என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
    X

    பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

    • தீ தடுப்பு கருவிகளை பயன்படுத்துவது குறித்து நடந்தது
    • செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்

    வேலூர்:

    பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் துறை சட்ட விதிமுறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் மாணவர் படை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, ஊரீசு பள்ளியில் 8, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தீயணைப்பு நிலைய செயல்பாடுகளை தெரிந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கு நிலைய அலுவலர் பொறுப்பு அரசு விளக்கம் அளித்தார்.

    மேலும் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு கருவிகளை எவ்வாறு கையாளும் முறை. தீ விபத்திற்கு எந்த கருவிகளை பயன்படுத்த வேண்டும் என செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். இதில் உடற்கல்வி ஆசிரியர் அமிர்தராஜ், தொரப்பாடி பள்ளி ஆசிரியர் அனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×