search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திகை தீப விளக்குகள் ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்
    X

    கார்த்திகை தீப விளக்குகள் ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்

    • 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கின்றன
    • நாளை கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட உள்ளது

    வேலூர்:

    கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றியவுடன் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் வீடுகள் தூரம் ஒரே நேரத்தில் தீப விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மகாதீபம் பிரகாசிக்கும் 11 நாட்களும் பொதுமக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அனைத்து இல்லங்களிலும் தீபங்கள் ஒளிரும். இதனையொட்டி திருவண்ணாமலை வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கார்த்திகை தீப விளக்குகள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர்.

    மண்பானைகள், கலைநயமிக்க கைவினைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் களிமண்ணில் வடிவமை க்கப்பட்ட அகல்விளக்குகள் குவிந்திருக்கின்றன. சாலை ஓரங்களிலும் அகல்விளக்கு கடைகள் அமைக்க ப்பட்டுள்ளன.

    விளக்குகள் 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கி ன்றன. மண் குத்துவிளக்கு, தட்டு விளக்கு, சரவிளக்கு, 5 முக விநாயகர் விளக்கு, தேங்காய் வடிவ விளக்கு என்று ஒவ்வொரு விளக்கி ற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

    தற்போது மெழுகு விளக்குகள், கலர் களிமண் விளக்குகள், ரெடிமேட் நெய் விளக்குகள், பீங்கான் விளக்குகள் என பல்வேறு மாடல்களில் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    நாளை கார்த்திகை தீப திருவிழா கொண்டா டப்படுவதால் கார்த்திகை தீப விளக்குகளை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    மேலும் கார்த்திகை தீப திருவிழாவிற்கு புட்டு, கொழுக்கட்டை போன்றவை செய்ய தேவையான பொருட்களும் விற்பனை அதிகரித்து உள்ளது.

    Next Story
    ×