என் மலர்
வேலூர்
- மாநகராட்சி நடவடிக்கை
- அதிகாரிகள் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிந்து வருகிறது. நாளுக்கு நாள் மாடுகள் சுற்றித்திரியும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இருப்பினும் தொடர்ந்து மாடுகளை அதன் உரிமையாளர்கள் வெளியே அவிழ்த்து விடுகின்றனர்.
இதற்கிடையில் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுத்திரிந்து வருவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் சென்றது.
அதன் அடிப்படையில் இன்று காலை 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்து தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பழைய பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பழைய பஸ்நிலையத்தில் சுற்றி திரிந்த 5 மாடுகளை ஊழியர்கள் பிடித்து வாகனத்தில் ஏற்றினர். பிடிபட்ட மாடுகளை கோட்டை பின்புறம் உள்ள கோசாலாவில் மாடுகள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து மாடுகள் பிடிக்கப்பட உள்ளது என்றும் மாடு வைத்திருக்கும் உரிமையாளர்கள் மாடுகளை சாலைகளில் விட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
- தடுப்பு நடவடிக்கை தீவிரம்
- காய்ச்சலால் அவதி-எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் தற்போது பருவ மழை காரணமாக சளி, இருமல், காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக குழந்தை களுக்கு அதிகளவில் சளி ,காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி குடியாத்தம், பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரி களில் காய்ச்சல் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளன.
இன்று ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் 227 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 92 பேர், குடியாத்தத்தில் 10 பேர் பேரணாம்பட்டில் 2 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது தவிர தனியார் ஆஸ்பத்திரிகளில் 123 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 8 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பை தடுக்க பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இது குறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பானுமதி கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் டெங்கு பரவலை தடுக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெங்கு மற்றும் காய்ச்சல் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் ஆர் ஆர் டி குழுவினர் ஆய்வு செய்து சுகாதார பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இது தவிர சனிக்கிழமை தோறும் வேலூர் மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
- மாணவர்கள் அவதி
- சீராக உள்ளதா என கண்காணித்து எடுத்து வர பயணிகள் வலியுறுத்தல்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த வரதலம் பட்டு பகுதியில் இருந்து அப்புக்கல், இளவம்பாடி வழியாக வேலூர் செல்லக்கூடிய அரசு டவுன் பஸ் இளவம்பாடி அடுத்த பொய்கை மோட்டூர் பகுதியில் இன்று காலை சென்று கொண்டிருந்தது.
இதில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பஸ் பழுதாகி பாதி வழியிலேயே நின்றது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டனர்.
அந்த வழியாக வந்த பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சிலர் சென்றனர். நடுவழியில் நின்ற பஸ்சை ஒரு மணி நேரம் பழுது பார்த்து எடுத்துச் சென்றனர்.
இனி இதுபோல சம்பவங்கள் ஏற்படாமல் பஸ் சீராக உள்ளதா என கண்காணித்து எடுத்து வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
- சீரமைக்க வலியுறுத்தல்
- பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த மகமதுபுரம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி பழுதடைந்து பயன்படாத வகையில் உள்ளது.
மேலும் அப்பகுதியில் 3-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் இதேபோல் பழு தடைந்து இருப்பதா கவும், இதனால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
மேலும் குடிநீர் செல்லும் குழாய்கள் ஆங்காங்கே பழுதடைந்தும், உடைந்தும் குடிநீர் வீனாக வெளியேறுகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
எனவே அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க பழுதடைந்து கிடக்கும் குடிநீர் தொட்டி யை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாலிபர் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்ததால் வாலிபர் மீது போலீசில் புகார் செய்தனர்.
- டி.ஐ.ஜி முத்துசாமி மாணவி பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டதை கண்டு தெற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் வேலூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர். இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக மாணவியை காதலித்து வந்தார்.
வாலிபர் மாணவியை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து மாணவி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் வாலிபரை கண்டித்தனர்.
இருப்பினும் வாலிபர் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்ததால் வாலிபர் மீது நேற்று மாலை வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று மாணவி தனது பெற்றோருடன் தெற்கு போலீஸ் நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த டி.ஐ.ஜி முத்துசாமி மாணவி பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டதை கண்டு தெற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். மாணவியை சமாதானம் செய்தனர். பின்னர் மாணவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காலதாமதமாக சென்றன.
- அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் ரெயில் நிலையம் அருகில் இன்று காலை 10.20 மணி முதல் மதியம் 1.50 மணி வரை சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.
இதன் காரணமாக வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து அரக்கோணம் செல்லும் விரைவு ரெயில், கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மைசூரில் இருந்து சென்னை வரை செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ், பெங்களூரில் இருந்து தானாபூர் செல்லும் எக்ஸ்பிரஸ், மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காலதாமதமாக சென்றன.
