search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் விபத்து
    X
    பெரம்பலூர் விபத்து

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலி

    பெரம்பலூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தவர் ரவிச்சந்திரன்(வயது 55). லாடபுரத்தை சேர்ந்த இவர் தற்போது பெரம்பலூரில் வடக்கு மாதவி சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று மாலை ரவிச்சந்திரன் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான லாடபுரத்திற்கு சென்றார். 

    குரும்பலூரை கடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக ரவிச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×