என் மலர்tooltip icon

    வேலூர்

    • முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது
    • அதிகாரிகள் மக்களிடம் விழிப்புணர்வு

    அணைக்கட்டு:

    மிக்ஜம் புயல் காரணமாக பென்னாத்தூர் பேரூராட்சியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை தங்கவைப்பதற்கான முகாம்கள் உணவு, குடிநீர், கழிவறை ஆகிய வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது.

    மழை நேரங்களில் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மின்கம்பங்களை கைகளால் தொடுவதோ, கால்நடைகளை அதில் கட்டிவைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில், மரங்களுக்கு கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும் என பொது மக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் அர்ச்சுனன் தலைமை யிலான பணியாளர்கள் பொது மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    குடியிருப்பு பகுதிகளில் காய்ந்து உடைந்து விழும் அபாய நிலையில் உள்ள மற்றும் ஆபத்தான நிலையில் மரங்களை அகற்றுதல், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காமல் மண் கொட்டி சமன் செய்தல், மழை நீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    • யானைகள் நடமாட்டத்தால் எச்சரிக்கை
    • வனத்துறையினர் விடிய, விடிய ரோந்து

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வனசரக பகுதியில் நாய்க்கனேரி, சேராங்கல், பத்தலப்பல்லி, எருக்கம்பட்டு, குண்டலப்பல்லி உள்ளிட்ட காப்புக் காடுகளில் சிறுத்தைகள், யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

    சில நாட்களாக ஆந்திரா எல்லை நெல்லிபட்லா வனப்பகுதியிலிருந்து ஒரு குட்டி யானையுடன் கூடிய 7 காட்டு யானைகள் வெளியேறி தமிழக எல்லையான அரவட்லா, பாஸ்மார் மலை கிராமங்களில் புகுந்து அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் புதுவரவாக ஆந்திரா மாநிலம் கடப்பனத்தம் பகுதியிலிருந்து 3 குட்டி யானைகளுடன் கூடிய மொத்தம் 9 காட்டு யானைகள் தமிழக எல்லையில் உள்ள கோட்டையூர் கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள நிலங்களில் பயிர்களை மிதித்து சேதப்படுத்தி தென்னஞ்செடிகளை பிடுங்கி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    மேலும் தமிழக எல்லையான பத்தலப்பல்லி கிராமத்திலிருந்து ஆந்திராமாநிலம் வீ.கோட்டா செல்லும் மலைப்பாதையில் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகின்றன.

    பேரணாம்பட்டு வனசரகர் சதீஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் பொதுமக்களிடையே எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வனச்சரகர் சதீஷ்குமார் கூறியதாவது:-

    வனப்பகுதிக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்வதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். பத்தலப்பல்லி மலைப்பாதை வழியாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு வாகனங்களில் மாலை 6 மணி முதல் இரவு நேரத்தில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் உடனடியாக பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

    வேலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழையும் பெய்தது.

    இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு மேல் மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது.

    நேற்று மாலை தொடங்கிய மழை ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது வெளுத்து வாங்கியது. இதனால் வேலூர் நகரில் முக்கிய சாலைகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஆறுபோல் ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. மேலும் இரவு முதல் விடியும் வரை தொடர்ந்து மழை பெய்தது.

    பலத்த மழை காரணமாக புதிய பஸ் நிலையம், கிரீன் சர்கிள், காமராஜர் சிலை, அண்ணா சாலை, ஆற்காடு சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தின் அடியில் வாகன ஓட்டிகள் மழைக்காக ஒதுங்கி நின்றனர். அந்த இடத்தை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனால் கிரீன் சர்கிள் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதேபோன்று சேண்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில்தெரு, கன்சால்பேட்டை, இந்திரா நகர், தோட்டப்பாளையம் உள்பட பல்வேறு பகுதி களில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

    அதேபோல் திருவண்ணாமலை, செங்கம், செய்யாறு, வந்தவாசி, ஆரணி, போளூர், கண்ணமங்கலம், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், திருவலம், பொன்னை, பேரணா ம்பட்டு, பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், ஆற்காடு, வாலாஜா, காவேரிப்பாக்கம், பொன்னை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை வெளுத்து வாங்கியது.

    தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பாலாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு, பாலாற்றை ஒட்டி உள்ள செதுவாலை, கந்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளும் நிரம்பியுள்ளது.

    மேலும் பல ஏரிக்கு நீர்வ ரத்தும் அதிகரித்துள்ளது. அறுவடைக்கு ஏற்ற தை மாத பட்டத்தில் , நெற்பயிர் நடவு செய்ய ஏர் உழுது நிலத்தை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • போக்குவரத்துக்கு இடையூறு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அண்ணாசாலை, கிருபானந்தவாரியார் சாலை,நேதாஜி மார்க்கெட், சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, வேலூர் பழைய பஸ்நிலையம், கிரீன்சர்க்கிள், காட்பாடி உட்பட பல இடங்களில் சாலைகளில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகிறது.

    இந்த மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டாலும் தொடர்ந்து சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சத்துவாச்சாரி மேம்பாலம் அருகே சாலையில் மாடுகள் கூட்டமாக போக்கு வரத்திற்கு இடையூறாக சுற்றி திரிகிறது.

    இதனால் அவ்வழியாக சென்ற பஸ், கார், பைக் போன்ற வாகன ஓட்டிகள் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

    காலை, மாலை, இரவு என எப்போதும் இந்த பகுதிகளில் மாடுகள் சுற்றுகின்றன.

    இவ்வாறு கூட்டமாக மாடுகள் சாலைகளில் திரிவதால் வாகனங்களில் செல்வோருக்கு பாதிப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.

    சாலையில் நிற்கும் மாடுகள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதாலும், சாலைகளில் ஓடுவதாலும் பைக்கில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்க கூடிய நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த மாடுகள் சாலைகளை மறித்து அமர்ந்து கொள்கின்றன.

    இந்த பகுதி வழியாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் திடீரென மாடுகளின் ஓட்டத்தால் பயந்து நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். இதிலும் சில மாடுகள் திடீரென சாலைகளில் நடந்து செல்வோர் மீது முட்ட வருவதால் பொதுமக்கள், முதியவர்கள் அச்சத்துடன் சாலையையும், மாடுகளையும் கடந்து செல்கின்றனர்.

    எனவே சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றியும் திரியும் மாடுகளை பிடித்து நிரந்த தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அட்டை உடனடியாக வழங்கப்பட்டது
    • வரிசையில் காத்திருந்து பதிவு செய்து பெற்றனர்

    வேலூர்:

    வேலூர் அரசினர் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் சிறப்பு பதிவு முகாம் இன்று நடந்தது.

    மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, வேலூர் பா.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் இதுவரை முதல் அமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை பெறாதவர்களுக்கு ஒரே இடத்தில் சான்றுகளை சரிபார்த்து காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. மக்கள் வரிசையில் காத்திருந்து பதிவு செய்து, காப்பீடு அட்டையை பெற்றுச் சென்றனர்.

    • உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
    • மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

    வேலூர்:

    வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சென்சுருள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

    பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.செந்தி ல்வேல்முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக டீன் சி. தண்டபாணி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.பாபு ஜனார்த்தனம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஜே.மாதவன், முன்னாள் பதிவாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எஸ்.விஜய்ஆனந்த் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் கலந்து கொண்டு பேசினார்.

    இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்
    • பலர் வாழ்த்துரை வழங்கினர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி குடும்பத்துடன் போராட்டம் இன்று நடந்தது.

    போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கிஷோர், திருப்பதி, மாவட்ட தலைவர் சரவணன் ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் மோகன மூர்த்தி தொடக்க உரையாற்றினார்.

    ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் வெங்கடாசலம் செயலாளர் பிரேம் ஆனந்த் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் புருஷோத்தமன், செயலாளர் ரமேஷ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கிராம சுகாதார செவிலியர் மற்றும் மேற்பார்வையாளர் சங்க தனலட்சுமி உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களில் ஆசிரியர்கள் பணியாளர்களின் வாழ்வாதார உரிமையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் பரிசுகளை வழங்கி வழியனுப்பினார்
    • தேநீர், சுண்டல் மற்றும் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது

    வேலூர்:

    தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உலக சுற்றுலா தினம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று ஒரு நாள் சுற்றுலா பயணத்தை கோட்டையிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வழியனுப்பினார். தமிழ்நாடு சுற்றுலா துறையின் சார்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் விடுதி மாணவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதி மாணவர்களுக்கு உலக சுற்றுலா தினம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மூலமாக 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இன்று ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

    மாணவர்கள் வேலூர் கோட்டை வளாகத்தில் இருந்து புறப்பட்டு வேலூரில் உள்ள மாவட்ட அறிவியல் மையம், வேலூர் கோட்டை, அரசு அருங்காட்சியகம், ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் ஆகிய இடங்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவாக சென்றனர்.

    சுற்றுலாவின் முக்கிய நோக்கமே பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு. காலை மாலை ஆகிய நேரங்களில் தேநீர், சுண்டல் மற்றும் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை அலுவலர் (பொ) இளமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வனத்துறையினர் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சி, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் குமரகுரு. இவரது வீட்டிற்குள் 5 அடி நீளமுடைய சாரைபாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த குமரகுரு குடும்பத்தினர் ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வீரர்கள் 5 அடி நீளம் கொண்ட சாரைபாம்பை பிடித்து பரவமலை காப்பு காட்டில் விட்டனர்.

    • வேலூர் அல்லாபுரத்தில் சேரும் சகதியுமான சாலை
    • மழைக்காலம் தொடங்கி உள்ளதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 51-வது வார்டுக்கு உட்பட்ட அல்லாபுரம் அம்பேத்கர் நகர், ஜேஜே நகர், கே.கே.நகரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதாளச்சாக்கடை திட்டத்திற்காக தெருக்கள் முழுவதும் பள்ளம் தோண்டப்பட்டது.

    பணிகளும் நிறைவு பெற்றது. இருப்பினும் இன்னும் சாலை அமைக்கவில்லை.இதனால் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியாக மாறியுள்ளது.

    பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்து கூட செல்ல முடியாத வகையில் இருப்பதாக கூறி மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை சாலையில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. அதன்பிறகு சாலை அமைக்கவில்லை.

    இந்த நிலையில் தான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதாளச்சாக்கடை திட்ட பணிக்காக பள்ளம் தோண்டி குழாய் அமைக்கப்பட்டது. இதனால் சாலை முழுவதும் சேறும், சகதியாக மாறியுள்ளது.

    வீட்டை விட்டு வெளியே நடந்து கூட செல்லமுடியவில்லை.அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்.

    உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் சவுமியா சுந்தரி (வயது 27). எம்.எஸ்.சி பட்டதாரி.

    சவுமியா சுந்தரி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சவுமியா சுந்தரியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூர் வந்தது
    • பள்ளி கல்லூரி மாணவர்கள், தி.மு.க. பிரமுகர்கள் என ஏராளமானோர் குவிந்தனர்

    வேலூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக அவர் எழுதிய புத்தகங்கள், மற்றும் அவரது சிலையுடன் பேனா வடிவிலான முத்தமிழ் ஊர்தி வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே வந்தடைந்தது.

    கலெக்டர் குமார வேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், ஏ.பி.நந்தகுமார், அமலுவிஜயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது அங்கு வந்த முத்தமிழ் ஊர்திக்கு பட்டாசு வெடித்து மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பேனா சின்னதுடன் வந்த வாகனத்தை பார்வையிட பள்ளி கல்லூரி மாணவர்கள், தி.மு.க. பிரமுகர்கள் என ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி சிலையுடன்செல்பி எடுத்துக் கொண்டனர்.மேலும் கருணாநிதி சிலைக்கு தி.மு.க.வினர் மற்றும் அரசு அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன்,

    மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஏராளமான அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×