search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karungal robbery"

    கருங்கலில் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் ரூ. 20 ஆயிரம் பணம், செல்போன் திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருங்கல்:

    நட்டாலம் அருகே உள்ள இடவிளாகத்தை சேர்ந்தவர் சிங். இவரது மனைவி டாளி (வயது31).

    நேற்று இவர் கருங்கலில் உள்ள சந்தையில் பொருட்கள் வாங்கிவிட்டு பஸ் நிலையம் வந்தார். பஸ் நிலையத்தில் வைத்து அவரது தாயார் கன்னிமரியாள் கொடுத்த ரூ.20 ஆயிரத்தை பர்சில் வைத்து பர்ஸை பிக் ஷாப்பரில் போட்டுள்ளார்.

    பின்னர் பஸ் ஏறிச்சென்று பஸ்சுக்குள் வைத்து பர்சை பார்த்தபோது பர்ஸ் திருட்டு போய் இருந்தது தெரிந்தது. பர்சுக்குள் பணம் ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ஏ.டி.எம். கார்டு மற்றும் வீட்டு சாவியும் இருந்துள்ளது.

    இதுகுறித்து டாளி கருங்கல் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து பர்சை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    ×