search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முருகர் கோவில்களில் கந்த சஷ்டி விழா
    X

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முருகர் கோவில்களில் கந்த சஷ்டி விழா

    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
    • அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கந்த சஷ்டி முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    கந்த சஷ்டியொட்டி ரத்தினகிரி பாலமுருகன் கோவில் நடை காலை 6 மணி அளவில் திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து பாலமுருக னடிமை சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.

    அதேபோல் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிர மணியசாமி, வேலூர்- ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.

    காமராஜர் சிலை அருகேயுள்ள பேரி சுப்பிரமணியசாமி கோவில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசாமி கோவில், கைலாசகிரிமலை கொசப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில், திருப்பத்தூர் முத்துக்குமாரசாமி கோவில், தொரப்பாடி பாலசுப்பிரமணியசாமி கோவில், பேர்ணாம்பட்டு சுப்பிரமணியசாமி கோவில், வள்ளிமலை முருகன் கோவில், வளை யாம்பட்டு பழனி யாண்டவர் கோவில், ஜலகாம்பாறை வெற்றி வேல் முருகன் கோவில், ஏலகிரி மலை பாலமுருகன் கோவில், அணைக்கட்டு மூலைகேட்டில் உள்ள வேலாடும் தணிகை மலை, ஒடுகத்தூர் தென்புதூரில் உள்ள மயில்வாகனம் முருகர் கோவில், மேட்டு இடையம்பட்டி பாலசுப்பிரமணியர் கோவில், சாத்துமதுரை முருகர் கோவில், ஆர்காட்டான் குடிசை வடதிருச்செந்தூர் முருகன் கோவில், கம்மவா ன்பேட்டை முருகர் கோவில், தம்டகோடி மலை முருகர், தட்டமலை முருகர் கோவில், ரெட்டிபாளையம் முருகர் கோவில், தீர்த்தகிரி மலை முருகன் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×