search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rescue of students"

    • காட்பாடி அரசு விடுதியில் இருந்து மாயம்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் அரசு விடுதியில் ஒப்படைப்பு

    வேலூர்:

    காட்பாடி செங்குட்டையில் அன்னை சத்தியபாமா அரசினர் விடுதி உள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பெண் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இவர்கள் காட்பாடியில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற 8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் மாலையில் விடுதிக்கு திரும்பவில்லை.

    இதுகுறித்து விடுதி காப்பாளர் சாந்தி காட்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவகளை தேடி வந்தனர்.

    மாணவிகள் நேற்று மாலை வேலூர் மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது.

    உடனடியாக விரைந்து சென்ற போலீசார் 2 மாணவிகளையும் மீட்டனர். மாணவிகளை காட்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் அரசு விடுதியில் ஒப்படைக்கப்பட்டனர்.

    ×