என் மலர்tooltip icon

    வேலூர்

    • டிரைவர் கைது
    • திருப்பதி கோவிலுக்கு சென்ற போது விபரீதம்

    வேலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 65). இவர் அதே பகுதி யை சேர்ந்த உறவினர்கள் மற்றும் நபர்களுடன் திருப் பதி ஏழுமலையான் கோவி லுக்கு நேற்று பஸ்சில் சென்றார்.

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த வல்லம் டோல்கேட் அருகே சென்ற போது இயற்கை உபாதை களை கழிக்க பஸ்சை நிறுத்தி னர். நல்லம்மாள் பஸ்சில் இருந்து கீழே இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் நல்லம் மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரி சோதனை க்காக அடுக்கம்

    பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராணிப்பே ட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த நாரா யணபுரம் பகுதியைச் சேர்ந்த பஸ் டிரைவர் வேணுகோபால் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவிகளிடம் சில்மிஷம் செய்த வழக்கு
    • வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்

    வேலூர்:

    குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் லத்தேரியை அடுத்த செஞ்சி பகுதியைச் சேர்ந்த கே.ராமன் (வயது 44) என்பவர் பட்டதாரி அறிவியல் ஆசி ரியராக கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.

    இவர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாங கூறப்படுகிறது. இது குறித்து கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி ஒரு மாணவி பெற் றோரிடம் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

    அதைத்தொடர்ந்து ஆசிரியர் மீது குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ உள் ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனால் ஆசிரியர் ராமன் தலைமறைவானார். மேலும் அவர் முன்ஜா மீன் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து தலைமறை வாக இருந்த ஆசிரியர் ராமன் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று வேலூரில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி கலைப்பொன்னி உத்தர விட்டார். அதன்பேரில் ஆசி ரியர் ராமன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • வேலைக்கு சென்ற பின்பு திருப்பி செலுத்துவது கடமை
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு கல்விக்கடன் முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஏற்கனவே கல்வி கடனுக்காக விண்ணப்பித்திருந்த 33 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3.25 கோடி மதிப்பில் கல்வி கடனுதவிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். அவர் பேசியதாவது:-

    உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வங்கிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து சிறப்பு கல்வி கடன் உதவி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    பல்வேறு கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை செலுத்தாத மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாகம் வெளியேற்றி விடுவதாக சமீப காலத்தில் ஒரு சில புகார்களும் வந்துள்ளன.

    ஏழை எளிய பெற்றோர்கள் தங்களின் குடும்ப சூழ்நிலையையும் தாங்கிக்கொண்டு மாணவர்களை உயர்கல்வி படிக்க வைக்கும் பொழுது கல்வி கட்டணம் செலுத்துவதில் சிரமங்கள் உள்ளன.

    இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இது போன்ற சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடத்தப்படுகிறது.

    கல்லூரி பயிலும் போது கல்வி கடனை பெற்ற மாணவ மாணவியர்கள் தாங்கள் படித்து முடித்த பிறகு வேலைக்கு செல்லும் பொழுது இந்த கடனை வங்கிகளுக்கு திரும்ப செலுத்த வேண்டும்.

    எனவே கல்வி கடன் தேவைப்படுகின்ற மாணவ, மாணவிகள் இந்த சிறப்பு கல்வி கடன் முகாம்களை பயன்படுத்தி, வித்யாலட்சுமி போர்ட்டலில் விண்ணப்பித்து கடன் உதவி பெற்றுக் கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, உதவி கலெக்டர் கவிதா, முன்னோடி வங்கி மேலாளர் ஜமாலுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு பூஜை நடந்தது
    • 6 மணிக்கு 600 அடி உயரத்தில் ஏற்றப்பட்டது

    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி பகவதி மலையில் பழமை வாய்ந்த வேப்பங்காடு பகவதி அம்மன், பண்ணபேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஸ்ரீமதி பகவதி மலர் அம்மா, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பரணி தீபம் ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் மாலை 6 மணிக்கு சுமார் 600 அடி உயரமுடைய பகவதி மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா என்று பக்தி கோஷமிட்டு வணங்கினர்.

