என் மலர்
தேனி
- தண்ணீர் தேங்க முடியாத அளவுக்கு இடையூறுகளை செய்து வருகின்றது.
- போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கேரள அரசு அணை பலவீனம் அடைந்துவிட்டதாக கூறி புது அணை கட்டவேண்டும் என தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது.
தற்போது முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து பல்வேறு பணிகளை தொடங்கி உள்ளனர். ஆனவச்சால் பகுதியில் வாகன நிறுத்தம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்க முடியாத அளவுக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றது.
மேலும் தமிழக அதிகாரிகள் அணை பராமரிப்புக்கு செல்ல விடாமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகின்றனர்.
எனவே முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளை விட்டு கேரள அரசு வெளியேற வேண்டும் என கோரி இன்று தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள மாநில எல்லையான லோயர் கேம்ப்பில் பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தினர் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
- சுற்றுலாப் பயணிகள் தரைப்பாலத்தை கடக்க தடை.
- நீர் இருப்பு 3023 மி.கன அடியாக உள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. அணையின் நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த மாத தொடக்கத்தில் 65 அடியை எட்டியது.
முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு மழை அளவு படிப்படியாக குறையத் தொடங்கியது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை நீரால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 56.82 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 612 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 3023 மி.கன அடியாக உள்ளது.
இந்நிலையில் வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உபவடி நிலத்திற்கு குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள 1.68 டி.எம்.சி. தண்ணீரில் இன்று முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் 0.45 டி.எம்.சி.க்கு மிகாமல் தண்ணீரின் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து நீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை அணையில் இருந்து கூடுதல் பாசனத்துக்கான தண்ணீர் மற்றும் குடிநீருக்கு என 2219 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

அணையின் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் இரு புறங்களிலும் அடைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
தரைப்பாலத்தை கடந்து பூங்காவிற்கு செல்ல முடியாமல் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். இருந்த போதும் சிலர் வாகனங்கள் மூலம் பாலத்தை சுற்றி எதிர்புறம் சென்றனர்.
எனவே கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி நீர்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரித்துள்ளனர்.
அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மதுரை மாநகர் குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.15 அடியாக உள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த மாத தொடக்கத்தில் 65 அடியை எட்டியது.
முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு மழை அளவு படிப்படியாக குறையத் தொடங்கியது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை நீரால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 56.56 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 568 கன அடி தண்ணீர் வருகிறது. தற்போது மதுரை மாநகர் குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2978 மி.கன அடியாக உள்ளது.
இந்நிலையில் வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உபவடி நிலத்திற்கு குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள 1.68 டி.எம்.சி. தண்ணீரில் நாளை முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் 0.45 டி.எம்.சி.க்கு மிகாமல் தண்ணீரின் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து நீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.15 அடியாக உள்ளது. வரத்து 320 கன அடி. திறப்பு 755 கன அடி. இருப்பு 2658 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.20 அடியாக உள்ளது. வரத்து 54 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 399.31 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.83 அடி. வரத்து 11.5 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 94.34 மி.கன அடி. சண்முகாநதி அணை நீர்மட்டம் 50.40 அடி. வரத்து இல்லாத நிலையில் பாசன தேவைக்காக 15 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 72.78 அடியாக உள்ளது.
சோத்துப்பாறையில் 2.6, பெரியாறு அணையில் 1.4, தேக்கடி 3.8 மி.மீ. மழை அளவு பதிவானது.
- அணைக்கு 1183 கன அடி நீர் வருகிறது. 3381 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. பருவமழை கைகொடுத்த நிலையில் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 65 அடி வரை உயர்ந்தது.
அதனைத் தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் 1699 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும் தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக சரிந்து 58.79 அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு 1183 கன அடி நீர் வருகிறது. 3381 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது. 395 கன அடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 967 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2955 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறையின் அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 30 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
தேக்கடியில் மட்டும் 0.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. பருவமழை கைகொடுத்ததால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 65 அடி வரை எட்டியது. அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 58.79 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் 569 கன அடியில் இருந்து 1699 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு 1183 கனஅடி நீர் வருகிறது. 3381 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது. 395 கன அடிநீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 967 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 2955 மி. கன அடி இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் 30 கன அடி.
