என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை சாவு
    X

    வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை சாவு

    • விளையாடி கொண்டிருந்தபோது விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்;

    காட்பாடி அடுத்த திருவலம், ஆரிமுத்து மேட்டூர், நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகள் ரேச்சல் (வயது 2½). நேற்று மாலை ரேச்சிலின் தாய் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.

    சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிகொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே வாளியில் இருந்த தண்ணீரில் சிறுமி விளையாடினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி தவறி வாளியில் உள்ள தண்ணீரில் விழுந்தார். இதில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக ரேச்சல் இறந்தார்.

    நீண்ட நேரத்திற்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியின் தாய் குழந்தை வாளியில் உள்ள தண்ணீரில் மூழ்கிக் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தையை மீட்டு பார்த்தபோது மகள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. மகளின் உடலை பார்த்து தாய் கதறி துடித்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×