search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    40 ஆயிரம் இலவச மரக்கன்றுகள்
    X

    40 ஆயிரம் இலவச மரக்கன்றுகள்

    • விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
    • ஒடுகத்தூர் வனத்துறை சார்பில் வழங்கப்படுகிறது

    அணைக்கட்டு:

    பசுமை தமிழகம் திட்டம் மூலம் ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன்படி இந்த ஆண்டுக்கான இலவச மரக்கன்றுகள் பெறுவதற்கு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இதுகுறித்து வனச்சரக அலுவலர் இந்து வெளியிட்டுள்ள செய்தி கூறியிருப்பதாவது:-

    ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வழங்க நெல்லி, கொய்யா, மூங்கில், புளி, மாமரம், நாவல், நீர் மருது, புங்கன், செங்கருங்காலி, சவுக்கு, எலுமிச்சை, வேம்பு, இலுப்பை உள்ளிட்டவைகளில் 40 ஆயிரம் மரக்கன்றுகள் உள்ளது.

    இவை ஒரு ஏக்கருக்கு 200 முதல் 250 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    எனவே, விருப்பமுள்ளவர்கள் கம்ப்யூட்டர் பட்டா, ஆதார் அட்டை நகல், புகைபடம், வங்கி கணக்கு புத்தக நகல் போன்ற ஆவணங்களை ஒடுகத்தூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து பதிவு செய்து கொள்ள கொண்டு தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை எடுத்து செல்லாலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×