என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்25 Nov 2023 8:01 AM GMT (Updated: 25 Nov 2023 8:04 AM GMT)
- சர்க்கரை வியாதியால் அவதியடைந்து வந்தார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த ஊசூர், ஜி.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 48). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அசோக் குமாருக்கு சர்க்கரை வியாதி இருந்ததால் அவரது வலது காலில் விரல்கள் துண்டிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்த அசோக் குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.
கடந்த 16-ந் தேதி அசோக் குமார் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அவரது சகோதரி லலிதா, அசோக் குமாரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அசோக் குமார் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X