என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
லாரி கவிழ்ந்து பால் ஆறாக ஓடியது
- நிலை தடுமாறி அருகில் உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்தது
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு வேலூர் ஆவின் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
அதன் படி இன்று காலை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ஆயிரம் லிட்டர் பாலை, டேங்கர் லாரி மூலம் கொண்டுவரப்பட்டது.
தெள்ளூர் கூட்ரோடு சிவராஜ் நகர் அருகே லாரி வந்தபோது திடீரென ஒருவர் பைக்கில் குறிக்கே வந்தார். அவர் மீது லாரி மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.
அப்போது லாரி நிலை தடுமாறி அருகில் உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. அப்போது லாரியில் இருந்த பால் கீழே கொட்டி ஆறாக ஓடியது. இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






