என் மலர்
வேலூர்
- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
- அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கந்த சஷ்டி முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கந்த சஷ்டியொட்டி ரத்தினகிரி பாலமுருகன் கோவில் நடை காலை 6 மணி அளவில் திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து பாலமுருக னடிமை சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.
அதேபோல் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிர மணியசாமி, வேலூர்- ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.
காமராஜர் சிலை அருகேயுள்ள பேரி சுப்பிரமணியசாமி கோவில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசாமி கோவில், கைலாசகிரிமலை கொசப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில், திருப்பத்தூர் முத்துக்குமாரசாமி கோவில், தொரப்பாடி பாலசுப்பிரமணியசாமி கோவில், பேர்ணாம்பட்டு சுப்பிரமணியசாமி கோவில், வள்ளிமலை முருகன் கோவில், வளை யாம்பட்டு பழனி யாண்டவர் கோவில், ஜலகாம்பாறை வெற்றி வேல் முருகன் கோவில், ஏலகிரி மலை பாலமுருகன் கோவில், அணைக்கட்டு மூலைகேட்டில் உள்ள வேலாடும் தணிகை மலை, ஒடுகத்தூர் தென்புதூரில் உள்ள மயில்வாகனம் முருகர் கோவில், மேட்டு இடையம்பட்டி பாலசுப்பிரமணியர் கோவில், சாத்துமதுரை முருகர் கோவில், ஆர்காட்டான் குடிசை வடதிருச்செந்தூர் முருகன் கோவில், கம்மவா ன்பேட்டை முருகர் கோவில், தம்டகோடி மலை முருகர், தட்டமலை முருகர் கோவில், ரெட்டிபாளையம் முருகர் கோவில், தீர்த்தகிரி மலை முருகன் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 25, 26-ந்தேதிகளில் நடக்கிறது
- வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் தற்போது சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பணிகள் மேற்கொள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 4,5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
மேலும் 2-ம் கட்டமாக இன்றும், நாளையும் நடைபெறுவதாக இருந்த முகாம்கள் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்கு மாற்றாக வருகிற 25, 26 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- ஜலதோசம், காய்ச்சல் போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்
- அதிகாரி உத்தரவு
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் விட்டு, விட்டு மழை பெய்து வருகின்றது.
இதனால் ஜலதோசம், காய்ச்சல் போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விழிப்புணர்வு மற்றும் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி உத்தரவின்பேரில் தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்து வருகின்றனர்.
- வேலூரில் வருகிற 25-ந்தேதி நடக்கிறது
- கூடுதல் தலைமை செயலர் ஆலோசனை
வேலூர்:
வேலூரில் சுருணா நிதி நூற்றாண்டு விழா வருகிற 25-ந் தேதி கொண்டாடப் படுகிறது. இந்த விழா முன்னேற்பாடுகள் குறித்து நீர்வளத் துறை அரசு கூடு தல் தலைமைச் செயலர் சந்தீப் சக் சேனா தலைமையில் ஆலோசனை நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் 'பகுத் தறிவு சீர்திருத்த செம்மல் கலைஞர்' என்ற தலைப்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது.
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் விழாவில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச் சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, உணவு வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொள்கிறார்.
இது தொடர்பாக லெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத் தில் நீர்வளத் துறை கூடுதல் செய லர் மலர்விழி, கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா பேசுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் மிகச் சிறப்பாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேலூரில் கொண்டாடப்பட உள்ளது. இதைச் சிறப்பாகக் கொண்டாட நீர்வளத் துறை அமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த விழா சிறப்பு மலரும், ஒரு குறும்படமும் வெளி யிடப்பட உள்ளது என்றார். முன்னதாக விழா நடைபெறும் நகர அரங்கம், தனியார் மஹாலை சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.
அப்போது, கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன், நீர்வளத் துறை சிறப்பு செயலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்
- ஆவணங்களின் நகலுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
பொதுவினியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்க ளுக்கும் வழங்கும்பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது.
குறைதீர்வு முகாம்
இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம்; புதிய குடும்ப அட்டை மற்றும் நகல், குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொ ள்ளப்படும்.
