என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Diwali Celebration"
- பெரிய அளவிலான தீ விபத்து ஏற்படவில்லை
- தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்
வேலூர்:
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை யொட்டி தமிழக அரசு அறிவுறுத்தல் படி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சிறுவர்கள், முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து பண்டிகையை உற்சா கத்துடன் கொண்டாடினர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விபத்துகளை தடுக்க வேலூர் தீயணைப்பு வடமேற்கு மண்டல துணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அனைத்து தீயணைப்பு நிலையங்களில் 24 மணி நேரம் வீரர்கள் தயார் நிலையில் இருந்து கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, தீயணைப்பு வீரர்கள் அனைவரும் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் தீபாவளி கொண்டாட்டத்தில் 7 மாவட்டங்களில் இருந்து 24 அழைப்புகள் வந்தன.
இதில், 15 ராக்கெட் பட்டாசு, 9 பிற பட்டாசுகள் என சிறு தீ விபத்துகள் ஏற்பட்டன.
பட்டாசு வெடித்ததில் 86 ஆண்கள், 84 பெண்கள், 5 குழந்தைகள் என 175 பேர் லேசான காயத்துடன் தப்பினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கத்தில் பட்டாசு வெடித்த சிறுமி நவிஷ்கா (4) பரிதாபமாக உயிரிழிந்தார். பெரிய அளவிலான தீ விபத்து, படுகாயம் இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.
- தூத்துக்குடி வி.இ. ரோட்டில் அமைந்துள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் தீபாவளி விழா நடைபெற்றது .
- மாவட்ட செயலாளர் எஸ்.பி. மாரியப்பன் அலுவலகத்தில் கேக் வெட்டினார்.
தூத்துக்குடி:
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் அமைந்துள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் தீபாவளி விழா நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் எஸ்.பி. மாரியப்பன் அலுவலகத்தில் கேக் வெட்டினார். பின்னர் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் வெடி வெடித்து கொண்டாடினர்.
நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் வின்சென்ட், தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட துணைத்தலைவர்,என். சண்முகவேல், சிவத்தை சரவணன், அருண், ராஜ் நாடார்,கார்த்திக்,கதிர், ரஞ்சித், கதிரேசன், சரவண குமார், சிவகுமார், ஹரி, சூர்யா, அஸ்கர், பெத்து விஷ்ணு, சிவத்தை தினேஷ், கூட்டாம்புளி கார்த்திக், சக்கம்மாள்புரம் ராஜ், அலாட் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தீபாவளி பண்டிகைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
- மோட்டார்சைக்கிளில் அந்த வாலிபர்களை ஏற்றி செல்வதற்குள் போலீசார் படாதபாடுபட்டனர்.
புதுச்சேரி:
தீபாவளி பண்டிகையையொட்டி அண்டை மாநிலமான தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதுவைக்கு வாலிபர்கள் குவிந்தனர்.
வழக்கமாக வார இறுதிநாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவார்கள். அவர்கள் விடுதிகளில் அறை எடுத்து தங்கி ரெஸ்டோபார்களில் குத்தாட்டம் போடுவது, பார்களில் மது அருந்தி கொண்டாடுவர்.
இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் அதே வேளையில் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து மது அருந்துவதற்காகவே பல இளைஞர்கள் புதுவைக்கு வந்திருந்தனர்.
இதனால் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் போதை வாலிபர்களின் அட்டகாசத்தை பார்க்க முடிந்தது. புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் முதலே வெளியூர் இளைஞர்களின் கூட்டம் அலைமோதியது.
மாஸ் ஓட்டல் பின்புறம் உள்ள சாலையில் 2 இளைஞர்கள் உச்சகட்ட போதையில் ரகளையில் ஈடுபட்டனர்.
சாலையில் சென்ற பொதுமக்களைஅவர்கள் அடித்து விரட்டினர். தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களை பிடித்தனர்.
ஆனால் அவர்கள் போலீசாருடன் மல்லுக்கட்டினர். மோட்டார்சைக்கிளில் அந்த வாலிபர்களை ஏற்றி செல்வதற்குள் போலீசார் படாதபாடுபட்டனர்.
ஒருவரை வாகனத்தில் ஏற்றும்போது மற்றொருவர் இறங்குவதும், போலீசாரின் கைகளை கடிப்பதும் என அட்டூழியத்தில் ஈடுபட்டனர். ஒருவழியாக அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
இதேபோல நேற்று மதியம் காமராஜர் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே போதை ஆசாமி ஒருவர் நடுரோட்டில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திச் சென்றார்.
இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மீண்டும் அந்த போதை ஆசாமி மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல முயன்றார். அவர் செய்த அலப்பறையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். அவர் வாகனத்தை எடுத்துச்சென்ற பிறகுதான் போக்குவரத்து சீரானது.
இதேபோல நகரின் பல பகுதிகளில் போதையில் ஆங்காங்கே வாலிபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். சாலையோரங்களில் மதுபோதையில் மயங்கி கிடந்தனர்.
மாநில எல்லை பகுதிகளில் உள்ள மதுபார்களிலும் 2 நாட்களாக கூட்டம் அலைமோதியது. மது அருந்தியவர்கள் எங்கே இருக்கிறோம் என தெரியாமல் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தந்த பகுதி போலீசார் அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.
#WATCH Effigy of 'Narakasura' burnt in Goa's Panaji early morning today, as part of #Deepawali celebrations pic.twitter.com/k5XhDovfEQ
— ANI (@ANI) November 4, 2021
தீபாவளி தினத்தன்று ஆலயங்களுக்கு சென்று வழிபட வேண்டும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு ஆலயத்துக்கு செல்வதை பிரதமர் மோடி வழக்கத்தில் வைத்துள்ளார்.
இந்த ஆண்டு அவர் கேதார்நாத்தில் உள்ள சிவாலயத்துக்கு சென்று வழிபட முடிவு செய்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு கடும் மழை-வெள்ளம் காரணமாக கேதார்நாத் ஆலயம் சேதம் அடைந்தது. பிறகு சீரமைக்கப்பட்டு 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.
கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீட்டர் உயரத்தில் இருக்கும் கேதார்நாத் ஆலயம் பாண்டவர்கள் வழிபட்ட தலமாகும். இங்கு வழிபட்ட பிறகே மகாபாரத போரில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது.
இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி இந்த தலத்தில் தீபாவளி சிறப்பு பூஜைகளை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #Diwali #PMModi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்