என் மலர்tooltip icon

    வேலூர்

    • நிலை தடுமாறி அருகில் உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்தது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு வேலூர் ஆவின் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

    அதன் படி இன்று காலை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ஆயிரம் லிட்டர் பாலை, டேங்கர் லாரி மூலம் கொண்டுவரப்பட்டது.

    தெள்ளூர் கூட்ரோடு சிவராஜ் நகர் அருகே லாரி வந்தபோது திடீரென ஒருவர் பைக்கில் குறிக்கே வந்தார். அவர் மீது லாரி மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

    அப்போது லாரி நிலை தடுமாறி அருகில் உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. அப்போது லாரியில் இருந்த பால் கீழே கொட்டி ஆறாக ஓடியது. இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழைக்காலத்தில் பரிதவிக்கும் அவலம்
    • மாற்று இடம் கேட்டு அரசிடம் கோரிக்கை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், வல்லண்டராம் பகுதியில் உள்ள செதுவாலை ஏரியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் 3 தலைமுறையாக இந்த ஏரியில் சிறிய குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர்.

    இவர்கள் அமைத்துள்ள இந்த சிறிய குடிசையில் உள்ளேயே சமையல் செய்வதோடு, அதிலேயே படுத்து உறங்குவது என இவர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் குடியிருக்கும் பகுதி ஏரி என்பதால் மழை பெய்யும் போதெல்லாம் இந்த ஏரி நிரம்பி இவர்கள் கட்டியிருக்கும் குடிசைக்குள் தண்ணீர் புகுந்து முழுமையாக சூழ்ந்து விடுகிறது.

    அப்போது குழந்தைகளுடன் அந்தப் பகுதி மக்கள் பரிதவிக்கின்றனர். அந்த சமயத்தில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து விட்டால், வெளியேறும் வரை அதிலேயே மிகவும் சிரமத்துடன் வாழும் பரிதாப நிலை நீடிக்கிறது.

    மழைக்காலங்களில் நோய் தொற்று காரணமாகவும், விஷ பூச்சி கடித்து குழந்தை உயிரிழந்தது என அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

    விறகு வெட்டியும், சாலைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, அதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு இவர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

    3 தலைமுறையாக ஏரியில் வசிக்கும் இவர்கள், மாற்று இடம் கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இவர்கள் வாழ்வதற்கு ஏற்றது போல் மாற்று இடம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • வேலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
    • போலி நகையை அடகு வைத்து கடன் பெற்ற வழக்கு

    வேலூர்:

    வேலூர் அண்ணாசாலையில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 2008- ஆண்டு காலக்கட்டத்தில் உதவி மேலாளர்களாக தர்மராஜ் (வயது 69), கிறிஸ்டோபர் (60) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

    இந்த வங்கியில் வேலூர் வேலப்பாடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (60) என்பவர் வங்கி கணக்கு வைத்திருந்தார். அவர் வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.11 லட்சத்து 81 ஆயிரம் கடன் பெற்றார்.

    இதையடுத்து வங்கி சார்பில் ஆய்வு செய்யப்பட்டதில் அவர் வைத்த நகைகள் போலியானது என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலி நகைகளை வைத்து கடன்பெற்றதாக சீனிவாசன் மீது வேலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    விசாரணையில் சீனிவாசனுக்கு உடந்தையாக உதவி மேலாளர்களான தர்மராஜ், கிறிஸ்டோபர் ஆகியோர் செயல்பட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு வேலூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது. இந்தநிலையில் மாஜிஸ்திரேட்டு திருமால் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் இந்திரா மிசையல் ஆஜராகி வாதாடினார்.

    இந்த வழக்கில் சீனிவாசனுக்கு ஒரு குற்றப்பிரிவுக்கு தலா 2 ஆண்டு வீதம் 5 பிரிவுகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு பிரி வுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வீதம் 5 பிரிவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், அவருக்கு உடந்தையாக இருந்த வங்கி உதவி மேலாளர்கள் இருவருக்கும் ஒரு பிரிவுக்கு தலா 2 ஆண்டு வீதம் 7 பிரிவுகளுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்ட னையும், ஒரு பிரிவுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 7 பிரிவுக்கு ரூ.70 ஆயிரம் அபராதமும் விதிக் கப்பட்டது. இந்த தண்ட னையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

    • பராமரிப்பு பணி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
    • செயற்பொறியாளர்கள் தகவல்

    வேலூர்:

    வேலூர் மின்பகிர்மான வட்டம் சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்புநகர், ஸ்ரீராம்நகர், டபுள்ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை, சி.எம். சி.காலனி, எல்.ஐ.சி.காலனி, காகிதப்பட்டறை, இ.பி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்ப டுகிறது.