    மலையில் மகாதீபம் ஏற்றிய பின்னர் வேலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    2-வது நாளாக நேற்று மாலை 6 மணிக்கு பகவதி மலை மீது கார்த்திகை தீபம் ஏற்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பட்டாசு, வாணவேடிக்கை நடை பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தலைவர் தமிழ் புகழேந்தி செய்திருந்தார்.

    • பொதுமக்கள் அதிர்ச்சி
    • 4 நாட்களாக சாக்கு ைபயிலே அடைத்து வைத்திருந்தனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இவை மலை சார்ந்த பகுதி என்பதால் சாரைப்பாம்பு, நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், மலைப்பாம்பு உள்ளிட்ட வைகள் குடியிருப்பு பகுதிகளில் உணவு தேடி நுழைகின்றன.

    இதனை பொதுமக்கள் துன்புறுத்தாமல் பாம்பை பார்த்த உடனே வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.

    தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் வனத்து றையினர் உடனடியாக சென்று நவீன கருவி மூலம் பாம்புகளைப் பிடிக்கின்றனர். அவ்வாறு பிடிக்கப்படும் பாம்புகள் சாக்கு பைகளின் மூலம் எடுத்துச் சென்று, வனப்பகுதியில் கொண்டு சென்று பத்திரமாக விடப்படுகிறது. இதில் வனத்துறையினர் சில சமயங்களில் பிடிக்கப்படும் பாம்புகளை வனத்துறை அலுவல கத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

    அதனை காப்பு காட்டு பகுதிகளில் விடாமல் வன அலுவலகத்திலேயே வைத்து விடுவதாகவும் கூறப்படு கிறது. இரும்பு கம்பியாலான கருவிகளை பயன்படுத்தி பிடிக்கும் பாம்புகளை அப்படியே சாக்கு பையில் வைத்து அடைத்து விடுகின்றனர்.

    அப்போது ஏராளமான பாம்புகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வனத்துறை அலுவலகத்திலேயே இறந்து விடுகின்றது. பாம்புகள் உயிரிழப்பதற்கு வனத்து றையினரின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் சில பாம்புகள் 2 முதல் 3 நாட்கள் கழித்து விடுவிக்கும் போது எந்த அசைவுகளும் இல்லாமல் மெதுவாக ஊர்ந்து செல்வ தாகவும் கூறுகின்றன.

    பாம்புகளைப் பிடித்த உடனே விடுவிக்காமல் அதனை 2, 3 நாட்கள் சாக்கு பைகளிலேயே அடைத்தி ருப்பதால் மழை மற்றும் வெயில் காலங்களில் அங்கேயே இருந்து உணவு கூட இல்லாமல் இறந்து விடும் அவலநிலை நீடிக்கிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒடுகத்தூர் அடுத்த நேமந்தபுரம் பகுதிகளில் 5 அடி நீளம் கொண்ட நாகப் பாம்பு பிடிப்படிப்பட்டது.

    அந்தப் பாம்பை இன்று வரை விடுவிக்காமல் வனத்துறை அலுவலகத்தில் சாக்கு பையில் வைக்கப்ப ட்டுள்ளது. இந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் கடந்த 2 வாரத்திற்கு முன்பு பல்வேறு பகுதிகளில் பிடிபட்ட 4 பாம்புகளை 4 நாட்களாக விடுவிக்காமல் வனத்துறை யினர் சாக்கு பயிலே அடைத்து வைத்திருந்தனர்.

    பின்பு எடுத்துச் சென்று விட்டபோது அதில் 2 பாம்புகள் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

    • விரிஞ்சிபுரம் கோவிலில் வருகிற 9-ந் தேதி நடக்கிறது
    • கனவில் சிவன் தோன்றி அருள் தருவார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோவில் புகழ்பெற்ற சிவதலங்களில் ஒன்று. இந்த கோவில் வேலூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலையிலிருந்து வடுகன்தாங்கல் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமையான இக்கோவிலின் மதிலழகு சிறப்பு வாய்ந்தது.

    தஞ்சை கோவில் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு என்பதன் மூலம் இக்கோவிலின் மதில் சுவர் சிறப்பினை அறியலாம்.

