search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டிற்குள் புகுந்த சாரைபாம்பு
    X

    வீட்டிற்குள் புகுந்த சாரைபாம்பு

    • வனத்துறையினர் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சி, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் குமரகுரு. இவரது வீட்டிற்குள் 5 அடி நீளமுடைய சாரைபாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த குமரகுரு குடும்பத்தினர் ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வீரர்கள் 5 அடி நீளம் கொண்ட சாரைபாம்பை பிடித்து பரவமலை காப்பு காட்டில் விட்டனர்.

    Next Story
    ×