    அதேபோல வடுகந்தாங்கல் பகுதியிலும் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணி கள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பி.கே.புரம், கே.வி.குப்பம், செஞ்சி, லத்தேரி, திருமணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இந்த தகவலை செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய அற்புதராஜ், பரிமளா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • உதவி கலெக்டர் விசாரணை
    • வீட்டிற்கு சென்று வட்டி, கடன் தொகையை கேட்டு அடிக்கடி தொந்தரவு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பிச்சனூர் காளியம்மன்பட்டி சாமியார் மலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 28), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோனிஷா (23). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    தினேஷ்குமார், மோனிஷா ஆகிய இருவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளனர். அந்த பெண் கந்து வட்டி வசூலித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ரூ.15 ஆயிரத்திற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ரூ.1,500 வட்டியாக செலுத்தி வந்துள்ளனர். கூலி வேலை செய்து வருவதால் தினேஷ்குமாரால் வட்டி கட்ட முடியாமல் மீண்டும் கடன் வாங்கி உள்ளார்.

    இந்த நிலையில் கந்துவட்டிக்கு கடன் கொடுத்த அந்த பெண் அடிக்கடி தினேஷ்கு மார் வீட்டிற்கு சென்று வட்டி மற்றும் கடன் தொகையை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததுடன், தெருவில் நின்று ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த மோனிஷா வீட்டில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட தினேஷ்குமார் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் மோனிஷாவின் தற்கொலை குறித்து குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார்.

    அப்போது கந்துவட்டி கேட்டு ஆபாசமாக பேசியதால் தற்கொலை செய்து கொண்ட தாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் உறுதியளித்தார்.

    • சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு
    • வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் எச்சரிக்கை

    வேலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற வட மாவட்டங்களிலும், நெல்லை, தென்காசி போன்ற தென்மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.

    பருவமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து காக்கவும், அடுத்த 2 மாதங்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் என்பதால் அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர்களுக்கு, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவ மழைகாலத்தில் தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    அதன்படி மாவட்ட அளவில் சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம். ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அத்தகைய கட்டமைப்பை தயாராக வைத்திருக்க வேண்டும். அதனுடன், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால், ஆஸ்பத்திரி வளாகங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

    குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்வதுடன் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிப்பதும் முக்கியம். புயல் மற்றும் கன மழைக்கு முன்பாகவே விரைவு சிகிச்சை குழுக்களை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும்.

    அதேபோன்று கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு சுகாதார குழுக்களையும் அமைக்க வேண்டும்.

    மருத்துவக் கட் டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்தல் அவசியம். கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற் கொள்ள வேண்டும்.

    பருவ மழைக்குப் பிறகு ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, மற்றும் நோய்த் தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத்துறைக்கு அனுப்ப வேண்டும்.

    காய்ச்சல் பாதிப்புகள் அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், தேவைப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்பலாம். பருவகால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து சுகாதார பணிகள் துணை இயக்குனர்களும் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு
    • அன்னதானம் வழங்கப்படுகிறது

    வேலூர்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தீப திருவிழா நடைபெற உள்ளது.

    தீபத் திருவிழாவை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். தீப திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் வேலூர் நேதாஜி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்குவதற்காக 12 டன் எடையுள்ள காய்கறிகள் சேகரிக்கப்பட்டன.

    இதில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், பீட்ரூட், கோஸ் என அனைத்து வகையான காய்கறிகள் ஒரு லாரி முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.

    • யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
    • தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது

    வேலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடலோர மாவட்டங்களில் தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் ஒரு சில வட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று சில பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.

    பல்வேறு இடங்களில் சேரும் சகதியுமாக மாறியது. வேலூரில் முள்ளிப்பாளையம், கேகே நகர், சம்பத் நகர், சைதாப்பேட்டை, சுண்ணாம்பு கார தெரு, கொசப்பேட்டை உட்பட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தின் உள்ள பழமையான மரம் உள்ளது. இந்த மரம் ஒரு பகுதி பட்டுப்போன நிலையில் இருந்தது.

    கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக மரத்தின் பெரிய கிளைகள் நேற்று இரவு முறிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    • தூத்துக்குடியை சேர்ந்தவர்
    • அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி 6 வழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் 20-ந் தேதிதூத்துக்குடி பகுதியை சேர்ந்த தொழிலாளி மாரிச்செல்வம் (வயது 25) என்பவர் சமையலராக வேலைக்கு சேர்ந்தார்.

    இந்நிலையில் அவர் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். சுயநினைவின்றி கிடந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல இருந்தனர். அதற்குள் மாரிச்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி பள்ளிகொண்டா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோதனையில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் நெக்கினி மலை கிராமம் அருகே உள்ள ஏரிக்கொள்ளை கிராமத்தில் வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்தி ருப்பதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (வயது 40) என்பவரின் வீட்டில் சோதனை செய்த போது அங்கு உரிமம் இல்லாத 2 நாட்டு துப்பாக்கிகள் வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    பின்னர் 2 நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிந்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் இல்லம் தேடி சேவை திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, சப்- கலெக்டர் கவிதா, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ், தாசில்தார் வேண்டா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீராபென்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி வரவேற்றார்.

    இதில் பள்ளிகொண்டா பேரூராட்சி, 18 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர்.

    இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குமாரபாண்டியன், வெங்கடேசன், நகர செயலாளர் ஜாகிர் உசேன், பேரூராட்சி துணைத் தலைவர் வசிம்அக்ரம் , பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூங்காக்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்
    • குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி சாதாரண கூட்டம், மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் கலந்துகொண்டார். இதில் 104 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    10-வது வார்டு உறுப்பினர் ரமேஷ்:-

    2 வருடங்களாக எங்கள் பகுதியில் எந்த வேலையும் நடக்கவில்லை. பஸ் நிலையத்தில் போக்குவரத்து இடையூறாக சுற்றி திரியும் மாடுகளை பிடிப்பது இல்லை. தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் மட்டுமே பிடிக்கப்படுகிறது. இதனால் வாகன விபத்து அதிக அளவில் நடக்கிறது.

    தூய்மை பணியாளர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. வேலை நடக்கும் இடத்தையும் யாரும் பார்வையிடுவதில்லை. வேலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும்.

    47-வது வார்டு கவுன்சிலர் எழில்:-

    பராமரிப்பு பணிகளுக்காக பொக்லைன் எந்திரம் கேட்கும் போது, டீசல் இல்லை என்கின்றனர். நாய் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    18-வது வார்டு கவுன்சிலர் சுமதி:-

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடை பயிற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். தற்போது அங்கு நடைபயிற்சி ஈடுபட அனுமதிப்பதில்லை.

    எனவே பூங்காக்களை சீரமைத்து அங்கு நடைப்பயிற்சி செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

    அரசு பள்ளிகளில் தூய்மை பணி செய்யக்கூடிய ஆட்கள் இல்லை. அதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

    28-வார்டு கவுன்சிலர் மம்தா:-

    பூங்காக்களில் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடைபெறுகிறது.

    சமூக விரோதிகள் கூட்டமாக அமர்ந்து கொண்டு அட்டகாசம் செய்கின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காக்களை பராமரிக்க வேண்டும். குப்பை வண்டிகள் அடிக்கடி பழுதாவதால் குப்பை சேகரிப்பு பணியில் தாமதம் ஏற்படுகிறது.இதனை சரி செய்து தர வேண்டும்.

    2-வது வார்டு கவுன்சிலர் விமலா:-

    பெரிய புதூர் காலனி பகுதியில் கால்வாய் பிரச்சினை உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்றார்.

    6-வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன்:-

    எங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் மேடு பள்ளமாக உள்ளது. எனவே சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்றார்.

    45-வது வார்டு கவுன்சிலர் அஸ்மிதா:-

    எங்கள் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குப்பை எரிந்தது. அப்போது திடீரென டிரான்ஸ்பார்மர் பழுதானது. அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட போது மின்வாரிய ஊழியர் ஒருவர் பலியாகி உள்ளார். எனவே இது போன்று குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×