் கப்பட்டன.

    சில நேரங்களில் பணம் கையில் எடுத்து வர முடியாத சூழ்நிலை உள்ளது.

    இதனால் அவர்கள் ஏடிஎம் அல்லது மற்றவர்களுக்கு ஜிபே, போன் பே மூலம் பணத்தை வாங்கும் நிலை ஏற்பட்டு வந்தது.

    தற்போது டாஸ்மாக் கடைகளுக்கு ஸ்வைப்பிங் மெஷின் வர உள்ளதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும், ஸ்வைப்பிங் மெஷின் கையாளுவது எப்படி என்பது குறித்து ஊழியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×