என் மலர்
உள்ளூர் செய்திகள்

டெங்குவை தடுக்க கண்காணிப்பு குழு
- கலெக்டர் அதிரடி உத்தரவு
- 33 மருத்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சலால் தினமும் 15 முதல் 20 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்காக அரசு ஆஸ்பத்திரிகளில் தனித்தனியாக வார்டுகள் செயல்படுகிறது.வேலூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டம் முழுவதும் 521 களப்பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் நியமிக்கப்ப ட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சியில் டெங்கு பாதிப்பு பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளை கண்காணிக்க முதுநிலை பூச்சியியல் வல்லுநர் தலைமையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
மேலும் வட்டார அளவிலும், நகராட்சி, பேரூராட்சி அளவிலும் இரண்டாம் நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் 33 மருத்துவ முகாம்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தினந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படு கிறது. இந்த முகாம்களில் பாதிப்பு அதிகம் உள்ளவ ர்களை கண்டறிந்து சிகிச்சை பெற பரிந்துரைக்க ப்படுகின்றனர்.
டெங்கு பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் கொசு புழு தடுப்பு பணி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணி 3 நாட்கள் தொடர்ச்சியாக செய்யப்ப டுகிறது. குடிநீரில் குளோரின் அளவு பரிசோதிக்கப்படுகிறது. வட்டார மருத்துவ அலுவலர்கள் நகர் நல மருத்துவர் அலுவலர்கள் மூலம் டெங்கு தடுப்பு பணி கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். பொதுமக்கள் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் வீடுகளின் அருகே தண்ணீர் தேக்கி வைக்க கூடாது.
வீடுகளில் கொசு தடுப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.