தேக்கடியில் மட்டும் 0.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.15 அடியாக உள்ளது.
- கும்பக்கரை அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் மூல வைகையாறு தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் நீர்வரத்து அதிகமாகக்கூடும் என நீர் வளத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, ஆற்றைக் கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். நீர்வரத்து அதிகரித்த நிலையில் வைகை அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 569 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 1171 கனஅடி நீர் வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 58.23 அடியாக உள்ளது. அணையில் 3273 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.15 அடியாக உள்ளது. 420 கனஅடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர்திறக்கப்படுகிறது. அணையில் 3054 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் பல நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 30 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வட்டக்கானல், வெள்ளக்கவி ஆகிய இடங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்றும் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு குறையாமல் இருப்பதால் அருவி பகுதிக்கு செல்ல தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதனால் கும்பக்கரை அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.
வீரபாண்டி 2.8, உத்தமபாளையம் 1.6, கூடலூர் 2.2, பெரியாறு அணை 0.6, தேக்கடி 1.4, சண்முகாநதி 1.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 57.97 அடியாக உள்ளது.
- வரத்து 1171 கன அடியாகவும், இருப்பு 3223 மி.கன அடியாகவும் உள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து பூர்வீக பாசன பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களின் தேவைக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு வைகை அணையில் இருந்து 3 கட்டங்களாக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி முதல் கட்டமாக கடந்த 10-ந் தேதி ராமநாதபுரம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த 9 நாட்களில் 1830 மி.கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை மாவட்ட பாசனத்திற்காக இன்று காலை முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று மாலை முதல் குடிநீருக்காக மட்டும் 69 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 569 கன அடியாக வெளியேற்றப்படுகிறது. 71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 57.97 அடியாக உள்ளது. வரத்து 1171 கன அடியாகவும், இருப்பு 3223 மி.கன அடியாகவும் உள்ளது.
இன்று முதல் 10 நாட்களுக்கு இந்த தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தேனி, மதுரை மாவட்டத்தில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 3-ம் கட்டமாக சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.40 அடியாக உள்ளது. வரத்து 463 கன அடி. திறப்பு 1033 கன அடி. இருப்பு 3103 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடி. வரத்து மற்றும் திறப்பு 100 கன அடி. இருப்பு 421.14 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியில் நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் 34.29 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.
- தமிழக பகுதிக்கு 1100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதிக்கு தேனி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
வார விடுமுறை என்பதால் ஏராளமானோர் மேகமலை அருவியில் உற்சாகமாக குளித்துக் கொண்டு இருந்தனர். நேற்று காலை முதலே மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் திடீரென கன மழை பெய்ததால் மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனை கண்காணித்த வனத்துறையினர் உடனடியாக அருவி பகுதிக்கு சென்று அங்கு குளித்துக் கொண்டு இருந்த சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து அவசர அவசரமாக வெளியேற்றினர்.
இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் அருவி பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
நீர் வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 59.28 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 1349 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 3199 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
3472 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.10 அடியாக உள்ளது. 763 கன அடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 3242 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. 77 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 64.34 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
ஆண்டிபட்டி 46, அரண்மனைபுதூர் 8, வீரபாண்டி 8.4, பெரியகுளம் 4, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 5.2, வைகை அணை 12.2, போடி 0.4, உத்தமபாளையம் 4.4, கூடலூர் 2, பெரியாறு அணை 0.4, தேக்கடி 7.2, சண்முகாநதி 5.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 3699 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.40 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது.
பூர்வீக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. 65 அடி வரை உயர்ந்த நீர் மட்டம் தற்போது 61.12 அடியாக குறைந்துள்ளது. மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் அணைக்கு நீர்வரத்து 848 கன அடியில் இருந்து 1156 கன அடியாக உயர்ந்துள்ளது.
மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 3699 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மழை தொடரும் என்ற நம்பிக்கையில் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.40 அடியாக உள்ளது. அணைக்கு 534 கன அடி நீர் வருகிற நிலையில் 1105 கனஅடி நீர் திற்கப்படுகிறது. 3301 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.55 அடியாக உள்ளது. 65 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியில் நீடிக்கிறது. வரத்தும், திறப்பும் 34.29 கன அடி.
