என் மலர்tooltip icon

    வேலூர்

    • சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு
    • வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் எச்சரிக்கை

    வேலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற வட மாவட்டங்களிலும், நெல்லை, தென்காசி போன்ற தென்மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.

    பருவமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து காக்கவும், அடுத்த 2 மாதங்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் என்பதால் அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர்களுக்கு, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவ மழைகாலத்தில் தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    அதன்படி மாவட்ட அளவில் சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம். ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அத்தகைய கட்டமைப்பை தயாராக வைத்திருக்க வேண்டும். அதனுடன், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால், ஆஸ்பத்திரி வளாகங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

    குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்வதுடன் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிப்பதும் முக்கியம். புயல் மற்றும் கன மழைக்கு முன்பாகவே விரைவு சிகிச்சை குழுக்களை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும்.

    அதேபோன்று கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு சுகாதார குழுக்களையும் அமைக்க வேண்டும்.

    மருத்துவக் கட் டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்தல் அவசியம். கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற் கொள்ள வேண்டும்.

    பருவ மழைக்குப் பிறகு ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, மற்றும் நோய்த் தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத்துறைக்கு அனுப்ப வேண்டும்.

    காய்ச்சல் பாதிப்புகள் அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், தேவைப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்பலாம். பருவகால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து சுகாதார பணிகள் துணை இயக்குனர்களும் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு
    • அன்னதானம் வழங்கப்படுகிறது

    வேலூர்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தீப திருவிழா நடைபெற உள்ளது.

    தீபத் திருவிழாவை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். தீப திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் வேலூர் நேதாஜி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்குவதற்காக 12 டன் எடையுள்ள காய்கறிகள் சேகரிக்கப்பட்டன.

    இதில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், பீட்ரூட், கோஸ் என அனைத்து வகையான காய்கறிகள் ஒரு லாரி முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.

    • யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
    • தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது

    வேலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடலோர மாவட்டங்களில் தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் ஒரு சில வட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று சில பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.

    பல்வேறு இடங்களில் சேரும் சகதியுமாக மாறியது. வேலூரில் முள்ளிப்பாளையம், கேகே நகர், சம்பத் நகர், சைதாப்பேட்டை, சுண்ணாம்பு கார தெரு, கொசப்பேட்டை உட்பட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தின் உள்ள பழமையான மரம் உள்ளது. இந்த மரம் ஒரு பகுதி பட்டுப்போன நிலையில் இருந்தது.

    கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக மரத்தின் பெரிய கிளைகள் நேற்று இரவு முறிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    • தூத்துக்குடியை சேர்ந்தவர்
    • அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி 6 வழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் 20-ந் தேதிதூத்துக்குடி பகுதியை சேர்ந்த தொழிலாளி மாரிச்செல்வம் (வயது 25) என்பவர் சமையலராக வேலைக்கு சேர்ந்தார்.

    இந்நிலையில் அவர் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். சுயநினைவின்றி கிடந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல இருந்தனர். அதற்குள் மாரிச்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி பள்ளிகொண்டா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோதனையில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் நெக்கினி மலை கிராமம் அருகே உள்ள ஏரிக்கொள்ளை கிராமத்தில் வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்தி ருப்பதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (வயது 40) என்பவரின் வீட்டில் சோதனை செய்த போது அங்கு உரிமம் இல்லாத 2 நாட்டு துப்பாக்கிகள் வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    பின்னர் 2 நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிந்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் இல்லம் தேடி சேவை திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, சப்- கலெக்டர் கவிதா, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ், தாசில்தார் வேண்டா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீராபென்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி வரவேற்றார்.

    இதில் பள்ளிகொண்டா பேரூராட்சி, 18 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர்.

    இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குமாரபாண்டியன், வெங்கடேசன், நகர செயலாளர் ஜாகிர் உசேன், பேரூராட்சி துணைத் தலைவர் வசிம்அக்ரம் , பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூங்காக்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்
    • குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி சாதாரண கூட்டம், மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் கலந்துகொண்டார். இதில் 104 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    10-வது வார்டு உறுப்பினர் ரமேஷ்:-

    2 வருடங்களாக எங்கள் பகுதியில் எந்த வேலையும் நடக்கவில்லை. பஸ் நிலையத்தில் போக்குவரத்து இடையூறாக சுற்றி திரியும் மாடுகளை பிடிப்பது இல்லை. தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் மட்டுமே பிடிக்கப்படுகிறது. இதனால் வாகன விபத்து அதிக அளவில் நடக்கிறது.

