என் மலர்
சிவகங்கை
கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
பள்ளத்தூர் போலீஸ் சரகம் வட குடியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 65).இவர் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு கல்லுக்கால்களை ஊன்றியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்மோகன் ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்தியபோது கருப்பையா தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், பள்ளத்தூர் போலீசார் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.
ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று பெல் நிறுவனத்தின் நுழைவு வாயில் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று பெல் நிறுவனத்தின் நுழைவு வாயில் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஏபி ஸ்டாப் யூனியன் பொதுச்செயலாளர் பாலாஜி, எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், இஜிடியூ.ஐஎன்டியூசி துணை தலைவர் மோகன் குமார் ஆகியோர் மற்றும் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் உண்ணாவிரத போட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய போனஸ் வழங்காமலும், பெல் நிறுவனத்தின் நிதி நிலைமை மற்றும் வளர்ச்சி குறித்து தொழிற்சங்க தலைவர்களுடன் விவாதிக்க ஜே.சி.எம் ஐ உடனடியாக கூட்ட வலியுறுத்தி போராட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று பெல் நிறுவனத்தின் நுழைவு வாயில் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஏபி ஸ்டாப் யூனியன் பொதுச்செயலாளர் பாலாஜி, எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், இஜிடியூ.ஐஎன்டியூசி துணை தலைவர் மோகன் குமார் ஆகியோர் மற்றும் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் உண்ணாவிரத போட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய போனஸ் வழங்காமலும், பெல் நிறுவனத்தின் நிதி நிலைமை மற்றும் வளர்ச்சி குறித்து தொழிற்சங்க தலைவர்களுடன் விவாதிக்க ஜே.சி.எம் ஐ உடனடியாக கூட்ட வலியுறுத்தி போராட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை அருகே அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலியான சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
சிவகங்கை மாவட்டம் இளமனூர் கிராமத்தை சேர்ந்த சித்திரவேல் மகன் சுரேஷ் (வயது30). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் சாலைகிராமம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் பணிமுடிந்து திருவேங்கடம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த இளையான்குடி போலீசார், அவரது உடலை பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து பற்றி இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் இளமனூர் கிராமத்தை சேர்ந்த சித்திரவேல் மகன் சுரேஷ் (வயது30). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் சாலைகிராமம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் பணிமுடிந்து திருவேங்கடம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த இளையான்குடி போலீசார், அவரது உடலை பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து பற்றி இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மகான்களின் தியாகத்தை அடிப்படையாக கொண்டு, நாம் நவீன உலகத்தை நோக்கி செல்ல வேண்டும். நாம் அவ்வாறு செல்லும்போது, நமது பழமையை மறக்கக்கூடாது.
பெங்களூரு :
உலக புத்த மத சங்கம் மற்றும் நாகசேனா புத்த விஹார் ஆகியவை சார்பில் 72-வது அரசியல் அமைப்பு சட்ட தினத்தையொட்டி தேசிய புத்த மத மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
புத்தர் எனக்கு பிடித்தமானவர். புத்தர், பசவண்ணர், அம்பேத்கர், மகாவீர் போன்றவர்கள் பெரிய சாதனையாளர்கள். காலம் அவர்களை அழைத்து சென்றுவிட்டது. அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் புத்தர் சிலையை நிறுவியுள்ளன. அமைதி, சாதனை மிக முக்கியம். தியாக வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துள்ளனர்.
அத்தகைய மகான்களின் தியாகத்தை அடிப்படையாக கொண்டு, நாம் நவீன உலகத்தை நோக்கி செல்ல வேண்டும். நாம் அவ்வாறு செல்லும்போது, நமது பழமையை மறக்கக்கூடாது. அரசியல் சாசனத்தை பாதுகாப்போம். வாழ்க்கையை கட்டமைப்போம். நாட்டை வளர்ப்போம் என்று சபதம் எடுத்துக்கொள்வோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
உலக புத்த மத சங்கம் மற்றும் நாகசேனா புத்த விஹார் ஆகியவை சார்பில் 72-வது அரசியல் அமைப்பு சட்ட தினத்தையொட்டி தேசிய புத்த மத மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
புத்தர் எனக்கு பிடித்தமானவர். புத்தர், பசவண்ணர், அம்பேத்கர், மகாவீர் போன்றவர்கள் பெரிய சாதனையாளர்கள். காலம் அவர்களை அழைத்து சென்றுவிட்டது. அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் புத்தர் சிலையை நிறுவியுள்ளன. அமைதி, சாதனை மிக முக்கியம். தியாக வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துள்ளனர்.
அத்தகைய மகான்களின் தியாகத்தை அடிப்படையாக கொண்டு, நாம் நவீன உலகத்தை நோக்கி செல்ல வேண்டும். நாம் அவ்வாறு செல்லும்போது, நமது பழமையை மறக்கக்கூடாது. அரசியல் சாசனத்தை பாதுகாப்போம். வாழ்க்கையை கட்டமைப்போம். நாட்டை வளர்ப்போம் என்று சபதம் எடுத்துக்கொள்வோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தாக்கி பணம், நகைகளை வழிப்பறி செய்த 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது48). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 7-ந்தேதி காளையார் கோவில் பகுதியில் பணம் வசூல்செய்து விட்டு கருப்புராஜா (28) என்பவருடன் சிவகங்கைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிவந்தார்.