ஆண்டிபட்டி 4.2, அரண்மனைபுதூர் 0.6, பெரியகுளம் 12.4, சோத்துப்பாறை 5.2, வைகை அணை 1.4, உத்தமபாளையம் 0.8, கூடலூர் 3.6, பெரியாறு அணை 2.4, தேக்கடி 4.4, சண்முகாநதி அணை 4.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- அனைத்து வேலைகளையும் மாணவிகளை வைத்தே மேற்கொண்டு வருவதாக புகார் வந்துள்ளது.
- தங்களை அடித்து துன்புறுத்துவதாக மாணவிகள் 3 பேர் தேனி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி அருகே கோட்டூரில் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விடுதியை சேர்ந்த மாணவிகள் தங்களது வார்டன் தங்களை அடித்து துன்புறுத்துவதாக தேனி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர்.
விடுதியில் வார்டனாக இருக்கக்கூடிய சசிரேகா மற்றும் சமையலாளர் மாலதி ஆகிய இருவரும் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளை அடித்து துன்புறுத்தி விடுதியில் உள்ள அனைத்து வேலைகளையும் மாணவிகளை வைத்தே மேற்கொண்டு வருவதாகவும், தரமற்ற உணவுகளை கொடுப்பதாகவும், இது குறித்து வெளியில் யாரிடமும் சொன்னால் தங்களை அடித்து துன்புறுத்துவதாக மாணவிகள் 3 பேர் தேனி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர்.
மேலும் விடுதியை சேர்ந்த மாணவிக்கு வாயில் பச்சை மிளகாய் வைத்து சாப்பிட சொல்லி துன்புறுத்தியதாகவும், இதனால் மாணவி ஒருவர் மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்றதாகவும் கூறினர். விடுதி வார்டன் மற்றும் சமையல் அலுவலர் மீது மாணவிகள் கூறிய புகார் குறித்து விசாரணை நடத்துமாறு பெற்றோர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.20 அடியாக உள்ளது.
- பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மட்டும் 31 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பூர்வீக பாசன நிலங்களுக்காக நேற்று முன்தினம் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு இன்று காலை முதல் 3151 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 65 அடியை கடந்த நிலையில் முழு கொள்ளளவை நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாகவும், மழை முற்றிலும் நின்று விட்ட காரணத்தாலும் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 63.65 அடியாக உள்ளது. நீர் வரத்து 1125 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 4337 மி.கன அடி.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.20 அடியாக உள்ளது. நீர் வரத்து 648 கன அடி. திறப்பு 1107 கன அடி. இருப்பு 3460 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 76 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 42.14 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.
சண்முகாநதி அணை நீர் மட்டம் 52.50 அடி. இருப்பு 79.57 மி.கன அடியாக உள்ளது. பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மட்டும் 31 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் மழை இல்லை.
- இவர்களது பழக்கம் தெரியவரவே கணவர் இருவரையும் கண்டித்துள்ளார்.
- இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி ரேசன் கடை தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 30). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அவனிகா (21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களது வீட்டுக்கு எதிரில் வசிக்கும் ராம்குமார் (24) என்பவருக்கும் அவனிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு வந்தது. ராம்குமார் மற்றும் கருப்பையா இருவரும் நண்பர்கள் என்பதால் இந்த பழக்கம் வெளியில் தெரியவில்லை. அதன் பின்னர் கணவர் வீட்டை விட்டு சென்ற போது ராம்குமார் சென்று வந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர்.
பின்னர் இவர்களது பழக்கம் குறித்து கணவர் கருப்பையாவுக்கும் தெரியவரவே அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.
நேற்று மாலை வீட்டில் அவனிகா மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் ராம்குமார் வீட்டுக்குள் புகுந்தார். இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வெளிப்புறமாக கதவை பூட்டி விட்டனர்.
இதனை அறிந்த ராம்குமார் மற்றும் அவனிகா அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ராம்குமார் சத்தம் போட்டுதான் இனிமேல் இதுபோல் நடந்து கொள்ளமாட்டேன் என தெரிவிக்கவே பொதுமக்கள் கதவை திறந்து விட்டனர். அவர் சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த அவனிகா தனது கள்ளத்தொடர்பு ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டதே என வேதனையடைந்தார். இந்த அவமானத்தால் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சின்னமனூர் போலீசாருக்கு அவரது தாயார் நவநீதா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.