    தூய்மை பணியாளர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. வேலை நடக்கும் இடத்தையும் யாரும் பார்வையிடுவதில்லை. வேலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும்.

    47-வது வார்டு கவுன்சிலர் எழில்:-

    பராமரிப்பு பணிகளுக்காக பொக்லைன் எந்திரம் கேட்கும் போது, டீசல் இல்லை என்கின்றனர். நாய் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    18-வது வார்டு கவுன்சிலர் சுமதி:-

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடை பயிற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். தற்போது அங்கு நடைபயிற்சி ஈடுபட அனுமதிப்பதில்லை.

    எனவே பூங்காக்களை சீரமைத்து அங்கு நடைப்பயிற்சி செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

    அரசு பள்ளிகளில் தூய்மை பணி செய்யக்கூடிய ஆட்கள் இல்லை. அதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

    28-வார்டு கவுன்சிலர் மம்தா:-

    பூங்காக்களில் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடைபெறுகிறது.

    சமூக விரோதிகள் கூட்டமாக அமர்ந்து கொண்டு அட்டகாசம் செய்கின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காக்களை பராமரிக்க வேண்டும். குப்பை வண்டிகள் அடிக்கடி பழுதாவதால் குப்பை சேகரிப்பு பணியில் தாமதம் ஏற்படுகிறது.இதனை சரி செய்து தர வேண்டும்.

    2-வது வார்டு கவுன்சிலர் விமலா:-

    பெரிய புதூர் காலனி பகுதியில் கால்வாய் பிரச்சினை உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்றார்.

    6-வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன்:-

    எங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் மேடு பள்ளமாக உள்ளது. எனவே சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்றார்.

    45-வது வார்டு கவுன்சிலர் அஸ்மிதா:-

    எங்கள் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குப்பை எரிந்தது. அப்போது திடீரென டிரான்ஸ்பார்மர் பழுதானது. அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட போது மின்வாரிய ஊழியர் ஒருவர் பலியாகி உள்ளார். எனவே இது போன்று குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • துணைவேந்தர் ஆறுமுகம் தகவல்
    • தேர்வில் பழைய கேள்வித்தாள் விவகாரத்தில் நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளு வர்பல்கலைக்கழகம் இயங்கிவரு கிறது.

    பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 70-க்கும் மேற் பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தா ண்டு இளநிலை மற்றும்

    முதுநிலை படிப்புகளு க்கான பரு வத்தேர்வு நடந்துவரும் நிலையில், முதுநிலை கணிதவியல் பாடத்தேர் வில் கடந்த 2021-ம் ஆண்டின் கேள்வித்தாள் மீண்டும் இந்தாண்டு அப்படியே வெளியாகிசர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதுநிலை கணிதவியல் பாடத் தேர்வில் கடந்த ஏப்ரல் மாதம் கேட் கப்பட்ட கேள்வித்தாள் மீண்டும் கேட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து விசாரிக்க 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவ ள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம், செய்தியாளரிடம் கூறியதாவது:-

    பழைய கேள்வித்தாள் வெளியாகியது தொடர்பாக 3 பேர் அடங் கிய குழு அமைக்கப்பட்டு விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும், பழைய கேள்வித்தாளை மீண்டும் வழங்கிய தனியார் கல் லூரியின் பேராசிரியரிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர் மன்னிப்பு கோரி மின்னஞ்சல் அனுப்பியுள் ளார்.

    அவர் மீது 3 பேர் கொண்ட குழு அளிக்கும் அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவிதமான கல்விப் பணிகளி லும் அவரை வரும் காலங்களில் ஈடுபடுத்த மாட்டோம்.

    நிலுவையில் உள்ள தேர்வு களுக்கான கேள்வித்தாள்களில் பழைய கேள்வித்தாள் மீண்டும் வருமா? என தெரிய வில்லை. கைவசம் இருக்கும் கேள்வித் தாள்களை பிரித்து சரிபார்த்து பிரச்சி னைகளை வரவழைப்பதை விட அதை பிரிக்காமல் அப்படியே விட்டுவிடலாம்.

    அடுத்த பருவத் தேர்வுகளில் பழைய கேள்வித் தாள் வெளியாகாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள நடுபேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தென்குளக்கரை பகுதியில் நகை விற்பனை மற்றும் அடகு வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் தன்னிடம் அடகு வைத்த நகைகளை சோதனை செய்தார். அப்போது, கடந்தாண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிவா என்ற பெயரில் வாலிபர் ஒருவர் 9 பவுன் நகையை அடகு வைத்து ரூ.2.35 லட்சம் பெற்று சென்றார்.

