search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கானாற்றில் பைக்குடன் விழுந்த தொழிலாளி காயம்
    X

    கானாற்றில் பைக்குடன் விழுந்த தொழிலாளி காயம்

    • உடல் முழுவதும் சகதியானது
    • தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை தோட்டப்பாளையம் வழியாக கழிவுநீர் கால்வாய் செல்லும் கானாறு உள்ளது.

    தோட்டப்பாளையம் அருகந்தம் பூண்டி சர்ச் எதிரே செல்லும் கானாற்று கால்வாயில் தடுப்பு சுவர் கடந்த பல மாதங்களுக்கு முன்பு உடைந்து விழுந்தது.

    கானாற்றின் தடுப்பு சுவர் உடைந்து விழுந்ததால் அந்த வழியாக இரவு நேரங்களில் பைக் ஆட்டோக்களில் செல்பவர்கள் தவறி கானாற்றில் விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர்.

    நேற்று இரவு அந்த வழியாக சென்ற தொழிலாளி பைக்குடன் கானாற்றில் விழுந்து காயமடைந்தார். மேலும் அவரது உடல் முழுவதும் சகதியானது. இதனைக் கண்ட அப்பகுதி வாலிபர்கள் கானாற்றில் விழுந்த நபரை வெளியே தூக்கி காப்பாற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் ஒட்டி வந்த பைக்கின் முன் பகுதி சேதம் அடைந்தது. கானாற்றில் தடுப்பு சுவர் அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×