அதே போன்று காட்பாடி மார்க்கமாக செல்லும் தானாபூர்-பெங்களூர் சூப்பர் பாஸ்ட் ரெயில், சென்னையிலிருந்து ஷீரடி செல்லும் எக்ஸ்பிரஸ், ஹவுரா ரெயில் ஆகியவை காலதாமதமாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் காலை 10.20 மணிக்கு சிக்னல் பராமரிப்பு பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே திருவலத்தில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கியதால் சென்னையில் இருந்து காட்பாடி வழியாக கோவை செல்லும் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரெயில்கள் காலதாமதமாக சென்றன.
அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.
குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே பராமரிப்பு முன்னேற்பாடு பணிகள் தொடங்கியதாக தகவல் வெளியானது. இது ஏன் என்றும் ரெயில் பயணிகள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
- டாஸ்மாக் கடையில் நேற்று இரவு ஒருவர் மது பாட்டிலை வாங்கிச் சென்றார்.
- குடிமகன்கள் வாக்குவாதம் செய்தனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வீரகமோடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடையில் நேற்று இரவு ஒருவர் மது பாட்டிலை வாங்கிச் சென்றார். அப்போது அதனை திறந்து பார்த்தபோது அந்த மது பாட்டிலில் பல்லி இறந்து கிடந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று இந்த மது பாட்டிலில் பல்லி உள்ளது. இதை மாற்றித் தரும்படி கேட்டார்.
இதற்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் மூடி திறந்த நிலையில் உள்ளது. இதனை நாங்கள் எப்படி நம்புவது மேலும் மது பாட்டிலை எதற்காக திறந்து எடுத்து வந்தீர்கள். அப்படியே எடுத்துக் கொண்டு வர வேண்டியது தானே என பல்வேறு கேள்விகளை கேட்டனர். அவர்களிடம் குடிமகன்கள் வாக்குவாதம் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த நபர் தனது செல்போனில் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்தார்.
மேலும் நான் மது போதையில் இருக்கிறேன். தெரியாமல் பல்லி விழுந்த பாட்டிலில் உள்ள மதுவை நான் குடித்திருந்தால் இந்த நேரம் செத்துபோய் இருப்பேன். எனது சாவுக்கு யார் காரணம்? என பல்வேறு கேள்விகளை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
- டிரைவர் கைது
- திருப்பதி கோவிலுக்கு சென்ற போது விபரீதம்
வேலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 65). இவர் அதே பகுதி யை சேர்ந்த உறவினர்கள் மற்றும் நபர்களுடன் திருப் பதி ஏழுமலையான் கோவி லுக்கு நேற்று பஸ்சில் சென்றார்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த வல்லம் டோல்கேட் அருகே சென்ற போது இயற்கை உபாதை களை கழிக்க பஸ்சை நிறுத்தி னர். நல்லம்மாள் பஸ்சில் இருந்து கீழே இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் நல்லம் மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரி சோதனை க்காக அடுக்கம்
பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராணிப்பே ட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த நாரா யணபுரம் பகுதியைச் சேர்ந்த பஸ் டிரைவர் வேணுகோபால் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவிகளிடம் சில்மிஷம் செய்த வழக்கு
- வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்
வேலூர்:
குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் லத்தேரியை அடுத்த செஞ்சி பகுதியைச் சேர்ந்த கே.ராமன் (வயது 44) என்பவர் பட்டதாரி அறிவியல் ஆசி ரியராக கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாங கூறப்படுகிறது. இது குறித்து கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி ஒரு மாணவி பெற் றோரிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
அதைத்தொடர்ந்து ஆசிரியர் மீது குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ உள் ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் ஆசிரியர் ராமன் தலைமறைவானார். மேலும் அவர் முன்ஜா மீன் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து தலைமறை வாக இருந்த ஆசிரியர் ராமன் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று வேலூரில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி கலைப்பொன்னி உத்தர விட்டார். அதன்பேரில் ஆசி ரியர் ராமன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- வேலைக்கு சென்ற பின்பு திருப்பி செலுத்துவது கடமை
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு கல்விக்கடன் முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏற்கனவே கல்வி கடனுக்காக விண்ணப்பித்திருந்த 33 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3.25 கோடி மதிப்பில் கல்வி கடனுதவிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். அவர் பேசியதாவது:-
உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வங்கிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து சிறப்பு கல்வி கடன் உதவி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை செலுத்தாத மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாகம் வெளியேற்றி விடுவதாக சமீப காலத்தில் ஒரு சில புகார்களும் வந்துள்ளன.
ஏழை எளிய பெற்றோர்கள் தங்களின் குடும்ப சூழ்நிலையையும் தாங்கிக்கொண்டு மாணவர்களை உயர்கல்வி படிக்க வைக்கும் பொழுது கல்வி கட்டணம் செலுத்துவதில் சிரமங்கள் உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இது போன்ற சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடத்தப்படுகிறது.