மேலும் பொது வினியோக திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம்.
வேலூர் தாலுகாவில் கம்மவான்பேட்டை, காட்பாடி தாலு காவில் இடையகுப்பம் கொள்ளப்பள்ளி மதுரா, அணைக் கட்டு தாலுகாவில் செம்பேடு, குடியாத்தம் தாலுகாவில் வேப்பூர், கே.வி.குப்பம் தாலுகாவில் வேப்பங்கனேரி, பேர ணாம்பட்டு தாலுகாவில் அரவட்லா ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் நகலுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- காட்பாடி ெரயில் நிலையத்தில் பயணிகள் அவதி
- காலை மற்றும் மாலை வேளைகளில் கண்டிப்பாக இயக்க வலியுறுத்தல்
வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள நகரும் படிக்கட்டுகள் செயல்படாமல் உள்ளது. கடந்த சில தீபாவளி விடுமுறை காரணமாக அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றனர்.
2-வது நடைமேடை மற்றும் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகள் இயக்கப்படவில்லை.
இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் அதிக பைகள் எடுத்துச் செல்லும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். ரெயில் நிலையத்தில் ஒரே ஒரு லிப்ட் மட்டும் உள்ளது.
அதனை அனைவரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கூட்டம் அதிகமாக சேரும்போது பயணிகள் நகரும் படிக்கட்டுகள் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது அதுவும் இயங்க வில்லை. அடிக்கடி பராமரிப்பு பணி காரணமாக அதன்னை நிறுத்தி விடுகின்றனர்.
காலை மற்றும் மாலை வேளைகளில் கண்டிப்பாக நகரும் படிக்கட்டுகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- பணம் பறிக்கும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்
- கலெக்டர் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமார வேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சில நபர்கள் தங்களுக்கு உயர் அரசு அலுவலர்களை தெரியும் என்று பொது மக்களிடம் கூறுகின்றனர்.
அரசு அலுவலர்களிடம் பேசி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று ஏமாற்றி பணம் பறிப்பதாக புகார்கள் வந்துள்ளன.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமில்லாமல், காவல்துறை மூலமாக வழக்குப்பதிவு செய்யப்படும்.
கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து தாசில்தார் அலு வலகங்கள் முன்பாக சில நபர்கள் பத்திரிகையாளர் என்று கூறி போலியான அடை யாள அட்டைகளை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தகைய நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் அரசு அலுவலகங்களில் பணிக்கு இடையூறு அளிக் கும் வகையில் பணம் பறிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுப் வர்கள் மீதும், பிறரின் கோரிக்கை மனுக்களை இதேபோன்று சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கட் பட்டவர்கள் உடனடியாக 9498042453 என்ற வாட்ஸ்-அட் எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல் அனுப்பினால் அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.
- வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறுகிறது
- மாலை 6 மணியளவில் தெய்வானை முருகன் திருமணம் நடைபெறுகிறது
வேலூர்:
முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி சூரசம்ஹாரமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது.
இதையொட்டி வேலூர் கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் காலை 7.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற உள்ளது.
தொடர்ந்து முருகர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது .மாலையில் அசூரர்கள்,தேவி கருமாரியம்மன் கோவிலில் இருந்தும் சூரபத்மன் சண்முகனடியார் மண்டபத்தில் இருந்து எழுந்தருளி கோட்டை மைதானத்திற்கு வருகின்றனர். அங்கு முருகப்பெருமான் ஜெயந்தி நாதராக எழுந்தருளுகிறார்.
அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபன நிர்வாகிகள் செய்துள்ளனர். நாளை மறுநாள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டியொட்டி முருகப்பெருமானுக்கு தினமும் பல்வேறு அலங்கார பூஜை நடக்கிறது. இரவில் சாமி வீதி உலா நடந்து வருகிறது. நாளை மாலை 5 மணிக்கு மலையடி வாரத்தில் சூரஷம்கார நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
கந்தசஷ்டி விழாவையொட்டி வேலூர்-ஆற்காடு சாலை சைதாப்பேட்டையில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட உள்ளது. மாலை 6 மணியளவில் சூரஷம்ஹாரமும், அதைத்தொடர்ந்து தெய்வானை முருகன் திருமணம் நடைபெறுகிறது.
