search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
    X

    நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

    • சோதனையில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் நெக்கினி மலை கிராமம் அருகே உள்ள ஏரிக்கொள்ளை கிராமத்தில் வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்தி ருப்பதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (வயது 40) என்பவரின் வீட்டில் சோதனை செய்த போது அங்கு உரிமம் இல்லாத 2 நாட்டு துப்பாக்கிகள் வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    பின்னர் 2 நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிந்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.

    Next Story
    ×