என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர் தீக்குளித்து தற்கொலை
    X

    முதியவர் தீக்குளித்து தற்கொலை

    • உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பரிதாபம்
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி அடுத்த சேவூரை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 75). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகள் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில்.இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதியடைந்தார். தற்போது அதிக அளவில் பனிப்பொழிவு இருப்பதால் கதிர்வேலுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தி அடைந்த கதிர்வேல் நேற்று இரவு வீட்டிலிருந்த மண் எண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

    உடல் முழுவதும் தீ பரவியது. இதனால் கதிர்வேல் வலியால் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதிர்வேல் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.

    அதற்குள் கதிர்வேல் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதிர்வேல் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கதிர்வேல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தீக்குளித்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×