    அடிமுடி காண முடியாமல் பொய் சொல்லி திருஅண்ணாமலையாரிடம் பெற்ற சாபத்தை பிரம்மா, மார்க்கபந்தீஸ்வரரை பூஜித்து சாப விமோசனம் பெற்றதாக இந்த தலத்தின் வரலாறு கூறுகிறது. இந்த கோவிலுக்குள் உள்ள சிம்ம தீர்த்தம் மிகவும் விஷேசமானது.

    இக்குளத்தை ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்ததாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. இத்தீர்த்த குளம் ஆண்டிற்கு ஒருமுறை அதாவது கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்படும்.

    இந்த தீர்த்த குளத்தில் நீராடினால் குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறும், பேய், பிசாசு, பில்லி, சூன்யம், வலிப்பு, தீவினைகள் பிடித்தவர்களுக்கு அகலவும் செய்யும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை.

    இவர்கள் முதலில் ஷீரா நதி என்னும் பாலாற்றில் நீராட வேண்டும். பின்னர் கோவிலின் அருகில் பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தொடர்ந்து சிம்ம வாய் முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் தோன்றி பழம், புஷ்பம், கொடுத்து குழந்தை வரம் அருள்வார் என்பது நம்பிக்கை.

    இவ்வாறு சிறப்பு வாய்ந்த கடை ஞாயிறு விழா வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடக்கிறது. 9-ந் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம குளம் திறக்கப்படுகிறது.

    10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு பிரம்ம குளத்தில் தீர்த்தவாரியும், காலை 9 மணிக்கு பாலகனுக்கு உபநயன சிவதீட்சையும், காலை 9.30 மணிக்கு சுவாமி திருமாட வீதி உலாவும், பகல் 12 மணிக்கு அபிஷேகமும், மாலையில் மகா தீபாராதனையும், இரவு பஞ்ச மூர்த்திகள் சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது.

    இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சிம்ம தீர்த்தத்தில் நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவிகான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர், தக்கார், ஆய்வாளர், செயல் அலுவலர் உள்பட கோவில் பணியாளர்கள், முன்னாள் அறங்காவலர்கள் மற்றும் விரிஞ்சிபுரம் பொதுமக்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    • விவசாய நிலங்களை சேதபடுத்தியதால் நடவடிக்கை
    • மலைப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரை சுற்றி பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளது. ஒடுகத்தூர், குருவராஜபாளையம் ஆசனம்பட்டு, மேல் அரசம்பட்டு, ராசி மலை மற்றும் அரிமலை உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக உணவு தேடி கிராமத்திற்குள் நுழைந்தன.

    விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி, கத்திரிக்காய், வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு சேதப்படுத்துவதோடு, கிராம பகுதியில் ஒட்டியுள்ள மரங்களில் தஞ்சமடைந்து பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

    குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் வசித்து வந்தனர். விவசாய பயிர்கள் அதிக அளவில் நாசமாவதால், குரங்குகளை பிடித்து வனத்துறையில் விட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    அதன்படி இன்று ராசிமலை அடிவாரத்தில் உள்ள அரிமலை உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் பாதுகாப்பு கவசங்களுடன் வந்தனர். வனத்துறையினர், 20 குரங்குகளை ஒவ்வொன்றாக பிடித்து, கூண்டுக்குள் அடைத்தனர்.

    பிடித்த குரங்குகளை வனத்துறையினர் குருராஜபாளையம் அருகே உள்ள தர்மகொண்ட ராஜா கோயில் மலைப் பகுதியில் கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.

    • பொதுமக்களை கவர்ந்த சிறுதானிய உணவுகள்
    • உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் சிறுதானிய உணவு திருவிழா நடந்தது.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து, பள்ளி மாணவ மாணவிகளின் சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்,வேலூர் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறை, வேலூர் மாவட்ட நுகர்வோர்கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, உழவர் நலத்துறை, மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்டோர் அரங்குகள் அமைத்திருந்தனர்.

