search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Art festival competition"

    • இசை, நடனங்களில் அசத்தினர்
    • ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஓட்டேரியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்தி றனை ஊக்குவிக்கும் வகையில் கலைத் திருவிழா இன்று நடந்தது.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் நந்தகுமார் எம்.எல்.ஏ, வேலூர் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழகம் முழுவதுமிருந்து அரசு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    அவர்கள் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், தமிழ்மொழியின் சிறப்பு ஆகியவைகள் குறித்து ஆடல், பாடல், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற போட்டிகளில் திறமைகளை வெளிக்காட்டினர்.

    மேலும் விவசாயத்தை காக்கும் வகையில் ஆடல்கள், சிறுதானிய தமிழ் பாரம்பரிய உணவுகளான சாமை, தினை, கேழ்வரகு ஆகியவை களின் நன்மைகள் பிட்சா, பர்கர் போன்றவை களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் வில்லுபாட்டு மூலம் விளக்கினர்.

    மேலும் கும்மியாட்டம், டிரம்ஸ் இசைக்கருவி இசைத்தல், தப்பு இசை ஆகியவைகளும் இசைத்து காட்டி மாணவர்கள் தனித்திறனை வெளிப்ப டுத்தி அசத்தினார்கள்.

    விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில், கலையில் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் இக்கலை ப்போட்டிகள் நடக்கிறது.

    மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டி சிறந்து விளங்கினாலும் இது போன்ற கலைகளிலும் தனித்திறனை வெளிப்ப டுத்தும் வகையில் செயல்பட வேண்டும் தமிழகம் கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்குகிறது அதை போல் கலைகளிலும் சிறந்து விளங்கவே இது போன்ற போட்டிகள் நடக்கிறது என பேசினார்.

    ×