அவர்கள் நாட்டரசன்கோட்டை அருகே உள்ள கண்டனி பட்டி அருகில் வரும்போது ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ.50ஆயிரம், தங்க நகை, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றது.
இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி தலைமையில் காளையார் கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தலைமை காவலர்கள் கண்ணன், ஸ்ரீராஜ் கண்ணன், நாகபிரபு, கார்மேக கண்ணன் உள்ளிட்டவர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் சிவகங்கை சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சபரிதாசன் உதவியுடன் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட கும்பல் இதில் ஈடுபட்டது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பரமக்குடி, முத்தாலம்மன் கோவில் படித்துரையை சேர்ந்த, முத்துராசு தூக்குதுரை (வயது24), திருப்பத்தூரை அடுத்த கருப்பூர் கிராமத்தை சேர்ந்த மவுன்டன் என்ற மலைச்சாமி (28), மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த ஏ.கோவில்பட்டியை சேர்ந்த சத்யபிரபு (26), காளையார்கோவிலை அடுத்த கிழக்கு ஒத்தவீடுபகுதியை சேர்ந்த பாலா என்ற பாலமுருகன் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இருசக்கர வாகனம், ஆயுதம் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகங்கையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது48). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 7-ந்தேதி காளையார் கோவில் பகுதியில் பணம் வசூல்செய்து விட்டு கருப்புராஜா (28) என்பவருடன் சிவகங்கைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிவந்தார்.
அவர்கள் நாட்டரசன்கோட்டை அருகே உள்ள கண்டனி பட்டி அருகில் வரும்போது ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ.50ஆயிரம், தங்க நகை, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றது.
இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி தலைமையில் காளையார் கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தலைமை காவலர்கள் கண்ணன், ஸ்ரீராஜ் கண்ணன், நாகபிரபு, கார்மேக கண்ணன் உள்ளிட்டவர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் சிவகங்கை சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சபரிதாசன் உதவியுடன் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட கும்பல் இதில் ஈடுபட்டது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பரமக்குடி, முத்தாலம்மன் கோவில் படித்துரையை சேர்ந்த, முத்துராசு தூக்குதுரை (வயது24), திருப்பத்தூரை அடுத்த கருப்பூர் கிராமத்தை சேர்ந்த மவுன்டன் என்ற மலைச்சாமி (28), மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த ஏ.கோவில்பட்டியை சேர்ந்த சத்யபிரபு (26), காளையார்கோவிலை அடுத்த கிழக்கு ஒத்தவீடுபகுதியை சேர்ந்த பாலா என்ற பாலமுருகன் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இருசக்கர வாகனம், ஆயுதம் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கருங்கலில் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் ரூ. 20 ஆயிரம் பணம், செல்போன் திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்கல்:
நட்டாலம் அருகே உள்ள இடவிளாகத்தை சேர்ந்தவர் சிங். இவரது மனைவி டாளி (வயது31).
நேற்று இவர் கருங்கலில் உள்ள சந்தையில் பொருட்கள் வாங்கிவிட்டு பஸ் நிலையம் வந்தார். பஸ் நிலையத்தில் வைத்து அவரது தாயார் கன்னிமரியாள் கொடுத்த ரூ.20 ஆயிரத்தை பர்சில் வைத்து பர்ஸை பிக் ஷாப்பரில் போட்டுள்ளார்.
பின்னர் பஸ் ஏறிச்சென்று பஸ்சுக்குள் வைத்து பர்சை பார்த்தபோது பர்ஸ் திருட்டு போய் இருந்தது தெரிந்தது. பர்சுக்குள் பணம் ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ஏ.டி.எம். கார்டு மற்றும் வீட்டு சாவியும் இருந்துள்ளது.
இதுகுறித்து டாளி கருங்கல் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து பர்சை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.
கிருதுமால் நதியில் அதிக தண்ணீர் செல்வதால் 16 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
திருப்புவனம்:
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது பழையனூர். இதன் அருகே கிருதுமால் நதி தரைப்பாலம் செல்கிறது. இந்த தரைப்பாலம் வழியாக வல்லாரேந்தல், ரெட்டகுளம், ஆலாத்தூர், தச்சனேந்தல், தாமரைகுளம், அழகாபுரி, ஓடாத்தூர், எஸ்.வாகைகுளம், பிரான்குளம், சிறுவனூர், அருணகிரி, நன்றுகாட்சி, உளுத்திமடை, எழுவணி, சேந்தநதி, குண்டுகுளம் ஆகிய 16 கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த தரைப்பாலம் வழியாக பழையனூருக்கு வந்து பொருட்கள் வாங்கி செல்வார்கள்.
மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி பழையனூரில் உள்ளதால் மாணவ-மாணவிகள் கல்வி கற்கவும், நோயாளிகள் வைத்தியம் பார்க்கவும் வரவேண்டிய நிலை உள்ளது. 16 கிராமங்களில் சில கிராமங்கள் சிவகங்கை மாவட்டத்திலும் பல கிராமங்கள் விருதுநகர் மாவட்டத்திலும் உள்ளது. மேலும் இப்பகுதி கிராம மக்கள், மதுரை வந்து செல்ல வேண்டுமானால் பழையனூர் வந்து பிறகு திருப்புவனம் வழியாக செல்ல வேண்டும்.
பழையனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தரைப்பாலம் வழியாக போக்குவரத்து நடைபெறும் காலங்களில் வருவார்கள். இந்த கிருதுமால் நதி தரைப்பாலத்தில் தண்ணீர் அதிகம் வந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் மாணவ-மாணவிகள் நிலை மோசமடைந்து விடும். காரணம் இடுப்பளவு தண்ணீரில் சுமார் 200 அடி நீளத்திற்கு நடந்து வரவேண்டும். பள்ளி சீருடைகள் நனைந்து விடுகின்றன. சிலசமயம் புத்தகப் பைகள் நனைந்து விடுகிறது. நனைந்த சீருடையுடன் தான் வகுப்பறை செல்லவேண்டிய நிலை. இதனால் மாணவ-மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் நோயாளிகள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து வந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் பார்த்து விட்டு பிறகு தண்ணீரில் நடந்து வீட்டுக்கு செல்லவேண்டும். இதனால் நோயின் தன்மை அதிகரிக்கின்ற சூழ்நிலை உருவாகிறது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்து போக்குவரத்து தடைபட்டால் நிலைமை மோசமாக இருக்கும். மேலும் தரைப்பாலம் வழியாக நடந்து செல்லும் போது தண்ணீர் கூடுதலாக வந்துவிட்டால் எங்களை இழுத்துச் சென்றுவிடும்.
தரைமட்ட பாலம் வேண்டாம். உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். அதிகாரிகள் கடந்த வருடம் தரைமட்ட பாலம் புதிதாக அமைத்தனர். அப்போது எதிர்ப்பு தெரிவித்தோம். இந்தப் தரைப்பாலத்தில் கடந்த 4 நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் கூடுதலாக வருவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலம் அளவு தெரிவதற்காக மக்கள் கம்பு ஊன்றியும் நீளமாக கயிறு கட்டியும் சிவப்பு துணியை கட்டி தொங்க விட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து கிருதுமால் நதியின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்றனர்.
பெரம்பலூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தவர் ரவிச்சந்திரன்(வயது 55). லாடபுரத்தை சேர்ந்த இவர் தற்போது பெரம்பலூரில் வடக்கு மாதவி சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று மாலை ரவிச்சந்திரன் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான லாடபுரத்திற்கு சென்றார்.
குரும்பலூரை கடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக ரவிச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி செஞ்சை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் தெற்கு போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்து கஞ்சா வாங்கிக் கொண்டு வந்த சத்யா நகரைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 21) என்பவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவன் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியில் விற்றுக்கொண்டிருந்த சேகர் (வயது 64) என்பவரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான கணக்கெடுப்பை மத்திய அரசு சாதி அடிப்படையில் எடுக்க வேண்டும் என ஆந்திர அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசு மக்கள் தொகை கண்கெடுப்பை தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பிறந்த இடம், மாநிலம், பெயர், ஆதார் எண் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பிடித்துள்ளன.
பல்வேறு தரப்பில் இருந்து சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து முறையிடப்பட்டது. அப்போது மத்திய அரசு சார்பில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான கணக்கெடுப்பை சாதி அடிப்படையில் எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஆட்டோ பதிவு எண்ணை குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்து அபராதம் கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
மானாமதுரை:
மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் முருகன். இவர் மானாமதுரை பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகின்றார். கடந்த 17-ந் தேதி காலை 11.10 மணிக்கு விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதிக்கு சவாரிக்கு சென்று உள்ளார். அதன் பின்னர் 2 நாட்கள் கழித்து அவருடைய செல்போனுக்கு இ-சலான் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதைபார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஆட்டோ பதிவு எண்ணை குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்து அபராதம் கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஆட்டோ டிரைவர் முருகன் கூறிய தாவது:- சிவகங்கை மாவட்டத்தில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் விசாரிக்காமல், சோதனையிடாமல் அபராதம் விதித்துவருகின்றனர். இதனால் தான் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆட்டோ ஓட்டும் போது தலைக்கவசம் அணியவில்லை என்று அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
திருவாலி பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதை வனத்துறையினர் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திருவெண்காடு:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாலி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாளர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுற்றித்திரியும் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குரங்குகள் நாள்தோறும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்து வருவதாகவும் பொதுமக்கள் கூறுகிறார்கள். இதுதொடர்பாக நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து, ஊராட்சி தலைவர் தாமரைச்செல்வி திருமாறனை சந்தித்து குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சீர்காழியில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.