    இதில் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழியின் படி நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு 'உணவே மருந்து' என்பதை வலியுறுத்தும் வகையில் பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    சிறுதானிய உணவு வகைகளான கேழ்வரகு, சம்பா, தினை உள்ளிட்டவைகளால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், மக்களுக்கு காட்சிப்படுத்தி அவற்றின் செய்முறை மற்றும் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. காட்சிக்க வைத்திருந்த உணவுகள் பொதுமக்களை கவரும் வகையில் இருந்தது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அப்துல் முனீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருவண்ணாமலை கோவிலுக்கு சென்ற நேரத்தில் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி கல் புதூர் மாருதி நகரை சேர்ந்தவர் குமார். நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று கார்த்திகை தீப திருவிழா என்பதால் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை குமாரின் உறவினர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.கோவிலுக்கு சென்றிருந்த குமார் உடனடியாக வீடு திரும்பினார். உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளை நடந்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து காட்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுரை ரெயில் நடுவழியில் நிறுத்தம்
    • துரிதமாக செயல்பட்ட ரெயில் டிரைவரை அதிகாரிகள் பாராட்டினர்

    வேலூர்:

    மதுரையில் இருந்து திருப்பதி செல்லும் மீனாட்சி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை புறப்பட்டு சென்றது. காட்பாடி - திருப்பதி இடையே பாகாலா அருகே வந்தபோது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை ரெயில் என்ஜின் டிரைவர் கண்டுபிடித்தார்.

    உடனே சுதாரித்துக் கொண்ட டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார். இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாள விரிசலை சரி செய்தனர்.

    இதையடுத்து தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. துரிதமாக செயல்பட்ட ரெயில் டிரைவரை அதிகாரிகள் பாராட்டினர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • வேலூரில் 2 பேர் பலி எதிரொலி

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    காட்பாடி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வீரத்தமிழர் முன்னணி செயலாளர் விஜய் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;-

    மோட்டூர் சர்க்கரை ஆலை பஸ் நிலையம் அருகே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் கொடி கம்பத்தை நட்டோம்.

    தற்போது கம்பம் பழையதாக உள்ளது. இதனால் பெயிண்ட் அடிப்பதற்காக பிடுங்கி புதுப்பித்த பின்பு திரும்பவும் அதே பகுதியில் நட்டோம்.

    ஆனால் காட்பாடி தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொடிக்கம்பத்தை அகத்திவிட்டனர். எனவே கொடிக்கம்பத்தை மீண்டும் நடுவதற்கு ஆணையிட வேண்டும் என கூறியிருந்தார்.

    தொரப்பாடியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மண்டல தலைவர் மதியழகன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;-

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4-வது மண்டலம் தொரப்பாடி நேதாஜி தெரு, பலராம முதலி தெரு, அண்ணாமலை கவுண்டர் தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, எம்.சி ரோடு, கஸ்பா இப்ராஹிம் சாஹெப்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தருவதில்லை.

    குப்பைகள் சரிவர வாரவில்லை. கொசு தொல்லைகள் மற்றும் தெருநாய்களின் தொல்லைகள் மிக அதிகமாக உள்ளது. நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    கஸ்பா ஆரன்பாளையம் வசந்தபுரம் பகுதி பொதுமக்கள் கூட்டமாக வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் கஸ்பா பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டது.

    இதனை கஸ்பா, வசந்தபுரம், ஆர்.என். பாளையம், சதுப்பேரி, சிறுங்காஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

    குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இந்த மேம்பாலம் மிகவும் உதவியாக உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவர் உயரம் குறைவாக உள்ளது. இதனை உயர்த்தி கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எந்தெந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதியன்று தீபாவளி பண்டிகை தினத்தன்று தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் இந்த மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி நிலைதடுமாறி மேலிருந்து கீழே விழுந்தனர். 40 அடி உயரமுள்ள பாலத்தின் மீது விழுந்ததில் கொடூரமாக தலை சிதறி உயிழந்தனர்.

    எனவே பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • மலர் அலங்காரம் செய்யப்பட்டது
    • பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்துமதுரை கிராமத்தில் குன்றின் மேல் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத பாலசுப்ரமணியர் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இதற்கு கிராம கனாச்சாரி சிவலிங்கம், கிராம நாட்டான்மைதாரர் துளசிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமிராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் முருகனடிமை ஜம்பு என்கிற சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தங்க கவசம் அணிவித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    ×