என் மலர்
தமிழ்நாடு

வைகை அணையில் இருந்து திறக்கும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.20 அடியாக உள்ளது.
- பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மட்டும் 31 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பூர்வீக பாசன நிலங்களுக்காக நேற்று முன்தினம் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு இன்று காலை முதல் 3151 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 65 அடியை கடந்த நிலையில் முழு கொள்ளளவை நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாகவும், மழை முற்றிலும் நின்று விட்ட காரணத்தாலும் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 63.65 அடியாக உள்ளது. நீர் வரத்து 1125 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 4337 மி.கன அடி.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.20 அடியாக உள்ளது. நீர் வரத்து 648 கன அடி. திறப்பு 1107 கன அடி. இருப்பு 3460 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 76 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 42.14 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.
சண்முகாநதி அணை நீர் மட்டம் 52.50 அடி. இருப்பு 79.57 மி.கன அடியாக உள்ளது. பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மட்டும் 31 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் மழை இல்லை.