search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழுதடைந்த குடிநீர் தொட்டி
    X

    பழுதடைந்த குடிநீர் தொட்டி

    • சீரமைக்க வலியுறுத்தல்
    • பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த மகமதுபுரம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி பழுதடைந்து பயன்படாத வகையில் உள்ளது.

    மேலும் அப்பகுதியில் 3-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் இதேபோல் பழு தடைந்து இருப்பதா கவும், இதனால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

    மேலும் குடிநீர் செல்லும் குழாய்கள் ஆங்காங்கே பழுதடைந்தும், உடைந்தும் குடிநீர் வீனாக வெளியேறுகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

    எனவே அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க பழுதடைந்து கிடக்கும் குடிநீர் தொட்டி யை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×