search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்
    X

    மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்

    • அட்டை உடனடியாக வழங்கப்பட்டது
    • வரிசையில் காத்திருந்து பதிவு செய்து பெற்றனர்

    வேலூர்:

    வேலூர் அரசினர் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் சிறப்பு பதிவு முகாம் இன்று நடந்தது.

    மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, வேலூர் பா.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் இதுவரை முதல் அமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை பெறாதவர்களுக்கு ஒரே இடத்தில் சான்றுகளை சரிபார்த்து காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. மக்கள் வரிசையில் காத்திருந்து பதிவு செய்து, காப்பீடு அட்டையை பெற்றுச் சென்றனர்.

    Next Story
    ×