என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் ரூ. 20 ஆயிரம் பணம், செல்போன் திருட்டு
Byமாலை மலர்25 Nov 2021 10:07 AM GMT (Updated: 25 Nov 2021 10:07 AM GMT)
கருங்கலில் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் ரூ. 20 ஆயிரம் பணம், செல்போன் திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்கல்:
நட்டாலம் அருகே உள்ள இடவிளாகத்தை சேர்ந்தவர் சிங். இவரது மனைவி டாளி (வயது31).
நேற்று இவர் கருங்கலில் உள்ள சந்தையில் பொருட்கள் வாங்கிவிட்டு பஸ் நிலையம் வந்தார். பஸ் நிலையத்தில் வைத்து அவரது தாயார் கன்னிமரியாள் கொடுத்த ரூ.20 ஆயிரத்தை பர்சில் வைத்து பர்ஸை பிக் ஷாப்பரில் போட்டுள்ளார்.
பின்னர் பஸ் ஏறிச்சென்று பஸ்சுக்குள் வைத்து பர்சை பார்த்தபோது பர்ஸ் திருட்டு போய் இருந்தது தெரிந்தது. பர்சுக்குள் பணம் ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ஏ.டி.எம். கார்டு மற்றும் வீட்டு சாவியும் இருந்துள்ளது.
இதுகுறித்து டாளி கருங்கல் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து பர்சை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X