கல்லூரி பயிலும் போது கல்வி கடனை பெற்ற மாணவ மாணவியர்கள் தாங்கள் படித்து முடித்த பிறகு வேலைக்கு செல்லும் பொழுது இந்த கடனை வங்கிகளுக்கு திரும்ப செலுத்த வேண்டும்.
எனவே கல்வி கடன் தேவைப்படுகின்ற மாணவ, மாணவிகள் இந்த சிறப்பு கல்வி கடன் முகாம்களை பயன்படுத்தி, வித்யாலட்சுமி போர்ட்டலில் விண்ணப்பித்து கடன் உதவி பெற்றுக் கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, உதவி கலெக்டர் கவிதா, முன்னோடி வங்கி மேலாளர் ஜமாலுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு பூஜை நடந்தது
- 6 மணிக்கு 600 அடி உயரத்தில் ஏற்றப்பட்டது
வேலூர்:
வேலூர் வேலப்பாடி பகவதி மலையில் பழமை வாய்ந்த வேப்பங்காடு பகவதி அம்மன், பண்ணபேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஸ்ரீமதி பகவதி மலர் அம்மா, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பரணி தீபம் ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் மாலை 6 மணிக்கு சுமார் 600 அடி உயரமுடைய பகவதி மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா என்று பக்தி கோஷமிட்டு வணங்கினர்.
மலையில் மகாதீபம் ஏற்றிய பின்னர் வேலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
2-வது நாளாக நேற்று மாலை 6 மணிக்கு பகவதி மலை மீது கார்த்திகை தீபம் ஏற்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பட்டாசு, வாணவேடிக்கை நடை பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தலைவர் தமிழ் புகழேந்தி செய்திருந்தார்.
- பொதுமக்கள் அதிர்ச்சி
- 4 நாட்களாக சாக்கு ைபயிலே அடைத்து வைத்திருந்தனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இவை மலை சார்ந்த பகுதி என்பதால் சாரைப்பாம்பு, நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், மலைப்பாம்பு உள்ளிட்ட வைகள் குடியிருப்பு பகுதிகளில் உணவு தேடி நுழைகின்றன.
இதனை பொதுமக்கள் துன்புறுத்தாமல் பாம்பை பார்த்த உடனே வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.
தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் வனத்து றையினர் உடனடியாக சென்று நவீன கருவி மூலம் பாம்புகளைப் பிடிக்கின்றனர். அவ்வாறு பிடிக்கப்படும் பாம்புகள் சாக்கு பைகளின் மூலம் எடுத்துச் சென்று, வனப்பகுதியில் கொண்டு சென்று பத்திரமாக விடப்படுகிறது. இதில் வனத்துறையினர் சில சமயங்களில் பிடிக்கப்படும் பாம்புகளை வனத்துறை அலுவல கத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
அதனை காப்பு காட்டு பகுதிகளில் விடாமல் வன அலுவலகத்திலேயே வைத்து விடுவதாகவும் கூறப்படு கிறது. இரும்பு கம்பியாலான கருவிகளை பயன்படுத்தி பிடிக்கும் பாம்புகளை அப்படியே சாக்கு பையில் வைத்து அடைத்து விடுகின்றனர்.
அப்போது ஏராளமான பாம்புகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வனத்துறை அலுவலகத்திலேயே இறந்து விடுகின்றது. பாம்புகள் உயிரிழப்பதற்கு வனத்து றையினரின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் சில பாம்புகள் 2 முதல் 3 நாட்கள் கழித்து விடுவிக்கும் போது எந்த அசைவுகளும் இல்லாமல் மெதுவாக ஊர்ந்து செல்வ தாகவும் கூறுகின்றன.
பாம்புகளைப் பிடித்த உடனே விடுவிக்காமல் அதனை 2, 3 நாட்கள் சாக்கு பைகளிலேயே அடைத்தி ருப்பதால் மழை மற்றும் வெயில் காலங்களில் அங்கேயே இருந்து உணவு கூட இல்லாமல் இறந்து விடும் அவலநிலை நீடிக்கிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒடுகத்தூர் அடுத்த நேமந்தபுரம் பகுதிகளில் 5 அடி நீளம் கொண்ட நாகப் பாம்பு பிடிப்படிப்பட்டது.
அந்தப் பாம்பை இன்று வரை விடுவிக்காமல் வனத்துறை அலுவலகத்தில் சாக்கு பையில் வைக்கப்ப ட்டுள்ளது. இந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் கடந்த 2 வாரத்திற்கு முன்பு பல்வேறு பகுதிகளில் பிடிபட்ட 4 பாம்புகளை 4 நாட்களாக விடுவிக்காமல் வனத்துறை யினர் சாக்கு பயிலே அடைத்து வைத்திருந்தனர்.
பின்பு எடுத்துச் சென்று விட்டபோது அதில் 2 பாம்புகள் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.






