என் மலர்tooltip icon

    வேலூர்

    • துணைவேந்தர் ஆறுமுகம் தகவல்
    • தேர்வில் பழைய கேள்வித்தாள் விவகாரத்தில் நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளு வர்பல்கலைக்கழகம் இயங்கிவரு கிறது.

    பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 70-க்கும் மேற் பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தா ண்டு இளநிலை மற்றும்

    முதுநிலை படிப்புகளு க்கான பரு வத்தேர்வு நடந்துவரும் நிலையில், முதுநிலை கணிதவியல் பாடத்தேர் வில் கடந்த 2021-ம் ஆண்டின் கேள்வித்தாள் மீண்டும் இந்தாண்டு அப்படியே வெளியாகிசர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதுநிலை கணிதவியல் பாடத் தேர்வில் கடந்த ஏப்ரல் மாதம் கேட் கப்பட்ட கேள்வித்தாள் மீண்டும் கேட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து விசாரிக்க 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவ ள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம், செய்தியாளரிடம் கூறியதாவது:-

    பழைய கேள்வித்தாள் வெளியாகியது தொடர்பாக 3 பேர் அடங் கிய குழு அமைக்கப்பட்டு விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும், பழைய கேள்வித்தாளை மீண்டும் வழங்கிய தனியார் கல் லூரியின் பேராசிரியரிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர் மன்னிப்பு கோரி மின்னஞ்சல் அனுப்பியுள் ளார்.

    அவர் மீது 3 பேர் கொண்ட குழு அளிக்கும் அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவிதமான கல்விப் பணிகளி லும் அவரை வரும் காலங்களில் ஈடுபடுத்த மாட்டோம்.

    நிலுவையில் உள்ள தேர்வு களுக்கான கேள்வித்தாள்களில் பழைய கேள்வித்தாள் மீண்டும் வருமா? என தெரிய வில்லை. கைவசம் இருக்கும் கேள்வித் தாள்களை பிரித்து சரிபார்த்து பிரச்சி னைகளை வரவழைப்பதை விட அதை பிரிக்காமல் அப்படியே விட்டுவிடலாம்.

    அடுத்த பருவத் தேர்வுகளில் பழைய கேள்வித் தாள் வெளியாகாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள நடுபேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தென்குளக்கரை பகுதியில் நகை விற்பனை மற்றும் அடகு வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் தன்னிடம் அடகு வைத்த நகைகளை சோதனை செய்தார். அப்போது, கடந்தாண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிவா என்ற பெயரில் வாலிபர் ஒருவர் 9 பவுன் நகையை அடகு வைத்து ரூ.2.35 லட்சம் பெற்று சென்றார்.

    அந்த நகை முலாம் பூசப்பட்ட செம்பு என்று தெரியவந்தது. இதுதொடர்பாக சிவாவை தொடர்பு கொண்டபோது அவர் கொடுத்த தொலைபேசி எண் தவறானது என்பது தெரிந்தது.

    இதேபோல், கடந்த மாதம் ஒரு பெண் 5 பவுன் நகையை விற்று அதற்கு பதிலாக ரூ.2 லட்சம் மதிப்பிலான புதிய செயினை வாங்கி சென்றுள்ளார். அந்த செயினும் தங்க முலாம் பூசப்பட்ட செம்பு என்பது தெரிந்தது. இதனால், ரமேஷூக்கு மொத்தம் ரூ.4.35 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால், அதிர்ச்சி அடைந்த ரமேஷ் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் ரமேஷின் கடையில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏற்கனவே ஒருமுறை குடியாத்தம் குமரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டார்‌.
    • 2-வது முறையாக குடியாத்தம் குமரன் நீக்கப்பட்டிருப்பது வேலூர் மாவட்ட தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என சரளமாக மேடையில் பேசுவார்.

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தார்.

    கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அவர் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

    கழக கொள்கைப் பரப்பு துணைச்செயலாளர் குடியாத்தம் குமரன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் எனக் கூறியுள்ளார்.

    இதே போல ஏற்கனவே ஒருமுறை குடியாத்தம் குமரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டார் .

    2-வது முறையாக குடியாத்தம் குமரன் நீக்கப்பட்டிருப்பது வேலூர் மாவட்ட தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து தி.மு.க.வினர் கூறுகையில்:-

    குடியாத்தம் குமரன் சமூக வலைதளங்களில் எதிர்கட்சிகளை அவதூறாக பேசி வந்தார். கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ரெயில் பெட்டியில் ஏறி கழிவறை கதவை உடைத்தனர்.
    • வாலிபர் பெங்களுருக்கு வீட்டு வேலைக்காக நண்பர்களுடன் வந்துள்ளார்.

    வேலூர்:

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து பெங்களூர் செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் வழியாக புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

    வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையம் அருகே வந்தபோது எஸ்-8 பெட்டியில் இருந்த பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றார். அவர் கழிவறையை உட்புறமாக பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாக கழிவறை பூட்டப்பட்டிருந்ததால் பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவர்கள் கதவைத் தட்டி உள்ளே யார் இருக்கிறார்கள் என சத்தமிட்டனர். ஆனால் உள்ளே இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இதனால் பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

    அதற்குள் ரெயில் காட்பாடி வந்தது. அங்கிருந்த ரெயில்வே போலீசாரிடம் பயணிகள் இது குறித்து தெரிவித்தனர். போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ரெயில் பெட்டியில் ஏறி கழிவறை கதவை உடைத்தனர்.