    அந்த நகை முலாம் பூசப்பட்ட செம்பு என்று தெரியவந்தது. இதுதொடர்பாக சிவாவை தொடர்பு கொண்டபோது அவர் கொடுத்த தொலைபேசி எண் தவறானது என்பது தெரிந்தது.

    இதேபோல், கடந்த மாதம் ஒரு பெண் 5 பவுன் நகையை விற்று அதற்கு பதிலாக ரூ.2 லட்சம் மதிப்பிலான புதிய செயினை வாங்கி சென்றுள்ளார். அந்த செயினும் தங்க முலாம் பூசப்பட்ட செம்பு என்பது தெரிந்தது. இதனால், ரமேஷூக்கு மொத்தம் ரூ.4.35 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால், அதிர்ச்சி அடைந்த ரமேஷ் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் ரமேஷின் கடையில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏற்கனவே ஒருமுறை குடியாத்தம் குமரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டார்‌.
    • 2-வது முறையாக குடியாத்தம் குமரன் நீக்கப்பட்டிருப்பது வேலூர் மாவட்ட தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என சரளமாக மேடையில் பேசுவார்.

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தார்.

    கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அவர் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

    கழக கொள்கைப் பரப்பு துணைச்செயலாளர் குடியாத்தம் குமரன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் எனக் கூறியுள்ளார்.

    இதே போல ஏற்கனவே ஒருமுறை குடியாத்தம் குமரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டார் .

    2-வது முறையாக குடியாத்தம் குமரன் நீக்கப்பட்டிருப்பது வேலூர் மாவட்ட தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து தி.மு.க.வினர் கூறுகையில்:-

    குடியாத்தம் குமரன் சமூக வலைதளங்களில் எதிர்கட்சிகளை அவதூறாக பேசி வந்தார். கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ரெயில் பெட்டியில் ஏறி கழிவறை கதவை உடைத்தனர்.
    • வாலிபர் பெங்களுருக்கு வீட்டு வேலைக்காக நண்பர்களுடன் வந்துள்ளார்.

    வேலூர்:

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து பெங்களூர் செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் வழியாக புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

    வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையம் அருகே வந்தபோது எஸ்-8 பெட்டியில் இருந்த பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றார். அவர் கழிவறையை உட்புறமாக பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாக கழிவறை பூட்டப்பட்டிருந்ததால் பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவர்கள் கதவைத் தட்டி உள்ளே யார் இருக்கிறார்கள் என சத்தமிட்டனர். ஆனால் உள்ளே இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இதனால் பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

    அதற்குள் ரெயில் காட்பாடி வந்தது. அங்கிருந்த ரெயில்வே போலீசாரிடம் பயணிகள் இது குறித்து தெரிவித்தனர். போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ரெயில் பெட்டியில் ஏறி கழிவறை கதவை உடைத்தனர்.

    அங்கு வாலிபர் ஒருவர் பிளாஸ்டிக் கயிறால் தூக்கட்டு இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் நேபாளத்தை சேர்ந்த வாலிபர் சந்திரஜித் என்பதும் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

    வாலிபர் பெங்களுருக்கு வீட்டு வேலைக்காக நண்பர்களுடன் வந்துள்ளார்.

    இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடியில் 15 நிமிடத்திற்கு மேல் நின்றது. ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா?

    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகள் பிரித்திங்கா ( வயது 15).

    இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் மாணவி பள்ளிக்கு சென்றார். பள்ளியில் இருந்து மதியம் 1 மணி அளவில் வீட்டுக்கு செல்வதாக, சக மாணவிகளிடம் கூறிவிட்டு சென்றார்.

    நேற்று மாலை நீண்ட நேரமாகியும் பிரித்திங்கா வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த அவரது பெற்றோர் அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர் எங்கும் அவர் கிடைக்கவில்லை.

    குருநாதபுரம் ரெயில் தண்டவாளம் அருகே மாணவியின் புத்தகப் பை மற்றும் செருப்பு உள்ளிட்டவை கிடந்தன.

    இது குறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர், விரைந்து சென்று அவற்றை பறிமுதல் செய்து தேடி வந்தனர்.

    மேலும் குடியாத்தம் டவுன் போலீசில், மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை குடியாத்தம்-மேல்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே மாணவி பிரித்திங்கா பள்ளி சீருடையில் ரெயிலில் அடிபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×