என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.9.39 கோடி மது விற்பனை
- மதுபிரியர்கள் தீபாவளி பண்டிகையை மது குடித்து கொண்டாடினர்
- வழக்கத்தைவிட டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஒரே நாளில் ரூ 9. 3 9 கோடிக்கு மது விற்பனையானது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் டாஸ்மாக் நிர்வாக வசதிக்காக வேலூர், அரக்கோணம் என 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும், அரக்கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும் உள்ளன. வேலூர் கோட்டத்தில் 115 கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் 88 கடைகளும் உள்ளன.
தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் காலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பண்டிகையை கொண்டாடினர். சிறுவர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
மதுபிரியர்கள் தீபாவளி பண்டிகையை மது குடித்து கொண்டாடினர். தீபாவளி பண்டிகையையொட்டி மது விற்பனை அமோகமாக இருந்தது. இதையொட்டி கடைகளில் ஹாட் மற்றும் பீர் வகைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
நேற்று வழக்கத்தைவிட டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக காண ப்பட்டது. மதுபிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுபானங்களை வாங்கி சென்றனர்.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ரூ.5.37 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.4.02 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை யானது. மொத்தம் ரூ.9.39 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.
கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவில் மது விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.






