search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எய்ட்ஸ் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்
    X

    எய்ட்ஸ் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

    • உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
    • மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

    வேலூர்:

    வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சென்சுருள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

    பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.செந்தி ல்வேல்முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக டீன் சி. தண்டபாணி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.பாபு ஜனார்த்தனம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஜே.மாதவன், முன்னாள் பதிவாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எஸ்.விஜய்ஆனந்த் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் கலந்து கொண்டு பேசினார்.

    இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×