    அங்கு வாலிபர் ஒருவர் பிளாஸ்டிக் கயிறால் தூக்கட்டு இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் நேபாளத்தை சேர்ந்த வாலிபர் சந்திரஜித் என்பதும் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

    வாலிபர் பெங்களுருக்கு வீட்டு வேலைக்காக நண்பர்களுடன் வந்துள்ளார்.

    இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடியில் 15 நிமிடத்திற்கு மேல் நின்றது. ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா?

    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகள் பிரித்திங்கா ( வயது 15).

    இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் மாணவி பள்ளிக்கு சென்றார். பள்ளியில் இருந்து மதியம் 1 மணி அளவில் வீட்டுக்கு செல்வதாக, சக மாணவிகளிடம் கூறிவிட்டு சென்றார்.

    நேற்று மாலை நீண்ட நேரமாகியும் பிரித்திங்கா வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த அவரது பெற்றோர் அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர் எங்கும் அவர் கிடைக்கவில்லை.

    குருநாதபுரம் ரெயில் தண்டவாளம் அருகே மாணவியின் புத்தகப் பை மற்றும் செருப்பு உள்ளிட்டவை கிடந்தன.

    இது குறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர், விரைந்து சென்று அவற்றை பறிமுதல் செய்து தேடி வந்தனர்.

    மேலும் குடியாத்தம் டவுன் போலீசில், மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை குடியாத்தம்-மேல்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே மாணவி பிரித்திங்கா பள்ளி சீருடையில் ரெயிலில் அடிபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, வேலூர் மாவட்ட நூலக ஆணை குழு சார்பில் வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் 56வது தேசிய நூலக வார விழா நடைபெற்று வருகிறது.

    விழாவை கடந்த 14-ந்தேதி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    உரைக்களம் நிகழ்ச்சிக்கு காட்பாடி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் கே.ஆர்.ரவி தலைமை தாங்கி பேசினார்.

    வழக்கறிஞர் இந்துமதி, வருவாய்த்துறை சேர்ந்த சிவ.நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட மைய நூலக நல் நூலகர் ஏ.கணேசன் வரவேற்றார்.

    திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை பதிவாளர் எஸ்.ரமேஷ் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். உரைகளம் நிகழ்ச்சியில் கொஞ்சம் சிந்திக்கலாமா என்ற தலைப்பில் கவிஞர் ச.லக்குமிபதி, வாசிக்கலாம் வாங்க என்ற தலைப்பில் கவிஞர் பொன். செல்வகுமார், யோசிக்கலாம் நீங்க என்ற தலைப்பில் கவிஞர் எஸ்.கே.எம்.மோகன் ஆகியோர் பேசினர்.

    மக்கள் கவிஞர் கண்ணதாசன் என்ற நூலை கவிஞர் கோ.சித்ரா அறிமுகப்படுத்தி பேசினார். உயரபடி என்ற தலைப்பில் வாசகர் காமராஜ் கவிதை வாசித்தார்.

    விழாவில் மாவட்ட மைய நூலக கண்காணிப்பாளர் சிவகுமார், காந்திநகர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வேலூர் மாவட்ட மையம் நூலகர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். ஓய்வு பெற்ற நூலகர் ரவி விழாவை தொகுத்து வழங்கினார்.

    • மன உளைச்சலில் காணப்பட்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி, முகுந்தன் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் சூர்யா (வயது 19). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தற்போது கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த தேர்வை சரியாக எழுதவில்லை என, சூர்யா மன உளைச்சலில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சூர்யா தனது வீட்டில், புடவை கொண்டு தூக்கில் தொங்கினார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரிசோதித்து இறந்ததாக தகவல்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த சதுப்பேரி, பெரிய அகமேடு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 28). இவர் மூலை கேட்டில் இருந்து கந்தநேரி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த பைக் மீது சக்திவேல் ஓட்டிச் சென்ற பைக் மோதியது.

    இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட சக்திவேல் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காட்பாடி அரசு விடுதியில் இருந்து மாயம்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் அரசு விடுதியில் ஒப்படைப்பு

    வேலூர்:

    காட்பாடி செங்குட்டையில் அன்னை சத்தியபாமா அரசினர் விடுதி உள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பெண் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இவர்கள் காட்பாடியில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற 8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் மாலையில் விடுதிக்கு திரும்பவில்லை.

    இதுகுறித்து விடுதி காப்பாளர் சாந்தி காட்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவகளை தேடி வந்தனர்.

    மாணவிகள் நேற்று மாலை வேலூர் மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது.

    உடனடியாக விரைந்து சென்ற போலீசார் 2 மாணவிகளையும் மீட்டனர். மாணவிகளை காட்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் அரசு விடுதியில் ஒப்படைக்கப்பட்டனர்.