வேலூர் பேரி சுப்பிரமணியசாமி கோவில் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவில், பாலமதி, வள்ளிமலை உள்ளிட்ட முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
- மாட்டு கொட்டகையில் சுவிட்ச் போட்டபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம், கீழ்மோட்டூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 75) விவசாயி. இவர் சொந்தமாக மாடுகளை வளர்த்து வந்தார்.
வீட்டின் அருகிலேயே தகரத்திலான கொட்டகை அமைத்து மாடுகளை கட்டி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மாட்டு கொட்டகையில் மின்சார விளக்கு எரிய வைப்பதற்காக சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக ராமசாமி மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் விரைந்து வந்து ராமசாமியை மீட்டு வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டெங்கு காய்ச்சலை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன் தலைமையில் நடந்தது. பிடிஒக்கள் சுதாகரன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசினார்.
இதில் தற்போது டெங்கு காய்ச்சலை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்து கிராமத்திலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் வேளாண்மை துறை சார்பில் மண்வெட்டி, தென்னை கன்றுகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. தோட்டக்கலை துறை அதிகாரிகள் செந்தூரா கூறுகையில் 2 ஏக்கர் நிலம் உள்ளவர்களுக்கு 70% மானியம் அதற்க்கு குறைவாக உள்ள நிலத்திற்கு 100% மானியத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
நெக்கினி மலைப்பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வளர்ச்சி திட்டங்களை பற்றி எடுத்துறைத்து பேசினர்.
- 11 டன் ரேசன் அரிசி பறிமுதல்
- சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
வேலூர்:
தமிழகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியை சிலர் விலை கொடுத்து வாங்கி ஆந்திர மாநிலத்துக்கு கடத்துகின்றனர்.
இதை பெரியளவில் தொழிலாக செய்து வருபவர்கள் லாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் சென்று அங்குள்ள அரிசி ஆலைகளில் 'பாலீஸ்' செய்து மீண்டும் தமிழ்நாட்டில் அதிக விலைக்கு விற்று வருவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாக புகார் கூறப்படுகிறது.
கோடிகளில் புரளும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதல்வருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி சலசலப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனாலும், ரேசன் அரிசி கடத்தல் தொடர்கிறது. கடத்தல் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வரும் நபர்களை கைது செய்ய முடியாமல் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.
கடந்த செப்.23-ந் தேதி பள்ளிகொண்டா அருகேயுள்ள ரகசிய கிடங்கில் இருந்து லாரியில் கடத்த முயன்ற 11 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து நாகராஜ் மற்றும் சிவக்குமார் ஆகியோரை பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் பிடித்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது வட தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலில் முக்கிய நபராக இருந்து வரும் குடியாத்தம் கணேசன் (வயது 67) என்பவர் குறித்த தகவல் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடிவந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் லாரியுடன் 14 டன் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கிலும் குடியாத்தம் கணேசனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து,
வேலூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினர் கணேசனை கைது செய்தனர்.
- கார்த்திகை மாத பிறப்பையொட்டி பக்தியுடன் கோவில்களுக்கு வந்தனர்
- 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம்
வேலூர், நவ.17-
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு இன்று அய்யப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத முதல் நாளில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். இன்று கார்த்திகை மாதம் பிறந்ததால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் அய்யப்ப பக்தர்கள் இன்று அதிகாலை குளித்து, கருப்பு வேட்டி சட்டை துண்டு அணிந்து பயபக்தியுடன் அய்யப்பன் கோவில்களுக்கு வந்தனர்.
பின்னர் குருசாமி தலைமையில் நீண்ட வரிசையில் நின்று துளசி மாலை அணிந்து கொண்டனர்.
வேலூர் காட்பாடி சாலை விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அய்யப்பன் சன்னதியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யப்ப மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.






