என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road fire"

    • கடைக்காரர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது

    வேலூர்:

    குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று இரவு ஒருவர் தனது குடும்பத்துடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, பைக் என்ஜினில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கி புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே பைக்கை நிறுத்தி விட்டு அங்கிருந்து விலகி சென்றனர்.

    பைக் பற்றி எரிவதை பார்த்த அங்கிருந்த கடைக்காரர்கள் உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், அந்த பைக்கை அதன் உரிமையாளர் பைக்கை தள்ளிக்கொண்டு எடுத்து சென்றுவிட்டார்.

    சாலையில் சென்று கொண்டிருந்த பைக் திடீ ரென தீப்பற்றி எரிந்த சம்ப வத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×