    • இசை, நடனங்களில் அசத்தினர்
    • ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஓட்டேரியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்தி றனை ஊக்குவிக்கும் வகையில் கலைத் திருவிழா இன்று நடந்தது.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் நந்தகுமார் எம்.எல்.ஏ, வேலூர் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழகம் முழுவதுமிருந்து அரசு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    அவர்கள் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், தமிழ்மொழியின் சிறப்பு ஆகியவைகள் குறித்து ஆடல், பாடல், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற போட்டிகளில் திறமைகளை வெளிக்காட்டினர்.

    மேலும் விவசாயத்தை காக்கும் வகையில் ஆடல்கள், சிறுதானிய தமிழ் பாரம்பரிய உணவுகளான சாமை, தினை, கேழ்வரகு ஆகியவை களின் நன்மைகள் பிட்சா, பர்கர் போன்றவை களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் வில்லுபாட்டு மூலம் விளக்கினர்.

    மேலும் கும்மியாட்டம், டிரம்ஸ் இசைக்கருவி இசைத்தல், தப்பு இசை ஆகியவைகளும் இசைத்து காட்டி மாணவர்கள் தனித்திறனை வெளிப்ப டுத்தி அசத்தினார்கள்.

    விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில், கலையில் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் இக்கலை ப்போட்டிகள் நடக்கிறது.

    மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டி சிறந்து விளங்கினாலும் இது போன்ற கலைகளிலும் தனித்திறனை வெளிப்ப டுத்தும் வகையில் செயல்பட வேண்டும் தமிழகம் கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்குகிறது அதை போல் கலைகளிலும் சிறந்து விளங்கவே இது போன்ற போட்டிகள் நடக்கிறது என பேசினார்.

    • குறை தீர்வு கூட்டத்தில் புகார்
    • வங்கி மேலாளர் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. உதவி கலெக்டர் கவிதா உள்ளிட அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.

    ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்.என். பாளையம், பச்சையப்பன் கவுண்டர் விரிவு பகுதியில் வசித்து வருகிறோம். அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு பல முறை மனு அளித்து உள்ளோம். ஆனால் இதுவரை இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவில்லை.

    இதனால் நாங்கள் பரிதவிக்கிறோம். நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    செதுவாலை பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் கைக்குழந்தைகளுடன் வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் செதுவாலை ஏரியில் வசித்து வருகிறோம். தற்போது செதுவாலை ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். மழைகாலங்களில் சேறும், சகதியும் வசிக்கும் நிலை உள்ளது.

    நாங்கள் அனைவரும் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறோம். எங்களால் அங்கு கைக்குழந்தைகளுடன் குடியிருக்க முடியவில்லை. ஏற்கனவே ஏரியில் வசித்த 5 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டனர். எனவே எங்களுக்கு வீட்டுமனை பட்டாவுடன் வீடு கட்டி தர வேண்டும். மேலும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியிருந்தனர்.

    வேலூர் நம்பிரா ஜபுரத்தை சேர்ந்த வேண்டா கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    நான் விரும்பாட்சி புரத்தில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்து இருக்கிறேன். எனது வங்கிக் கணக்கிற்கு கடந்த 3 மாதமாக மகளிர் உதவித்தொகை வந்துள்ளது. மேலும் எனது மகள் திருமணத்திற்கு வங்கி கணக்கில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் பணம் உள்ளி ட்டவை எடுக்க ப்பட்டாத தகவல் வந்தது.

    இது குறித்து வங்கியில் சென்று கேட்ட போது, எனது வங்கிக் கணக்கிலேயே மற்றொருவருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது தெரிந்தது. இது குறித்து வங்கி மேலாளரிடம் கேட்டபோது அவர் என்னை அலைக்கழித்து வருகிறார். எனவே எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
    • போலீசார் தண்ணீரை ஊற்றி சமரசம் செய்தனர்

    வேலூர்:

    குடியாத்தம்- காட்பாடி சாலையில் உள்ள கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 45) இவரது மகன்கள் பரத் (23) மணிகண்டன் (20).

    செல்வி இன்று தனது மகன்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்தார்.

    கூட்டம் நடைபெரும் காயிதே மில்லத் அரங்கம் வெளியே திடீரென பரத் செல்வி ஆகியோர் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது பெண் போலீசார் ஒருவர் தவறி கீழே விழுந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக செல்வியின் இடது காதுடன் கம்மல் அறுந்து கீழே விழுந்தது. தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி சமரசம் செய்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    நாங்கள் வசித்து வந்த வீட்டின் அருகே பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் எங்கள் இடத்தில் சுவரை எழுப்பினர். இதனால் நாங்கள் அவதிப்பட்டோம்.

    அருகே இருந்த கோவில் நிலத்தை பயன்படுத்தி வந்தோம். கோவில் சார்பில் அந்த நிலத்தை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கின்றனர்.

    இதனால் எங்களுக்கு பாதையில்லாத நிலை உள்ளது. நாங்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட சுவரை இடித்து அகற்ற வேண்டும். எங்களுக்கு பாதை அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×